Thursday, July 30, 2009

சந்தன கடத்தல் வீரப்பனின் கோரிக்கை நிறைவேற்றுகிறது கர்நாடகா

வீரப்பனுக்க்கு இருக்கும் தமிழ் பற்று கருணாநிதிக்கோ, வீரமணிக்கோ இல்லாதது வேதனையே. இன்னும் 3 லட்சம் தமிழர்கள் அகதி முகாம்களில் சிறைகைதிகளாக இருக்கும் போதும் அது பற்றி வாயே துறக்காத இவர்களை என்ன சொல்வது. மத்திய அரசுக்கு நான் அடிமை(கருணாநிதி), மாநில அரசுக்கு நான் அடிமை(வீரமணி), என் சொத்துக்களுக்கு நாங்கள் அடிமைகள்(இருவரும்). அதனை காப்பாற்ற யாருக்க்கும் அடிமையாக இருக்க நாங்கள் தயார்.

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9-ல் பெங்களூரில் முழு அடைப்பு

திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி "பெங்களூர் பந்த்" நடத்தப்படும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கன்னட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடந்தது. கன்னட சலுவாளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கன்னட சேனை, கர்நாடக ரக்ஷணாவேதிகே (பிரவீண்ஷெட்டி பிரிவு), மற்றும் கன்னட வேதிகே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களூர் மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய நகரங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கும்படியோ, சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவுங்கள் என்றோ தமிழக முதல்வர் கருணாநிதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் எடியூரப்பா தானாகவே முன்வந்து திருவள்ளுவர் சிலையைத் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரியத் திட்டம் உள்ளது. சர்வக்ஞர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சென்னையில் சர்வக்ஞர் சிலை நிறுவப்பட்டால் காவிரிப் பிரச்னை ஏற்படும்போது அச்சிலையை தமிழர்கள் அடித்து உடைக்கலாம், கல்வீசித் தாக்கலாம். இவ்வாறு ஏற்பட்டால் அது சர்வக்ஞருக்கு அவமதிப்பு ஏற்படுத்துவது ஆகும். அதற்கு நாம் ஏன் அவகாசமளிக்க வேண்டும்?

சர்வக்ஞர் சிலையை நிறுவ அரசு விரும்பினால் பெங்களூரில் விதானசெதா முன்னால் நிறுவட்டுமே? என்றார்.

பிரபாகர் ரெட்டி (கன்னட வேதிகே தலைவர்): சந்தனக் கடத்தல் வீரப்பனால் மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டிருந்தபோது, அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறப்பதன் மூலம் வீரப்பன் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முற்பட்டுள்ளது.

இது துரதிருஷ்டவமானது. திருவள்ளுவர் சிலையை திறக்க ஆர்வம் காட்டும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் வீரப்பனுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் என்றார்.

சிவராமே கெடா (கர்நாடக ரக்ஷணா வேதிகே): பெங்களூரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். மாநகராட்சி தேர்தலில் அவர்களது வாக்குகளை பெறும் நோக்கத்தோடே அரசு இப்போது திருவள்ளுவர் சிலையைத் திறக்க முன்வந்துள்ளது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதால் தமிழர்கள், கன்னடர்களிடையே உள்ள உறவு மேலும் வலுப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது கேலிக்குரியது.

ஒகேனக்கல் பிரச்னை, கன்னடத்துக்கு செம்மொழி வழங்குவதை எதிர்த்து உள்ள வழக்கு ஆகியவை இருக்கும்போது இது எப்படி சாத்தியம் என்றார்

0 Comments: