Thursday, December 25, 2008

பணம் கொடுத்து ஓட்டுவாங்குதல் : கர்நாடகம் முதலிடம்

டெல்லியைச் சேர்ந்த சி.எம்.எஸ். என்ற ஊடக ஆய்வு மையம் தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் ஆபத்தான போக்கு என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் பணத்திற்காக ஓட்டை விற்பவர்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடம் வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

கர்நாடகத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பீகார், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஓட்டை விலை பேசுபவர்கள் குறைவாகவே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 Comments: