Friday, December 25, 2009

இன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தாக்கப்பட்டார்

A WOMAN described as "unstable" jumped over a barricade then attacked and knocked Pope Benedict to the floor at the start of Christmas Eve mass at the Vatican.

http://www.thesun.co.uk/sol/homepage/video/article300101.ece?vxSiteId=0bc72527-aa8e-4487-a5e8-94aae448c9dd&vxChannel=Sky%20News&vxClipId=1347_SUN41173&vxBitrate=300

Wednesday, December 16, 2009

தமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான்: உறுதிப்படுத்துகிறது டைம்ஸ் பத்திரிகை

ரத்த வெறி பிடித்த சிங்கள இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்ததை அம்பலபப்டுத்தியது சேனல் 4 தொலைக்காட்சி.

இந்த வீடியோ காட்சிகள் உண்மை இல்லை; இது தயாரிக்கப்பட்டது என்று இலங்கை அரசு நாடகம் ஆடியது. இலங்கை அரசு ஆடியது நாடகம்தான் என்று என்று டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ’டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விசயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

Monday, December 14, 2009

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 99 வீதமான வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"

பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.

தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,

31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,

மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 99வீதமான பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் "தமிழீழமே" இறுதித் தீர்வென மக்களாணை தெரிவித்துள்ளனர். இன்னமும் அஞ்சல் மூலமான வாக்குகளின் முடிவுகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.

இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை நகர ரீதியாக பார்வையிட இங்கே அழுத்தவும்.

Sunday, December 13, 2009

தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: யாருக்கும் வெட்கமில்லை








'தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படையால் சுடப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும்,அவர்களது படகுகள், வலைகள் போன்ற உடமைகள் சேதப்படுத்தப்படுவதும், அபகரிக்கப்படுவதும் வானிலைச் செய்திபோல் அன்றாடம் நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன. நமது எல்லையில் ஊடுருவி, தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைவிட அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படை வசம் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் அவலம் இது. இச் செய்திகளை அடிக்கடி பார்த்து நாமும் மரத்துப் போய்விட்டோம். மாநில அரசு இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும், மத்திய அரசு இலங்கை அரசிடம் புகார் செய்து விட்டதாக அறிக்கை வெளியிடுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இந்த அரசுகளுக்கும் இப்பிரச்னை மரத்துப்போய்விட்டது. ஆனால், தமிழக மீனவர்களின் துயரம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது.

இக்கொடுமைக்கு முடிவேயில்லையா? 1974-ல் அன்றைய மத்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்டது. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த மாநில தி.மு.க.வின் அரசு இந்தத் தாரைவார்ப்பிற்கு உடன்பட்டது. அன்றிலிருந்து மீனவர் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசிடம் தரப்பட்டாலும், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவது, இளைப்பாறுவது போன்ற நடவடிக்கைகளை கச்சத்தீவில் தொடரலாம் என்று அன்றைய மாநில அரசு கூறியது, பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிட்டது.

இலங்கைக்குக் கச்சத்தீவை தாரைவார்க்கவேண்டிய அவசியம் என்ன என்பது இன்றைக்கும் புரியவில்லை. அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்பதும் புரியவில்லை. அத்தீவை இத்தனை ஆண்டுகளாய் இலங்கை அரசு எந்த வகையிலும் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை. அத்தீவுக்கு அருகில் செல்லும் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவதைத் தவிர, அத்தீவின் உரிமை எவ்வகையிலும் இலங்கை அரசுக்குப் பயன்படவில்லை. பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீவின் உரிமையைக் கோரிப் பெற்றது? ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகவும் கச்சத்தீவு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இருநாட்டுத் தமிழர்களும் கச்சத்தீவில் கூடி, தங்களது கலாசார ஒருமைப்பாட்டு விழாவை நடத்திவந்தனர். அத்தீவின் அருகில் உள்ள கடற்பகுதியில் விலைமதிப்புள்ள மீன் இனங்கள் அதிகமாகக் கிடைத்து வந்தன. இவ்விரு காரணங்களும் இலங்கை அரசின் கண்களை உறுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், இதே காரணங்களுக்காக இத்தீவின் உரிமையை விட்டுத் தர முடியாது என்று கூற, அன்றைய தி.மு.க. அரசுக்குத் தைரியம் இல்லை. இத்துணைக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசுக்குத் தரப்படுவதைக் கடுமையாக எதிர்த்தன. ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்தது. ஆனால் இந்த எதிர்ப்புக்களை எல்லாம் மீறி, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் மத்திய அரசின் முடிவில் மாநில தி.மு.க. அரசு உறுதியாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள கடல் எல்லை என்பது ஒரு கற்பனையான கோடு. இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல நேரங்களில் இந்த எல்லைக்கோட்டை தாண்டியுள்ளன. நவீன தொழில்நுட்பம் கொண்ட இவ்விரு படைகளால் கூட சரியாகக் கணிக்கமுடியாத எல்லைக்கோட்டை அப்பாவி மீனவர்களால் எப்படிக் கணிக்கமுடியும்? ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடற்பகுதி வெறும் 12 கடல் மைல்கள் நீளத்தைக் கொண்டது. இதில் ஒரு கிலோமீட்டர் முன்னே சென்றால் கூட, தமிழக மீனவர்கள் தங்களை அறியாமலேயே இலங்கைக் கடற்பகுதிக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அறியாமல் செய்யும் பிழைக்கு, அவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

கடலில் சென்று மீன் பிடிப்பதே ஓர் ஆபத்தான தொழில். தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படை மூலம் இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. சுனாமியால் சூறையாடப்பட்ட இம்மக்களின் மிச்சமீதி வாழ்வாதாரமும் இலங்கைக் கடற்படையால் கொள்ளையடிக்கப்படுகிறது. முன்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்குத் தேவையான பொருள்களை கடத்தினார்கள்; அதனால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது என்று இலங்கை அரசு கூறிவந்தது. ஆனால் அவர்கள் கூற்றுப்படியே, விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், தமிழக மீனவர்கள் மீதான கொடுமைகள் தொடர்வது ஏன்? இதற்கு எந்தப் பதிலையும் இலங்கை அரசிடமிருந்து நமது அரசுகளால் பெறமுடியவில்லை.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறும்போதும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு புகார் அனுப்புகிறது. அப்புகார்களின் மீது இலங்கை அரசின் பதில் என்ன?, இந்நிகழ்வுகள் திரும்ப நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - என்பது குறித்து நமக்கு எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் இந்திய அரசு புகார் கொடுத்த ஒரு சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மீண்டும் தமிழக அரசால் கடிதம் எழுதப்படுகிறது. மீண்டும் மத்திய அரசால் புகார் கொடுக்கப்படுகிறது. மீண்டும் இலங்கைக் கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடிதம் எழுதுபவர்களுக்கும் வெட்கம் இல்லை. புகார் கொடுக்கும் மத்திய அரசுக்கும் வெட்கம் இல்லை. அவ்வப்போது புலம்பும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் வெட்கம் இல்லை. மொத்தத்தில் யாருக்கும் வெட்கம் இல்லை.

இந்திய வம்சாவழியினர் வாழும் பிஜி, மாலத்தீவு போன்ற நாடுகளில் அவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது, கொதித்தெழும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது மட்டும் அசட்டையாக இருப்பது ஏன்? தமிழக மீனவர்கள் இந்தியப் பிரஜைகள் இல்லையா? அமெரிக்க நாட்டினர் வேற்று நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது, அமெரிக்கா நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது. ஆனால் இந்தியப் பிரஜைகளாகிய தமிழக மீனவர்கள் பல்லாண்டுகளாய் இலங்கைக் கடற்படையிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது, நமது மத்திய அரசு ஒப்புக்குப் புகார் தருவதோடு நிறுத்திக்கொள்வது ஏன்? இலங்கையின் கேந்திர தொழில்களில் கிட்டத்தட்ட 75% முதலீட்டை இந்திய பெருமுதலாளிகள் வைத்திருப்பது ஒரு காரணமா? இந்திய பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்க, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காவுகொடுக்கத் துணிந்துவிட்டதா? அதற்கு மாநில அரசு ஒத்து ஊதுகிறதா? எதற்கும் விடையில்லை.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவது என்று இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு முன்பு கூறப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்? இந்தியக் கடல் எல்லையை மீறி இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை பிடிக்கும் இலங்கைக் கடற்படை அவர்கள் மீதான நடவடிக்கையை எடுக்க, அவர்களை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைப்பதுதானே சரியாக இருக்கும். அவர்கள் எல்லையை மீறி எவ்வளவு தூரம் இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்தார்கள் என்று ஒவ்வோர் அத்துமீறல் குறித்தும் இலங்கை அரசு மத்திய அரசிடம் புகார் கொடுத்து வந்துள்ளதா? நம் கடற்பகுதியைத் தாண்டாது எச்சரிக்கையுடன் செயல்பட தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பயிற்சி வகுப்புகள் நடத்தியதா? அவ்வாறு அவர்கள் கடல் எல்லையை மீறும்போது இந்தியக் கடற்படையும், கோஸ்ட் கார்டும் அவர்களை எச்சரிக்க முடியாதா? கூட்டு ரோந்து மூலம் இரு நாட்டு கடற்படைகளும் இப்பிரச்னையைத் தீர்க்கமுடியாதா? மேற்படி எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு இது நாள்வரை மேற்கொள்ளாதது ஏன்? தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு சிரத்தை இல்லையா?

சமீபத்தில் 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடித்து செல்லப்பட்டபோது, ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் கொதித்தெழுந்தனர். இதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்காக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த அறிவித்தவுடன், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர் பிரச்னை குறித்து, இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசும்போது, தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் பேசியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 'இப்பிரச்னை குறித்து இலங்கை அரசிடம் நான் பேசுகிறேன்'- என்ற வாக்குறுதியை பிரதமரிடம் இருந்து பெறுவதில் எந்தப் பயனும் இல்லை. இது போன்ற வாக்குறுதிகள் ஏராளமாக ஏற்கெனவே தரப்பட்டுள்ளன. அவற்றால் பைசா பயன்இல்லை என்பது வரலாறு. இப்பிரச்னை, ஒட்டுமொத்தமாகத் தீர, வெறும் வாக்குறுதிகள் தேவையில்லை. மீண்டும் ஒருமுறை இக்கொடுமை நடக்காமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கைதான் தற்போதைய தேவை. மத்திய அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு தொடர்ந்து இக்கொடுமைகளைச் செய்து வருகிறது. தன்னை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற ஆணவப் போக்கை அது கடைப்பிடிக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் மத்திய அரசில் தி.மு.க. தொடர்வதில் அர்த்தமில்லை. 'பேராசை பிடித்த மீனவர்கள் சிலர் எல்லையை மீறி மீன் பிடிக்கச் செல்வதுதான் இப்பிரச்னைக்குக் காரணம்' என்ற பொருள்படும்படி, தமிழக முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். அப்படியே போனாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இலங்கை அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அப்படி என்றால், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் வந்தது இல்லையா? அப்படி வந்தவர்கள் மீது இந்தியக் கடற்படை என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களைப் பிடித்து இலங்கை அரசிடம்தானே ஒப்படைத்துள்ளது. இத்தகைய பொறுப்பு இலங்கைக் கடற்படைக்கு இல்லையா? தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி மீண்டும் ஒருமுறை வரக் கூடாது. இதுதான் இந்த விஷயத்தில் தமிழக மக்களின் ஒரே கோரிக்கை.

நிரந்தர தீர்வு என்ன?
"தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசினால் மட்டும் பாதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகளும்தான் காரணம். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மண்டபம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கடலோரப் பாதுகாப்புப்படையினரிடம் பதற்றத்துடன் சொன்னோம். ஆனால் பிரயோஜனமில்லை. அவர்கள் மத்திய அரசு செய்து வைத்த சிலைகளாகவே மாறி விட்டார்கள். மீனவர்களுக்கு எல்லைகள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சரியான தீர்வாக இருக்காது. இரு நாட்டு மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்பதே நிரந்தரத்தீர்வாக இருக்கும். பாரம்பரியமாக இரு நாட்டவர்களும் எங்கெங்கு மீன் பிடித்தார்களோ, அங்கேதான் இப்போதும் பிடிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? முன்பெல்லாம் முத்தரையர்களும், மீன்பரவர்களும் மட்டுமே மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் இன்றோ தேவர், செட்டியார், நாடார், பிராமணர்கள்கூட மீன்பிடித்தொழில் செய்து பிழைக்கும் காலமாக இருக்கிறது. உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட பதினெட்டு தமிழக மீனவர்களை அரை நிர்வாணத்துடன் நிற்க வைத்து கொடுமைப்படுத்தும் அராஜகமும் நடப்பதாக வேதனையான தகவல்கள் வெளியாகின்றன!" என்று கொதிப்பு அடங்காமல் கூறினார் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் கணபதி தேவர். -குமரகுரு










'

கலை
நன்றி தமிழக அரசியல் ...

Saturday, December 12, 2009

வேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு தமிழனின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரிகளுக்கே

மக்களே நம் முன் நல்லவன் போல் நடித்த விஜய், சில மாதங்களுக்கு முன் மேலும் பணம் சேர்த்து கொளவதற்க்காக, தமிழ் இனத்தினையே அழிக்க கங்கனம் கட்டி கொண்டிருக்கும் காங்கிரஸ், சோனியாவுடன் கை கோர்க்க சென்றான், அங்கு தலைவர் பதவி கிடைக்காததால் திரும்பி வந்து எனக்கு காங்கிரஸ் கொள்கைகள் பிடிக்கும் என்று சொல்லி அதன் கொள்கையான அனைத்து தமிழர்களையும் கொல்வதற்கு சம்மதம் தெரிவித்தான். அதுவே தனது விருப்பமாகவும் தெரிவித்தான்.

இன்று சன் பிக்சர்ஸ், விஜய் ஆண்டனி மற்றும் ரட்னே வுடன் சேர்ந்து நம்மிடமே பணம் பிடுங்க வருகிறான்.

வன்னி கை பற்றபட்ட போது சிங்களனை குதுகாலபடுத்த சிங்கள பாட்டின் மெட்டினை அப்படியே எடுத்து இதில் பயன்படுத்தி தமிழ் மக்களை மடையனாக்க நினைக்கிறான்.

இவன் படத்தை எந்த மானமுள்ள தமிழனும் பார்க்கும் முன் அங்கு வன்னியில் நடந்த அவலத்தினை ஒரு முறை நினைத்து பார்க்கவே தூண்டும்.

இந்த தமிழின எதிரிக்கு நாம் இந்த முறை கொடுக்கும் அடி பெரிய இடியாக இருக்க வேண்டும்.

Thursday, December 10, 2009

சீமானை கண்டும் ஒன்னுக்கு அடிக்கும் அம்பிகளும், தமிழின துரோகிகளும்

பிரபாகரன் போயிட்டார்ன்னு சொல்லியாவது தமிழ் மக்களின் கனவுகளை நசுக்கி விடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு இன்று சீமான் சிம்ம சொப்பனமாக தெரிவது வியப்பில்லை.

இவர் தமிழ் மக்களுக்கு பாடுபடுவது பிடிக்காமல், அம்பி முதல் ரோ வரை அனைத்து தில்லு முல்லுகளையும் பண்ணி பார்க்கிறது.

இனியும் தமிழனை எந்த அம்பிகளும், ரோ-க்களும் ஏமாற்ற முடியாது. அவரு தமிழனுக்காக பாடுபடுவது பொறுக்க முடியலை இந்த நாதாரி பயலுகளுக்கு.
அவர் மேலே களங்கம் கற்பிக்க என்னவெல்லாம் பேசறானுங்க. கொஞ்சம் சிந்தியுங்கடா தமிழன் தமிழனுக்கு குரல் கொடுக்கறான். இதுல எண்டா பொறாமை உங்களுக்கு.

Thursday, December 3, 2009

பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்

இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்
ஆவேசம்!

எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு
சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி
அது திரும்பும் என்றே தெரியாது.

சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ
நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.

விழாவில் தங்கர் பேசியது:

"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே
கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க
முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்
போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.

இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்
நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"

"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு
சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே
உட்கார்ந்திருந்தான்.

இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு
போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே
கிடையாது.

இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்
பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்
செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை
குனிகிறேன்…

அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி
உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.

நங்கூரம் இணையத்திலிருந்து

http://www.nankooram.com/thankar-bachan

முத்தமிழ்வேந்தன்
சென்னை

Tuesday, December 1, 2009

ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

மாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..

சராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..

ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?

எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?

நன்றி
http://siruthai.wordpress.com/2009/12/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

சீமான் கர்ஜனை! மிரன்

 

 



                        மிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும்.

போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்... வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர்.

கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த "மாவீரர் நாள்' நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற சீமான், இந்நிகழ்விற்கு முதல்நாள் டோரொண்டோவில் கனடிய தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்த "பிரபாகரன் பிறந்த நாள்' நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஈழத் தமிழர்களும் இளைஞர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.

விழாவில் பேசிய சீமான், தனக்கே உரிய வழக்கமான பாணியில் ஏக கர்ஜனை செய்ய... உடனடியாக அவரை இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி விட்டது கனடிய அரசு. இந்த சம்பவத் தால் ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

""இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வு, சர்வதேச நாடுகள் முழுமைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாவீரர் நாளில் ஈழ இளைஞர்களிடம் உருவாகும் தமிழீழ எழுச்சியை, அழிக்கத் திட்டமிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனது தூதரகம் மூலம் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்டது சிங்கள ராஜபக்சே அரசு.

அப்படிப்பட்ட ஒரு இணக்கப்பாட்டை கனடா அரசோடு இங்குள்ள சிங்கள தூதரக மும் போட்டுக் கொண்டது. ஏற்கனவே சிங்கள தூதரகத்திற்கும் கனடா அரசுக்கும் "நல்ல புரிதல்' உண்டு. அதன் அடிப்படையிலே, நிகழ்வு துவங்குவதற்கு முன்பே, கனடிய உளவுத்துறை யினர் மண்டபத்திற்கு வந்து கண்காணிக்கத் துவங்கினர். இதற்காக தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தனர். இங்குள்ள சிங்கள தூதரகம், இந்த அதிகாரியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

விழா துவங்கியதும் அந்த அதிகாரி சொல்ல சொல்ல ஒவ்வொரு நிகழ்வை யும் குறிப்பெடுத்தனர் உளவுத் துறையினர். சீமான் பேசிய பேச்சுக்களும் அவ்வாறே குறிப்பெடுக்கப்பட்டது. விழா முடிந்ததும் தனது அறைக்கு சென்றுவிட்டார் சீமான். அடுத்த சில மணி நேரங்களில் கனடா அரசு ஒரு முடிவை மேற்கொண்டு, அதிரடியாக சீமானை திருப்பி அனுப்பிவிட்டது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படியே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நினைக்கிறோம். மாவீரர் நாள் நிகழ் வில் சீமான் பேசுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை'' என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழ் இளைஞர்கள்.

அப்படி என்ன பேசினார் சீமான்?

""கனடாவிற்கு எதற்காக வந்தேன், தன்னிடம் பிரபாகரன் கட்டளையிட்டது என்ன, "நாம் தமிழர்' இயக்க செயல்பாடுகள், தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகம் என்பது குறித்தெல்லாம் உணர்ச்சி பொங்க பேசிய சீமான், ""புலிகளை ஒழித்து விட்டோம், போராட்டம் ஓய்ந்துவிட்டது, போர் நின்று விட்டது என்று நினைக்கிறான் ராஜபக்சே. உலகத்திலுள்ள தமிழர்கள் அத்தனைபேரையும் புலிகளாக மாற்றிவிட்டு... ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே. புலி என்றால் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சீமான் புலி. அவன் செத்தால் அவன் தம்பி புலி.

"சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்' என்பார் சோலை. அப்படி புலியானவர் களடா நாங்கள். அது தெரியாமல் போர் நின்றுவிட்டது, போராட்டம் ஓய்ந்து விட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றான். ஆனா அப்படி இல்லை. இனி என் தலைவன் (பிரபாகரன்) கையில் இல்லை போர். தம்பிகள் கைகளில் இருக்கிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டாயா? 100 சிங்கள பள்ளிகள் மீது குண்டு போட்டிருந் தோமேயானால்... தமிழச்சியின் மார் அறுக்கி றாயா? சிங்களச்சியின் மாரை அறுத்தெறிந்திருப் போமேயானால்... அவனுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும். சர்வதேச சமூகத்தாருக்கும் வலித்திருக்கும். இதையெல்லாம் செய்யாத என் தலைவன் பயங்கரவாதி. இதையெல்லாம் செய்த ராஜபக்சே ஜனநாயகவாதியா?

இனி மரபுவழி போர் கிடையாது. இனி எங்கள் நிலப்பரப்பிலும் (ஈழம்) சண்டை கிடை யாது. இலங்கை தலைநகர் கொழும்பில்தான் சண்டை. 1000 கரும்புலிகள் போதும். வாரத்திற்கு ஒரு குண்டு. ஒரு கரும்புலி சிதறினால் 1000 சிங்களவன் சிதற வேண்டும். தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பான் கரும்புலி. நாம் தனித்தனியாக சிறு நெருப்பாக சிதறிக் கிடந்தது போதும். ஒன்றிணைந்து ஒரு பெரு நெருப்பாக மாற வேண்டும். என் இழப்பு, சிங்களவனுக்கு 100 மடங்கு இழப்பு என்பது போல் நம் வெறி மாற வேண்டும். அவன் ஒரு வெட்டு என்றால் நாம் 100 வெட்டு வெட்ட வேண்டும் ஓய்ந்து விடக்கூடாது. விடுதலைப் போராட்டம் இனி நம் கையில்தான் இருக்கிறது. நம் வலிமையை பார்த்துதான் தலைவர் விரைவாக வருவதும் மெதுவாக வருவதும் இருக்கிறது. வேக வேகமாக களமாட தயாராகுங்கள் என் தம்பிகளே! விடுதலையை வென்றெடுக்க வேண்டும். தமிழீழம் உருவாகியே தீரும்'' என்றார் மிக ஆவேசமாக.

தனது 46 நிமிட ஆவேச பேச்சில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் தமிழகத்தையும் கடுமையாக விமர்சித்த சீமான், எது பயங்கரவாதம் என்பது குறித்தும் சர்வதேச சமூகத்திடம் நிறைய கேள்விகளை எழுப்பினார். சீமானின் ஆவேசத்தை கண்டு ஆர்ப்பரித்தது கனடாவில் உள்ள ஈழத் தமிழினம்.

""நிகழ்வில் பேசிய சீமானின் பேச்சுக்களை கனட அரசிடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட்டாக தர, அந்த ரிப்போர்ட்டின்படி "கனடா பார்டர்ஸ் சர்வீஸ் ஏஜென்சி' என்கிற இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட்டிடம் ஆக்ஷன் எடுக்கும்படி கேட்டுக் கொண்டது கனடா அரசாங்கம். அதன்பேரில் அதன் அதிகாரிகள், சீமான் தங்கியிருந்த அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கைக்குள் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும், சிங்களவர்கள் வாழவே கூடாது, ஒரு பள்ளிக்கூடம் மீது குண்டு விழுந்தால் 100 பள்ளிக்கூடம் மீது குண்டு வீசுவோம் என்று பேசியுள்ளீர்கள்.

எங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து இங்கு அசாதா ரணமான சூழலை உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், சீமானும் அவரது வழக்கறி ஞர் ஹதாயத் நஹாமியும் "30-ந்தேதி வரை விசா இருக்கிறது' என்று வாதாடினர். ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து திருப்பி அனுப்பினர்'' என்கின்றன கனடாவில் இருந்து கிடைக்கிற தகவல்கள்.

சீமானின் வழக்கறிஞரான ஹதாயத் நஹாமி, ""இமிக்ரேஷன் அதிகாரிகளின் நோக்கம், சீமானை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்பதிலேயே இருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக்கூடாது என்பதையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்'' என்கிறார்.

ஏர்போர்ட்டில் இருந்த சீமான், ""தமிழின விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது. அதனால் போராடும் எங்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவிட்டிருக்கிறது. ராஜபக்சே சகோ தரர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே, நான் பேசவிருந்த மாவீரர் நாள் உரையை தடுத்து நிறுத்தி கனடா அரசு என்னைத் திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் போராட்டம் தொடரும்'' என்றார் உறுதி தளராமல்.

-இளையசெல்வன்



 இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா?

                 னடாவில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சீமான் இனி வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற கவலை ஈழ ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் இமிகிரேஷன் அதிகாரி கள் சிலரிடம் சீமானுக்கான சிக்கல் குறித்து பேசினோம்.

""வெளிநாட்டில் இருந்து வருகின்ற நபர்களை இரண்டு வகையில் தடுப்பார்கள் இமிக் ரேஷன் அதிகாரிகள். ஒரு நபர் தான் செல்லும் நாட்டின் கரன்சியை போதுமான அளவு வைத்துக் கொள்ளாமல் இருத் தல், போதுமான ஆவணங்கள் இல்லாமை, முறைகேடான ஆவணங்கள் உள்ளிட்ட தவறு கள் இருப்பின் விமான நிலை யத்தில் இருந்தே அந்த நபரை திருப்பி அனுப்பி விடுவார்கள். இதற்கு "ரெஃப்யூஸ்டு என்ட்ரி' என்று பெயர்.

ஒரு நாட்டுக்குள் அனு மதிக்கப்பட்டு அதன்பிறகு நடைபெறும் தவறுகளுக்காக சம்பந்தப்பட்ட நபரை திருப்பி அனுப்புவதை "டீபோர்ட் என்ட்ரி' என்பார்கள்.

சீமானைப் பொறுத்தவரை அவர் கனடா நாட்டின் விசா பெற்று அங்கு சென்றிருக்கிறார். அங்கே நடந்த கூட்டத்தில் அவர் பேசியவை கனடா சட்டப்படி குற்றம் என்பதால் அவர் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற நேரங்களில் பொது வாக சம்பந்தப்பட்ட நாட்டின் இமிக்ரேஷன் அதிகாரிகள் வெளி யேற்ற உத்தரவை தனியாக தயா ரித்து, எந்த விமான நிறுவனம் குறிப் பிட்ட நபரை தங்கள் நாட் டுக்கு அழைத்து வந்ததோ அந்த விமான நிறுவனத்திடம் கொடுப்பார்கள். அந்த விமான நிறுவனம் சம்பந்தப் பட்ட நபரை எங்கிருந்து ஏற்றிய தோ அங்கேயே இறக்கிவிடும்.

அந்த வகையில் சீமான் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இங்கே இந்திய இமிகிரேஷன் அதிகாரி கள், "என்ன காரணத்துக்காக உங் களை கனடா அரசு திருப்பி அனுப் பியது?' என்று சீமானிடம் விசா ரித்து அவரை அனுமதிப்பார்கள்.

சீமான் பாஸ்போர்ட்டில் அவர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் கனடா அரசு தன்னுடைய ஆவணங் களில் சீமான் பெயரை பிளாக்லிஸ்ட் செய்துவிடும். எனவே கனடா வைத் தவிர மற்ற நாடுகளுக்கு செல்வதில் அதிகம் சிக்கல் இருக் காது'' என்றனர்.

-சகா

~~
Thanks : Nakheeran
~~
 

--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

Sunday, November 29, 2009

தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்

தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் – சரத்

எழுதியவர்வன்னியன் ON NOVEMBER 29, 2009
பிரிவு: செய்திகள்

sarath_fonseka_sivilஈழப்போர் 4 ஆம் கட்டத்தில் தமிழர்களைக் கொல்லும்படி தமக்கு பணிப்புரை விடுத்தது கோத்தபாயதான் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி என அறிவித்தல் வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் அவருடன் பேசியுள்ளதாக த ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

வன்னிப் போரின்போது நடந்த யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு அழைத்தபோது தப்பினால் போதும் என ஓடிவந்த சரத் இப்போது ஒரு பத்திரிகையாளரிடம் கூறுபவற்றை அங்கு அமெரிக்காவிடம் கூறியிருக்கலாமே. இதை சிறீலங்கா பத்திரிகையில் கூறி என்ன பயன். எல்லாப் பழியையும் கோத்தபாயமேல் போட்டு சரத் தான் தப்பிக்கப் பார்க்கிறார். சிங்கள இனத்தவரிடையே தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதற்காக சில கசப்பான உண்மைகள் சில விரைவில் வெளியாகும்.

என்ன தான் எதிரியாக இருந்தாலும் சரத் கோத்தபாயவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கவில்லை, ஆனால் சில தமிழர்களோ என்ன செய்தாவது அரசுடன் ஒடியிருக்கவும், மகிந்தவைக் கட்டி அணைக்கவும் காத்திருக்கின்றனர். எப்போது திருந்தப்போகிறார்கள் இவர்கள்

நன்றி மீனகம் http://www.meenagam.org/?p=17719

Saturday, November 28, 2009

மீன் பிடிதொழில் சட்டத்தை எதிர்த்து வீடுகளில் கறுப்புக்கொடி!

 
?ui=2&view=att&th=125255b49247db41&attid=0.1&disp=attd&realattid=ii_125255b49247db41&zw





தமிழனை அழிப்பதற்கான அனைத்து வேலைகளிலும் கருணாநிதியும், சோனியாவும் இறங்கி விட்டார்கள். இது குறித்து கருணாநிதி ஒரு வார்த்தை கூட பேசப்போவதில்லை. எவன் செத்தாலென்ன, எனக்கு தேவை சோனியா, காங்கிரஸ் என் குடும்பம், செத்து மடியுங்கடா மடதமிழன்களா என்று தமிழனை அழிக்க நினைக்கிறார்.
மத்திய அரசின் மீன் பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூர் மீனவர்கள் கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.  

கடலில் 12 நாடிகல் மைகளுக்குமேல் சென்று மீன் பிடிக்கக்கூடாது, மீனவர்கள் அனைவரும் மத்தியஅரசிடம் பதிவு செய்துகொண்டு அனுமதி பெற்று மீன்பிடிக்கவேண்டும், விதிமுறைகளை மீறினால் படகுபறிமுதல், 9லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவரவுள்ளது.  

மத்திய அரசின் இந்த சட்டமுன்வரைவுக்கு நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் திருந்செந்தூரில் உள்ளிட மீன்பிடிகிராமமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பலகட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

இன்று மீனவகிராமமான அமலிநகரில் திரண்ட மீனவ இளைஞர்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அக்கிராமத்தில் இருந்த அரசியல் கட்சிக்கொடிகள் அகற்றப்பட்டன. அனைத்துக்கட்சிக்கொடி கம்பங்களிலும் கறுப்புக்கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரித்தனர்.

நன்றி : http://www.thenaali.com/thenaali.aspx?N=4190


லாவண்யா
மும்பை


நாம் தமிழர் இயக்கதின வளர்ச்சி கண்டு தொடை நடுங்கும் கருணாநிதி, சோனியா

நாம் தமிழர் இயக்கத்திற்கு கலைஞர் மற்றும் இந்திய அரசால் கொடுக்கப்படும் அத்தனை கஷ்டங்களும் நமது வளர்ச்சிக்கே. அதன் வளர்ச்சி கண்டு பொறுக்காத இவர்கள் அதனால்தான் இவர்கள் மேல் வழக்கு போடுதல், சிறுபிள்ளை தனமாக கனடா அரசுக்கு சொல்லி சிண்டு முடிய பார்ப்பது என அனைத்து வேலைகளிலும் இறங்கியுள்ளது.

சீமானின் கரத்தினை வலுப்படுத்துவோம். இந்த தமிழின துரோகிகளின் முகத்திரையினை கிழிப்போம். காங்கிரசை குளிர்விப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் இந்த 80 வயது முதியவர், பதவி ஆசை பிடித்தவர், குடும்ப அரசியலை வளர்த்து திமுகவிற்கு என்றும் அழியாத கெட்ட பேரை ஏற்படுத்த நினைக்கும் கலைஞருக்கு சரியான பாடம் புகட்டுவோம்.

சோனியாவுக்கு பிடிக்குமானால் நடு ராத்திரியில் குளத்திலே இறங்கி கும்மாளம் போடுவார் போல.

பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பிரபாகரன் மற்றும் முக்கியத் தளபதிகளில் பாதுகாப்பாக வேறு ஒரு தளத்தில இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.piraba

சிங்கள ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையில் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் மற்றும் இலங்கை அரசு உலகை நம்ப வைத்தாலும், தமிழ் மக்களின் பெரும்பான்மையானோர் பிரபாகரனின் இருப்பு குறித்த நம்பிக்கை மாறாத மனநிலையில்தான் உள்ளனர். காரணம் பிரபாகரன் என்பவர் ஒரு இனத்தின் அடையாளமாக, குறியீடாகத் திகழ்வதுதான்.

மேலும் கடந்த மே 16-ம் தேதி வரை தலைவர் பிரபாகரன் களத்தில் நின்று போராடினாலும், பின்னர் இயக்கம் மற்றும் தமிழீழ போராட்டத்தின் நன்மை கருதி போர்க்களத்திலிருந்து வெளியேறினார் என போராளிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர். கரும்புலிகள் அணியுடன் பிரபாகரன் வெளியேறியது உண்மையே என இப்போதும் செய்திகள் வருகின்றன.

மேலும் தமிழர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் பிரபாகரன் தனது தளபதிகளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக தமிழீழ ஆதரவு தளங்களில் கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன.

அதேநேரம், இந்த மாவீரர் தினத்தில் அவர் வெளிப்படுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது என்றும், அவர் வெளிப்படுவதற்கான காலம், புறச் சூழல் இன்னும் அமையவில்லை என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம்-

இலங்கை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில துரோகப் புலிகளை வைத்து ஒரு பொய்யான மாவீரர் உரையைத் தயாரித்து, வரும் 27-ம் நாளன்று வாசித்துக் காட்டி, பிரபாகரன் இல்லை என்ற தங்கள் புனைவை நிலை நிறுத்த முயற்சிப்பதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வருகின்றன.

எனவே மாவீரர் உரை / அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் எதனையும் நம்ப வேண்டாம் என்றும் புலிகளின் தலைமைப் பீடமான பிரபாகரன் மூலம் வருவது ஒன்று மட்டுமே உண்மையான அறிக்கை என்றும் அதிர்வு உள்ளிட்ட தமிழர் தளங்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன

Friday, November 27, 2009

சிங்கள அரசினை அச்சுறுத்திய செந்தமிழன் சீமான் தாயகம் திரும்புகின்றார்.

தாயக விடுதலைக்காகப் போராடிய தமிழர்களை நினைவு கூறும் வண்ணம் உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் கனடா சென்றிருந்தார்.
 
மாவீரர் தினத்திற்கு முந்தைய தினமான 25-11-2009 அன்று கனடாவின் இளையோர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு அங்கு குழுமியிருந்த தமிழர்களிடையே எழுச்சி உரையாற்றினார்.
 
அது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.இன்று நடைபெறும் மாவீரர் உரை மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது.
 
இந்நிலையில் அவரது மாவீரர் தின உரையை விரும்பாத சிங்கள இனவாதம் ராஜபக்‌ஷே சகோதரர்கள் மூலம் பல்வேறு வகையில் தனது அழுத்தங்களை கனடா அரசாங்கம் மீது பிரயோகித்தது.
 
அதற்குப் பணிந்த கனடா அரசாங்கம் செந்தமிழன் சீமானை கனடா நேரப்படி நேற்றுக் காலை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்றது.
 
நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் செந்தமிழன் சீமானை திரும்பவும் தனது தாய்த்திரு நாட்டிற்குச் செல்ல வேண்டியது.அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு செந்தமிழன் சீமான் கனடாவில் இருந்து கிளம்பி விட்டார்.
 
இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.அவரை வரவேற்க நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் விமான நிலையம் வந்து சேரும்படிக்கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பிரபாகரன் தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

நினைத்தது மாதிரியே இங்கெ வந்து புலம்ப ஆரம்பிச்சிடான்யா, எங்கே பிரபாகரன் மாவீரர் தினத்திற்கு வரவில்லை என்று இந்த தமிழின துரோகிகள்.

டேய் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா. இன்னும் புலிகளையும் தலைவர் பத்தியும் பேசாவிடில் உங்களின் சன்மானம் இலங்கை அரசிடமிருந்து குறைக்கபடுகிறதா.

பிரபாகரன் இன்னும் 3 வருடத்துக்கு எங்கிருந்தாலும் வரமால் இருப்பதுதான் நல்லது. உங்களின் விருப்பபடி பிரபாகரன் இல்லை என்று வைத்து கொள்வோம். நீங்களும் இந்த உலகமும் இப்ப என்னடா இந்த தமிழ் சமூகத்துக்கு செய்ய போறீங்க. அதை பார்க்கத்தான் எங்கள் தலைவர் இன்னும் காத்து கொண்டிருக்கிறார்.

அவர் என்றும், எப்பொழுது தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஒரு மாமனிதர்.

Tuesday, November 24, 2009

ஈழத்துப் புறநானூற்றுக் கதை


நண்பர் ஒருவர் சொல்லிக்கேட்ட ஈழத்துப் புறநானூற்றுக் கதைகளில் ஒன்று இது. தற்கொலைப் போராளி ஒருவர் தன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். அவரை வழிநடத்தி முன்செல்ல வெளியிலும் மறைவிலுமாய் பல அணிகள் இருக்குமாம். இலக்கினை நெருங்கியபின் கடைசியான தாக்குதல் உத்தரவினை புலனாய்வுப் பிரிவின் போராளி ஒருவர் வழங்குவாராம்.

அவ்வாறே பயணித்து, தடைகள் பல கடந்து தாக்கவேண்டிய இலக்கு வட்டத்தை அடைகிறார் அத்தற்கொலைப் போராளி. அங்குதான் தெரிகிறது தாக்குதலுக்கான இறுதிக் கட்டளையை தரவேண்டிய புலனாய்வுப் போராளியாக நிற்பது ஐயிரண்டு திங்கள் சுமந்து பெற்று ஆசையுடன் தனை வளர்த்த தாய் என்ற உண்மை. இருவரும் போராட்ட இயக்கத்தில் இணைந்து பயணிப்பதுதான் அவர்களுக்குத் தெரியுமேயன்றி, யார் எத்துறையில் கடமையாற்று கிறார்களென்பது இருவருக்குமே தெரியாது.

தாயும் மகனும் சந்தித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. விடுதலைக்கான தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கும் இறுதிக் கணத்தில் தாயும் மகனும் மீண்டும் ஒருகணம் இறுதியாகச் சந்திக்கிறார்கள். கண்கள் பேசுகின்றன. தாய்மை இடைமறிக்க வில்லை. தமிழீழம் என்ற தாயகக் கனவே அந்த வீரத்தாயின் ஆன்ம உயிராய் நிற்கிறது. கட்டித்தழுவி கண்ணீருடன் கடைசி முத்தம் தரும் அவகாசம்கூட இல்லை. தாக்குதல் கட்டளையை பிறப்பிக்கிறாள் அந்த புதிய புறநானூற்றுத் தாய்.

அம்மா என்று அழைக்கவோ, இன்னும் சிலகணம் ஈன்ற தாயை அணைத்துப் பிரியவோ அத்தனயனும் எத்தனிக்க வில்லை. கட்டளை பிறந்ததும் இலக்கு நோக்கி நகர்ந்து தீப்பிழம்பாய் தன்னை அர்ப்பணிக்கிறான். தாய்மையின் விகாசங்களில் பிறிதொரு நெருப்பு நிச்சயம் எழத்தான் செய்திருக்கும். இல்லையேல் அவள் தாயில்லை. ஆயினும் தாய்மையின் தவிப்பும், தாயகக் கனவும் தழுவிக்கொண்ட வியாகுலப்பொழுதில் அந்தத் தாய் அரவணைத்தது தாயகக் கனவையே.

Tuesday, October 27, 2009

இலங்கையில் கனிமொழி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார் ?

தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்...

இறுதிப்போரில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து தமிழீழ வரலாற்றை தாங்கி வந்து முற்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் தமிழீழ வரலாற்றின் சுவடுகள். போற்றப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தமிழீழ போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஆதரவை அளித்து இன்று பல சித்திரவதைகளிற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எமது சுவடுகளை போராட்டத்தின் வலிமையை முகாமிலுள்ள ஒவ்வொரு தமிழ் மகனிலும் நாம் பார்க்க முடியும். அந்த மக்கள் தாம் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய தமது பாராளுமன்ற உறுப்பினர்களையே பார்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளிலிருந்து வரும் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரையும் அந்த மக்களை பார்க்க சிறிலங்கா அரசங்கம் அனுமதிப்பது ஏன்? 

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் அந்த மக்களை வைத்து தாம் பிழைப்பு நடத்தி பணம் சுரண்டுவதற்கே. ஒருவரால் கொடுக்கும் பணம் மொத்தமாக அந்த மக்களை சென்றடைவது இல்லை. மேலிடத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அதிலிருந்து சுரண்டி சுரண்டி அந்த மக்களுக்கு செல்வது பெயரளவுக்கு கொடுத்தோம் என்று சொல்கின்றளவுக்கே. உதாரணமாக சமீபக காலமாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. அதாவது மக்கள் முகாமிற்குள் வந்ததால் சம்பாதித்து இலட்சாதிபதியாகிய அமைச்சர்கள் பற்றி நாம் அறிவோம்.

இதைவிட கொடுமை என்னவென்றால், சிறிலங்காவின் அனுமதியில்லாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை பார்க்க செல்லவில்லை. அது ஒரு புறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற குழு அந்த முகாமுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது. அந்த சுற்றுலாவில் சென்றவர்கள் சிலர் தமிழ்நாட்டில் செய்த ஊழல்கள் போதாதென்று தமிழீழத்திலும் செய்ய சென்றுவிட்டார்களோ! என்று ஐயம் ஏற்பட்டு தெளிவடைந்துள்ளேன்.

ஏன் அந்த ஐயம் என கேட்கிறீர்களா? சில வாரங்களுக்கு முன் தமிழ் நாட்டு நாடாளுமன்றக்குழு சிறிலங்காவுக்கு பயணித்து திரும்பியதும் என் செவிகளில் விழுந்த ஒரு செய்தி "கவிஞர் கனிமொழி 250 ஏக்கர் நிலம் வாங்கிவிட்டு வந்திருக்கிறார்" என்பதே. உள்ளமெல்லாம் கொதித்தது காரணம் அந்த நிலம் தமிழீழ நிலப்பரப்பிலாக இருந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள மாதிரியான ஒரு ஒழுக்கமற்ற அரசியல் தமிழீழத்திலும் வந்துவிடுமோ என்று. ஏனெனில், தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி பொதுமகனின் நிலத்தை அபகரிப்பதும் அதனை அந்த பொதுமகன் போய்கேட்டால் அடியாட்களுடன் விரட்டுவதும் தமிழகத்தின் வழக்கமான ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. அதே மாதிரி எமது தமிழீழத்திலும் வந்துவிடுமோ! என்று ஏங்கினேன்.

நேற்று தான் தெரிந்தது அது எமது நிலப்பரப்பில் இல்லை என்பது. அதையிட்டு சந்தோசமடைந்தாலும் அந்த குழுவில் இடம்பெற்ற தமிழீழ ஆதரவாளரான தொல்.திருமாவளவன் அவர்களின் செயற்பாடும் தமிழர்களின் மனம் நினைத்ததைப்போல இல்லை என்பதே உண்மை. தொல்.திருமாவளவனை கண்டதும் எம் மக்கள் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகளில் படித்தேன். எம் மக்கள் இலகுவில் யாரிடமும் கண்ணீர் விடமாட்டார்கள் மண்டியிடமாட்டார்கள். அந்த மக்கள் கண்ணீர் விட்டு எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர்களிடம் கூறியதாக செய்திகள் படித்ததுமே என் உரோமங்கள் சிலிருத்தன. கண்கள் கனத்தன. எப்படியெல்லாம் வாழ்ந்த எம்மினம் எம்மக்கள் இப்படி துன்பப்பட்டு போனார்களே என.

சரி அவர்கள் ஏன் தொல்.திருமாவளவனை கேட்டார்கள். தமிழீழத்திற்கு ஆதரவானவர் ஒரு தமிழன் என்ற ஒரு உரிமை அவர்களின் மனதில் இருந்ததால் தானே!, அப்படியான அந்த மக்களிடம் நீங்கள் ஆறுதலாக பேசாதது ஏன்? அவர்களின் மனநிலையை அறிய முற்படாதது ஏன்? சரி அதைத்தான் விடுவோம் சர்வதேச குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று யாரை நீங்கள் கூறினீர்களோ அந்த குற்றவாளியின் விருந்தை உண்டு வந்த உங்களை தமிழீழ மக்களாகிய நாம் எந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது?

வதை முகாம் சென்று வந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் என்பவர் முகாம்கள் சர்வதேச மட்டத்தில் தரமாகவுள்ளதாக அறிக்கை விட்டிருக்கிறார். சர்வதேசமட்டம் என்றால் என்ன? என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா அவருக்கு! அவர் சர்வதேச மட்டம் என்று நினைத்தது தமிழ்நாட்டை என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழர் அகதிமுகாம்களைவிட சிறிலங்காவின் ஈழத்தமிழர் வதைமுகாம்கள் சிறந்ததாக இருப்பதால் அவர்கள் சர்வதேசமட்டத்தில் சிறந்தாக இருப்பதாக கருதுகிறார்கள். தமது அரசியல் ஆசனத்துக்காக எமது மக்களை இந்தியரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்நாட்டு அரசாங்கமும் சிங்கள அரசாங்கமும் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றமை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதைமுகாம் பயணம் சுட்டிக்காட்டுகின்றது. 

தமிழகத்தில் இருந்து ஒரு ஈழத் தமிழச்சியின் மனக் குமுறல்....

நன்றி அதிர்வு

Sunday, October 25, 2009

உலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: வைகோ குற்றச்சாட்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை அருகே உள்ள அன்னூர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-

இதுவரை நடத்தப்பட்ட 8 மாநாடுகளும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரிலே நடத்தப்பட்டது. ஆனால் இப்போது உலகதமிழ் செம்மொழி மாநாடு என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மாநாடு உலகத்தமிழ் மாநாடு அல்ல.

இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்த கடை பிடிக்கப்பட்ட விதிமுறைகள், மரபுகள் இப்போது கடை பிடிக்கப்படவில்லை. ஒழுங்கு நியதியை புறந்தள்ளி விட்டு நடத்தப்படும் உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது.

சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக துன்பங்களையும், துய ரங்களையும் ஈழத்தமிழர்கள் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசு நடத்தும் உலக தமிழ் மாநாட்டை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.

இலங்கைக்கு பயணம் செய்த எம்.பி.க்கள் குழுவால் எந்தவித பயனும் இல்லை. அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருவர் கூட அகதிகள் முகாமிலிருந்து சொந்த இடத்திற்கு திரும்ப வில்லை.

கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்தது தவறு. இதற்காக கேரள முதல்- மந்திரி 5 முறை டெல்லி சென்றுள்ளார். ஆனால் தமிழக முதல்- அமைச்சர் ஒருமுறை கூட டெல்லி செல்லவில்லை. உண்மை நிலை பற்றி விளக்கமும் அளிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ள முல்லைப் பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டகேரள அரசு முயற்சித்து வருவது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவையும், இந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.

இவ்வாறு வைகோ கூறினார்.
உங்கள் அன்பை என்றும் மறவாத S.சுடலைமணி

{ கந்தக பூமியுலே வெந்ததே எங்க குலம் ... சொந்தத்தை தொலைச்சிட்டு பதறுதே பாதி சனம் ... }
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity."
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." - Velupilllai Pirabaharan, Leader of Tamil Eelam
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage!

Wednesday, October 21, 2009

இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்

இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது.


இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது. இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‘’உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.

அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.

அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.

சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.

எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’என்று கூறியுள்ளார்.

Tuesday, October 20, 2009

குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! (04 -04 -2008)

குருதி பெருக்கெடுக்கப் பெருக்கெடுக்க கடந்த ஆண்டின் மத்திமத்தில் இக்கவிதையை எழுதி தமிழக உறவுகளிடம் கையேந்தி நின்றோம்....பெருஞ் செயற்பாட்டினூடாக எமை ஆதரித்து ஆற்றுப்படுத்தினீர்கள். தியாகச் செம்மல் முத்துக்குமாரன் உட்பட பல உறவுகள் எங்கள் வலிகளைத் தாங்க முடியாமல் தீக்குளித்தீர்கள். மலையெனத் திரண்டெழுந்தீர்கள். தமிழகத்தின் அரசியல் நாற்காலிகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டன. இருப்பினும் இப்போது மறுபடியும் உங்கள் எழுச்சி.... தயவு செய்து அரசியல் வாதிகளால் முடங்கிப் போகாதீர்கள்.

உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின்
வேர்மடிக்கும் தாய்மடியே!

உறுதி குலையாத உரம் அன்றுதந்து
விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே!

ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக்
காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே!

எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ?
வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை
வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம்.

ஆர்த்து அணைத்து ஆர்ப்பரித்துப் பேசிடவும்,
பார்த்துப் பசியாறி பல்லாங்குழி ஆடிடவும்,
கோர்த்துக் கைகுலுக்கிக் கொவ்வையிதழ் விரித்திடவும்,
ஈர்ப்பு இருக்கிறது, எனினும் இப்போது முடியவில்லை.

கண்ணீர் பெருக்கெடுக்க,
உப்புக் காற்றின் உறவோடு தனித்தபடி,
கூப்பிடு தொலைவில்த்தானே…
எம்தேசம் கும்மிருட்டில் கிடக்கிறது.

ஆற்ற ஒரு நாதியின்றி, – எம்மினத்தின்
அவலத்தைத் தேற்ற ஒரு தேசமின்றி,
அம்மா!.......
உன் கையணைக்கும் தூரத்திலல்லவா…
எம்பூமி காயம்பட்டுச் சிதைகிறது.

வாதைகள் பல சுமந்து,
கந்தகக் காலனின் குடியிருப்பில், குடி சுருங்கி,
கொப்பளிக்கும் குருதிவழி குலைசிதற,
இடிதாங்கி, இடிதாங்கி அடிதாங்கும் நிலை கூட
இன்னும் உன் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பதென்ன?
உன் விழிமணிகள் மீதமர்ந்த வெண்சவ்வா?
இல்லாவிடின்
வேண்டா உறவென்ற விளங்காக் கொள்கையா?

கட்டாய வலி வந்து, கால் அகட்டிக் கிடக்கையிலே
ஆடைச் சரிவிற்குள் அந்நியர்கள் பார்வை…
எங்கள் தொப்புள் கொடிக்கான தொடர்பந்தம் நீதானே….
எப்படித் தனிக்க விட்டாய்?
ஏதிலியாய் தவிக்கவிட்டாய்?

சாவின் விளிம்பினிலே,
கூவிக் குளறி எம்தேசம் அழுகையிலே,
ஆவி துடித்தெழுந்து….
தாவி அணைக்கும் தாய்மடி நீதானே!

வாரியணைத்தெம் புவியின் வண்ணமுகம் பார் தாயே! - எவ்
வல்லமையும் உடைக்க முடியாத் தாய்மைவேதம் நீதானே!

தாயே!......
குமுறும் எம் உள்ளக் கோபுரத்தை வருடி எப்போது ஆற்றுவாய்?
தனித்த எம் வேர்மடிக்குத் தாங்கும் வலுவாய் தோற்றுவாய்?

அம்மா!
இது குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே!
பாராமுகம் வேண்டாம்.
வா!... பக்கத்துணையாய் இரு!

வேற்று மருத்துவச்சி வேண்டவே வேண்டாம்.
எம்புவியின் பேற்று மருத்துவச்சியாய்
நீயே பிள்ளைக் கொடி அறு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36907

Sunday, October 18, 2009

சானல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர். அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.
ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.

- வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை
- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.
- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.
- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.

இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

இதோ நா.உ ஏன் இலங்கை சென்றார்கள் என்பதற்கான விடை, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!

போர் நடைபெற்ற போதும் சரி, முடிந்த பின்னரும் சரி இலங்கை அரசுக்கு உதவி செய்வதில் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஊக்கமாகவே உள்ளார். ஏற்கனவே இலங்கைக்கு நிதியுதவி அளிக்கவென 500 கோடி ரூபா இந்தியாவின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது மீண்டும் இந்திய அரசு ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கலாம் என சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிதம்பரம், இலங்கையில் அகதி முகாம்களிலுள்ள மக்களின் புனர்வாழ்வுத் திட்டத்தை அந்நாட்டு அரசு தமக்குச் சமர்ப்பித்ததும் இந்திய அரசு மேலும் ஒரு 500 கோடி ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாகக் கூறினார். இந்திய நா.உ இலங்கை விஜயம் குறித்து வழங்கியுள்ள அறிக்கை பற்றிக் கூறும்போது தாம் அனைத்து விடயங்கள் குறித்தும் கருணநிதிக்கு விளக்கியுள்ளதாகக் கூறினார்.

அந்த அறிக்கையில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தாம் அதற்கு எவ்வாறு உதவுவது என்று கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். தடுப்பு முகாம் மக்கள் 5000 பேரை இலங்கையரசு அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி விட்டதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நா.உ களுக்கு தகவல்கள் வழங்கிய தமிழர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, தாம் உறுதி செய்யப்படாத செய்திகள் குறித்து கருத்து வழங்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். மொத்தத்தில் சிதம்பரத்தின் இன்றைய பேட்டி அவர் இலங்கையரசுக்கு சாதகமாக மட்டுமே பேசுவார் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.

Thursday, October 15, 2009

ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்!

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்ளுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.

ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்த இயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார் ( இது பலருக்கும் தெரியாத உண்மைச்சம்பவம் ). ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை. இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது. அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.

இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத் தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து ரெலோ அமைப்பினரே சுட்டுக்கொன்றார்கள். அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது. அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்திருந்த ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனையும் புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த புலிகள் அமைப்பு. இதனால் இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்து கொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும், தெய்வாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்ததோடு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்குமிடையிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுதலையாகி அதன் பின்னரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலவருடங்கள் போராளியாக இருந்து வீரமரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும். கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டு கொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.


1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினர்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அத்தோடு மிக முக்கியகாரணமாக அமைந்தது அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டதே. அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

இவ்வாறான பல உண்மைநிலையையும், அனுபவங்களையும் கருத்தில் கொண்டு நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நம் நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுதந்திர வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதே இன்றைய தேவை. எத்தனை கட்சிகள் இருப்பினும் அவை அனைத்துக்கும் சிங்கள இனவாத அரசிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தமக்குள் குத்துப்படுவது தவிர்க்கப்படவேண்டியது. இவ்வாறு அனைவரையும் உள்வாங்கி செயற்பட்டால் தமிழரின் சுதந்திர வாழ்வு உறுதிசெய்யப்படும். சுதந்திர தமிழீழம் மலரும்....................................நன்றி ஈழத்தில் இருந்து ஈழவேந்தன்

தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா

இழியவர்க்கும் பொன் ஆடை போர்த்திடுவார்
இவை எல்லாம் மலிவாய் மகிமை நாடுவாரா
அன்றி மானம் கேட்டு போன போக்கிரிகள்
என்று சொல்லி நாம் அழுவதா...
தமிழினத்தை கருவருப்பவனுக்கு கௌரவமா????...
இதைவிட அந்த மூன்று லட்சம் மக்களுக்கும் விசத்தை கொடுத்து வந்திருக்கலாம் இந்த 'தேவ' தூதுவர்கள்...
இனத்தையே அழித்தவனோடு இளித்து கொண்டிருக்கும் இந்த இழிவானவர்கள் அழிய கடவது...

--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---


தி.க விலும் வாரிசு அரசியல் ..!!! - ஜூனியர் விகடன்

''எனக்குப் பின்னால் என்னுடைய புத்தகங்களும், தத்துவங்களுமே எனக்கு வாரிசு!'' - வாரிசு அரசியலை அறவே வெறுத்த தந்தை பெரியார், திராவிடர் கழகத்தை தொடங்கிய பிறகு உதிர்த்த வார்த்தைகள் இவை! ஆனால், இப்போது தி.க-விலும் வாரிசு வழிமுறை தொடங்கி விட்டது! திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி தஞ்சாவூரில் நடந்தது. அப்போதுதான், தி.க. தலைவர் கி.வீரமணியின் மகன் அன்புராஜ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கறுப்பு சட்டைக்காரர்கள் மத்தியில் நிறைய பரபரப்பு!

தி.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். ''தன் ஆண் குழந்தை அஞ்சு வயசுல இறந்தப்ப பெரியார், 'நல்ல வேளையா என் குழந்தை செத்துப் போச்சு. இல்லேன்னா வாரிசுங்கற பேர்ல எதிர்காலத்துல என் பொதுப்பணிகளுக்கு இடையூறு வந்துருக்கும்'னு அந்த சோகத்துக்கு மத்தியிலும் கம்பீரமாகச் சொன்னார். அப்படிப்பட்ட பாரம்பரியம் உள்ளது தி.க..!

தற்போது கி.வீரமணி, தன் மகனை வாரிசாக நுழைத்திருக் கிறார். எப்பவுமே தேர்தல் சமயங்களில் யாரை ஆதரிப்பது என்பது பற்றிய விஷயங்கள் பேசுவதற்காக மட்டுமே பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும். இந்த முறை அப்படி எந்த ஒரு தேவையும் இல்லாத நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதி சென்னையில்

உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டினார் வீரமணி. பிறகு கடந்த 10-ம் தேதி திடீரென பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். நாங்களும் ஒரு விதக் குழப்பத்துடனே கூட்டத்துக்குப் போனோம். கூட்டத்தைத் தொடங்கி வைத்து எடுத்த எடுப்பிலேயே வீரமணி, 'எனது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போகிறது. இனிமேல் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வதை தவிர்க்கப் போகிறேன். முன்பு மாதிரி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்'னு பேசிட்டு உட்கார்ந்தார்.

அப்புறம், ஒரத்தநாடு குணசேகரன், 'ஐயா எதுக்கும் கவலைப்படக்கூடாது. நாங்க எல்லாரும் இருக்கோம். எல்லாத்துக்கும் மேல அன்புராஜ் இருக்கறப்ப எதுக்கு கவலைப்படறீங்க?'னு கண்ணீர் விட்டு அழுதாரு. எங்களுக்கு அப்பத்தான் விஷயமே புரிய ஆரம்பிச்சது. அடுத்த கைத்தடி களான நெய்வேலி ஜெயராமன், மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் ரெண்டு பேருமே, 'தலைவர் உடல்நிலைதான் முக்கியம், இனி மேல் நீங்க முழுசா ஓய்வெடுக்கணும். கட்சிப் பொறுப்புகளை அன்புராஜ் மாதிரியான இளைஞர்களுக்குக் கொடுக்கணும்'னு ஜால்ரா போட்டாங்க.

கடைசியில், 10 தீர்மானங்களை நிறைவேத்திட்டு, நிறைவாகப் பேசிய வீரமணி, 'இதுவரைக்கும் மேடையில் பேசிய தோழர்கள் எல்லாம் அன்புராஜை பொறுப்புக்குக் கொண்டு வரணும்னு கேட்டீங்க. எனக்கும் அதில் உடன்பாடுதான். இதுவரைக்கும் அன்புராஜ் கழகத்துக்காக நிறைய உழைச்சிருக்காரு. நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா, வாகைசூட வாரீர், விடுதலை பவழ விழா என முக்கியமான மூன்று நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கார். அவர் மிகப்பெரிய தொழில் அதிபர். நிறைய விருதுகளை வாங்கியிருக்கார். அவரோட சேவை கழகத்துக்கு தேவை என்பதால், அவரை கழகத்தின் தலைமை நிலைய செயலாளரா அறிவிக்கறேன்'னு சொன்னாரு.

அதோடு, 'இந்த அறிவிப்புக்கு எதிராக என்ன விமர்சனங்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த வீரமணி தயாராக இருக்கிறான்'னு சொல்லி அமர்ந்துட்டார். உடனே மாநில துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் எழுந்து 'எல்லாரும் இந்த அறிவிப்பை வரவேற்று எந்திரிச்சு நின்னு கைதட்டணும்'னு மைக்ல சொன்னார். ஆனால், அரங்கத்திலிருந்த ஒருசிலர் தவிர யாருமே எந்திரிக்கவுமில்லை, கைதட்டவுமில்லை! எல்லோருக்கும் இந்த முடிவு ஷாக்தான். அதைப் புரிஞ்சுகிட்டு உடனே கூட்டத்தை முடிச்சுட்டாங்க. வீரமணியும் அவசரமா வெளியே போயிட்டாரு.

தி.மு.க-வில் மு.க.ஸ்டாலின்கூட மிசா காலத்தில் கட்சிக்காக அடிபட்டு, ஜெயிலில் மிதிபட்டு கஷ்டப் பட்டார். ஆனால், அன்புராஜ் எந்த சிறைக்குப் போனார்? எந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்? தி.க-வை இன்றும் பெரியளவில் பேச வைத்துக்கொண்டிருக்கும் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டாரா... இல்லை கட்சிப் பொறுப்புகளில்தான் இருந்தாரா? இப்படி எந்தத் தகுதியும் நிரூபிக்காத ஒருவர் தி.க-வின் மிக முக்கியமான பதவிக்கு எப்படி வரலாம்? பெரியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக நடக்கற அத்தனை நிகழ்ச்சிகளையுமே அங்கே பணியாற்றுகிற ஆட்களை வைத்துப் பார்த்துக் கொள்கிற அன்புராஜ் கட்சித் தொண்டர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவரல்ல. இப்படிப்பட்டவர் நாள்தோறும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து தொண்டர்களிடம் எப்படிப் பேசுவார்?'' என கொதிப்போடு கேட்டார்கள்.

தி.க-விலிருந்து பிரிந்து கருத்து வேறுபட்டுப் பிரிந்து சென்ற பெரியார் திராவிடர் கழகத் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

''தி.க. என்கிற பெரியாரின் சொத்தை, தன்னோட சொத் தாக மாத்திக்க நினைக்கறார் வீரமணி. அதுக்காகத்தான் தன் மகன் அன்புராஜுக்காக வாரிசு முறையை ஏற்படுத்தியிருக்கார். இதற்காக ஒரு வருடமாகவே பல்வேறு விஷயங்களைச் செய்துவந்தார் வீரமணி. விடுதலை பவழவிழா மாநாட்டுக் குழுவுக்கு அன்புராஜை தலைவராப் போட்டார். மாணவரணி மாநாடுகளில் அன்புராஜையே புரவலராக்குனாரு. 'பெரியார்' படத்தை எடுத்த லிபர்டி கிரியேஷன்ஸோட இயக்குநரும் அன்புராஜ்தான். திராவிட நலநிதி நிறுவனத்திலும் அன்புராஜ், அவர் மனைவி சுதா, வீரமணியின் மனைவி மோகனா, வீரமணி என குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். தி.க-வின் மிக முக்கிய டிரஸ்ட்டான பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்திலும் அன்புராஜ், சுதா உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இயக்குநர்கள். 'விடுதலை' பத்திரிகையையும் வாய்மொழி உத்தரவா அன்புராஜ்தான் பார்த்துக்கறார், கலிபூங்குன்றன் சும்மா ஒரு பொம்மை மாதிரிதான். 'திராவிடன்' பதிப்பகத்தோட இயக்குநரும் அன்புராஜ்தான்!'' என்றார் ராமகிருஷ்ணன்.

ஆனால், தி.க-விலேயே ஒருதரப்பினர், ''அன்புராஜ் ஒண்ணும் திடீர்னு கட்சிக்கு வந்துடலை. சில வருடங்களாகவே கட்சிக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கிறார். திருச்சியில் நாகம்மையார் இல்லத்தின் 50-ம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பா நடத்தினதோட, நிறைய தொகையை மிச்சப்படுத்தி வீரமணி ஐயாகிட்ட கொடுத்தார். அதை வைச்சுத்தான் கோடி ரூபாய் செலவில் விளையாட்டு அரங்கம் கட்டினாங்க. இப்படி கட்சியோட எல்லா நிகழ்வுகளையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் அவர்தான் சிறப்பா செய்யறார். பொறுப்பு கொடுத்தா இன்னும் சிறப்பா செயல்படுவார். அதனாலதான் கட்சியோட வளர்ச்சிக்காக அன்புராஜுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க!'' என்று கூறுவதையும் கேட்க முடிகிறது.

இந்தப் பரபரப்புகள் குறித்து கி.வீரமணி யிடமே பேசினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், ''தற்போதைய சூழலில் நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை...'' என்று மட்டும் கூறினார். அவரிடமிருந்தோ தி.க. தலைமையகத்திலிருந்தோ இது குறித்து வரும் விரிவான விளக்கங்களுக்காக, வாசகர்களைப் போலவே நாமும் காத்திருக்கிறோம்.

- மு.தாமரைக்கண்ணன்

இப்படியும் கூட நடந்திருக்கலாம்...!!!

இடம்: மெனிக் பாம் முகாம்
பங்கேற்ப்போர்: இந்திய எம்.பிக்கள் குழு, முகாம் மக்கள்
டி.ஆர்.வாலு: என்ன எல்லோரும் சௌக்கியம் தானே? இந்த வருசம் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகிகிட்டு இருந்துருபீங்க..தொந்தரவுக்கு மன்னிக்கனும்...நீங்க எதோ இங்க கஷ்டப்படுற மாதிரி அங்க தமிழ்நாட்டுல எல்லாரும் தெருத் தெருவா கத்திகிட்டு இருக்காங்க...தீ குளிக்கிறாங்க. சரி, எதாவது சொல்றதா இருந்தா சொல்லுங்க...எங்களுக்கு நேரம் ஆச்சு...மானாட, மயிலாட தீபாவளி ஸ்பேஷல் போட்டிருப்பாங்க...!! டாக்ளஸ், ஒரு கோக் சொல்லு...
முகாம் நபர்: அய்யா, என் பேரு 'தமிழன்'. உங்ககிட்ட மூனு கேள்விகள் கேக்கனும்...முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், சிங்களனால நாளக்கு இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
டி.ஆர்.வாலு: (தொண்டையை செருமுகிறார்...) இந்த கேள்வி கொஞசம் கஷடமா இருக்கு,பதில் தெரியல..அதனால, சாய்ஸ்'ல விட்டுடறேன்... அடுத்த கேள்வி
முகாம் நபர்:இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
டி.ஆர்.வாலு: ஒரு தமிழனா இந்த கேள்வி என்னை கொல்லுது...யோவ் டக்கு, இன்னுமா கோக் வரலை.... ம்ம்..அப்புறம்...மேல சொல்லு தம்பி...
முகாம் நபர்:மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
( டி.ஆர்.வாலு,இந்த கேள்வியை எதிகொள்ள முடியாமல், டாக்ளஸுக்கு கண் ஜாடை காட்டுகிறார்... உணவு எடுத்துவரும் ஆர்மி வான் வருகிறது..உணவு வேளை)
டி.ஆர்.வாலு:உணவு வேளை முடிந்தவுடன், பேட்டி தொடரும்...
தொல்.குருமா: அண்ணே, அவங்ககிட்ட ஒரு வார்த்தயாவது பேசட்டுமா ?
டி.ஆர்.வாலு: ஒரு எழுத்து கூட பேச கூடாது...சிக்கன கடி..சிக்கன கடி..
(உணவு இடை வேளை முடிந்த பிறகு..)
டி.ஆர்.வாலு: ம்ம்..அப்புறம்..வேர எதாவது கேள்வி இருக்கா ?
மற்றொரு முகாம் நபர்:"அய்யா...என் பேரு வன்னியன். நான் உங்ககிட்ட ஐந்து கேள்வி கேக்கனும் ?
டி.ஆர்.வாலு: ம்ம்...கேளு
மற்றொரு முகாம் நபர்:
முதல் கேள்வி. 'சுத்தி இருக்கிற நாடுகள் நிம்மதி இல்லாம அவஙளுக்குளேயே அடிச்சிக்கிடு இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும்' அப்டிங்றது இந்தியாவோட வெளியுறவு கொள்கை. நேபாளத்தில பிரிச்சு வைக்குறீங்க...அஸ்ஸாம்ல செத்து வைக்கிறீங்க. ஆனா, நாடே அழிஞ்சாலும், தமிழனுக்க்கென்று ஒரு நாடு இருக்க கூடாது'ன்னு சிங்களனுக்கு இப்படி கண்மூடித் தனமா ஆதரவு குடுக்குரீங்களே. அந்த மர்மம் என்ன ?
இரண்டாவது கேள்வி, ஒரு ராஜிவ் காந்தி உயிருக்காக இன்னும் எத்தனை தமிழர்களோட உயிரை எடுக்கப் போறீங்க ?
மூன்றாவது கேள்வி, நடந்ததுக்கு எல்லாம் இரண்டு கருணாக்கள் தான் காரணம். இதுல யாரவது ஒரு கருணாவாவது எங்க பக்கம் இருந்திருந்தா, இப்படி ஓர் அவலம் வந்திருக்காது. இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க ?
நான்காவது கேள்வி: என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு மட்டும் எப்படி உணவு வண்டி அரை மணி நேரம் சீக்கிரம் வந்தது ?
ஐந்தாவது கேள்வி: இதுக்கு முன்னாடி மூனு கேள்வி கேட்ட 'தமிழன்' எங்கே?
--
பழைய மொந்தையில் புதிய கள்ளை கொடுத்த
ம.பொன்ராஜ்

கற்பு காத்த காவலர்

கலைஞரே உமது திருவிளையாடல் எம்மாம் பெருசு
இலங்கை மக்கள் குண்டு மழையில் செத்த போது கடிதம் எழுதுவது
அவர்களுக்காக போராட்டம் பெரிய அளவில் நடக்கும் போது

போலீச விட்டு வக்கீலையும் லீவு உட்டு மாணவர்களையும் நசுக்கு

போராட்டம் முடிந்ததும் தேர்தல் வெற்றில் இத்தனை மந்திரிகள் வேணும்னு

போராடி போராடி பெற்றீரே உமது அருமை தெரியாத சனங்கள்

நீர் இலங்கைக்கு அநீதி இழைத்ததா சொன்னது இதோ இந்திய குடியுரிமை

என இந்திய குடியுரிமையை இலவச வேஸ்டி கணக்கா சும்மா தூக்கி போட்டீரே

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் " என உமது வசனத்துக்கு தகுந்தாப்பல

இல்லையா நீர் நடந்து கொண்டீர் . தினமலர் காரன் என்னென்ன எழுதினான் லங்கை பிரச்சனையில்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்பனியத்தின் கூசாவாக திகழ்ந்த அவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு

நமீதாவும் , ஸ்ரீதேவியும் விபசாரம் பண்ணுவதாக புவனேஸ்வரி சொன்னார் என போட்டதற்கு

எழுதியவரை உள்ள தூக்கி வச்சு "நமீதாவின் கற்பை " காப்பாற்றிய உம்மை

" கற்பு காத்த காவலர் " என பட்டம் கொடுத்து புகழலாம் .

வாலி கிட்ட சொன்னா கவிதை அலையை தோற்று வித்து இதுபோல

உமது புகழை தமிழால் பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து இருப்பாருல்ல

எம்பி குழு போய் " அட நீங்க வேற மூனு வேளையும் பிரியாணி துண்ணுட்டு

இருக்காங்கன்னு சொன்னதும் " நாங்க் உங்களை நம்பிருவம்னு என்னமா

யோசிச்சு ஒரு முடிவு எடுத்தீங்க அதை பாராட்ட வார்த்தையே கிடையாது கலைஞரே


" நீ தண்ணி அடிக்கறவன் தானே' ன்னு சொல்ல " நீ ஊத்தி கொடுத்தியான்னு; கேட்டு

மோதிகிட்டு திரிந்த விசயகாந்து , செயா மாமியும் கூட்டு சேர்ந்து நம்ம டவுசரை

வரும் எலக்சனில் கழட்ட வாய்ப்பு இருக்குன்னு தெரிந்ததும் ' மருத்துவரை "

கூப்பிட்டு வந்துரு நாம ஒன்னா இருக்கலாம் என சொன்ன உமது மதியூகத்துக்கு
முன்னால் இந்த பயலுவ நிக்க முடியுமா/

கிடக்கிறதெல்லாம் கிடந்துட்டு போவுதுன்னு இப்போ பத்திரிக்கை -சினிமா உலக சண்டையை

சுவைத்து பார்க்கும் நீர்

நாளை அவனுகளை அழைத்து "பத்திரிக்கை யாளர் குடும்ப பாதுகாப்பு நிதி" அப்படின்னு

ஒன்றை ஏற்படுத்தினா சும்மா வாலை இந்த பக்கம் அந்தபக்கம் ஆட்டிகிட்டு

உமது புகழை இந்த பத்திரிக்கை எழுதாதா என்ன /

கலைஞரே உம்ம மாதிரி ஆளுக இருக்கிற வரை

நூறு பெரியாரில்லை ஆயிரம் பெரியார் வந்தாலும்

"திராவிட மாயையை " ஒழிக்க முடியான்னேன்







--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

மூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே கதறுகிறது, இந்த குழு பக்சேக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வந்துள்ளது

வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படு கின்றது.

இந்தக் குழுவினரின் வருகைக்கான ஏற்பாடுகள், ஒழுங்குகள், நடைமுறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடியோடு பிடிக்க வில்லை என்று தெரியவந்தது. சரியோ, பிழையோ இலங்கை நாடாளு மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழர்கள் 23 பேரில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் வன்னித் தமிழர்களை நாடாளுமன்றில் பெருமளவில் பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும் கூட்டமைப்பினரே.

எம். மக்களின் வருகை மூடுமந்திரமாக இருந்தது
இந்த மக்களின் அவலநிலைமையை உண்மை நிலைவரத்தை கண்டறிவதாயின் அதற்கான ஏற்பாடுகளை அந்த மக்களின் பிரதி நிதிகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால் இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகை பெரும் மூடுமந்திரமாகவே வைக்கப் பட்டது. தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணாமலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆக, கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பு குறுகிய கால முன்னறிவித்தலுடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவும் ஒன்றே கால்மணி நேரத்துக்குள் அவசரமாக முடிக்கப்பட்டது. சந்திப்பின்போது இந்திய எம்.பிக்கள் தரப்பில் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின என்று கூறப்படுகின்றது. இலங்கைத் தரப்புடன் ஓர் உடன்பாடு கண்டு, அதனடிப்படையில் சில விடயங்களை ஒப்பேற்றவே இந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது என்ற எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் "உதயனு" க்குத் தெரிவித்தார்.

காங்கிரஸின் மூத்த எம்.பி. சொன்ன காரணம்
"இந்த அகதிகளை மீளக் குடியேற்று வதை இலங்கை இராணுவம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகின்றது. அதையும் மீறி அகதிகளை மீளக் குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்றால் அவருக்கு எதிராக இராணுவம் கிளம்பும் சாத்தியம் உண்டு. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதில் இராணுவத்துக்கு சார்பாக சீனா தலையிடும் சூழல் உண்டு. இதை யெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளது.'' என்ற சாரப்பட இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.ஒருவர் இந்தச் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது, இக்குழுவினரின் உள் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும், இந்தச் சந்திப்பில் அகதிகளின் நிலைமை குறித்துப் பேசி முடிப்பதற்கிடையிலேயே நேரம் போய்விட்டதாகக் கூறி சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.
"தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வந்தவர்கள் தமிழர் தரப்பின் முக்கிய பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்து யாடாமல் முடித்துக் கொண்டமை முறித்துக் கொண்டமை வேறு உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் இக்குழுவின் விஜயம் அமைந்துள்ளது என்ற கருத்தையே எமக்குத் தந்துள்ளது.'' என்றார் கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி.

தமிழர்களின் அவல நிலைக்கு இந்தியாவே காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்
"ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் இந்தியாவும் ஒன்று. அவர்களால்தான் இந்த அவல நிலை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இதை இக்குழுவினருக்கு உணர்த்த முன்னரே சந்திப்பை நேரம் போதாது என முடித்துவிட்டார்கள். யாராவது ஒருவர் இதை அவர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.'' என்றார் இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்மர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஆவர்.ஆனால் யாழ்ப்பாணத்துக்கான இந்தக் குழுவினரின் விஜயம் எஞ்சியுள்ள ஓர் எம்.பியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் திரு விழாவாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எடுபட்டு, இக்குழுவினர் இலங்கை அரசு சார்பானவர்களாகவே செயலாற்றும் அவலம் ஏற்படும் என்று தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி. முற்கூட்டியே எச்சரிக்கை செய்துள்ளார்.

இக்குழுவினரின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் வவுனியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்கள் பற்றியதே. எனவே, அவர்களின் வருகையில் கணிசமான நேரம் அந்த அகதிகளுடனான சந்திப்பாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நேற்று மாலை சில மணி நேரத்துடன் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எல்லா அகதி முகாம்களுக்கும் இந்தக் குறுகிய நேரத்துக்குள் சென்று விடயத்தை முடித் துக்கொள்ளலாம் எனக் கூறுவது அபத்தமாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அகதிகளையும் இணைத்துக்கொண்டு வராமல், தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை மட்டும் அதுவும் இந்திய மத்திய அரசின் தூதுக்குழுவாக அல்லாமல் தமிழக முதல்வரின் தூதுக்குழுவாக அனுப்பி வைத்திருக்கின்றமையும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.

மூத்த தமிழ் மகன்??????????

முத்தமிழ் வித்தகர் என்றும்-மூத்த

தமிழ் மகன் என்றும் -முடி

சூடும் கலைஞர் பெருமானே-தாங்கள்

இன்று முதல் கொலைஞர் பெருமான் ஆகுக!

பாதிக் காலம் பதவியில் இருந்து விட்டும்

மீதிக் காலமும் பல்லக்கில் பவனி வரும் கனவானே

சேற்றுக்குள் புழுவாய் செந்தமிழன் சீரழிதல்

கண்டும் சினம் கொள்ளா தன்மான சிங்கமே!

மனைவி துணைவி என்ற வாழ்வுண்டு - மக்கள்

மூவர்க்கு மகத்தான பதவியுண்டு - சுற்றம்

சூழலுக்கும் பேரக்கொளுந்துகளுக்கும் - சொந்தமாய்

டி.வீயுண்டு - உடன் பிறப்புகளுக்கு மட்டும் ?

உடுத்த உடையுமில்லை உண்ண உணவுமில்லை

பிஞ்சு மழலைகளுக்கு கஞ்சிக்கும் வசதியில்லை

இல்லை என்பதே நிறைந்து கிடக்குது - தமிழன்

உயிர்கள் மட்டுமே மலிந்து கிடக்குது.

குளிரை போர்த்தி உறங்குகிறார் - எம்மினம்

கழி நீர் போல வாழ்கின்றார் - உயிரை

கூட கொடுக்கிறோம் - மு.க

எங்கள் உணர்வை மட்டும் கொள்ளாதே!

மானாட மயிலாட மகிழ்ச்சி தான் - குறைப்

பாவடையில் தாயினம் தேய்மானம்

ஆவதும் குளிர்ச்சி தான்- பண்பட்ட தமிழுக்கு

உங்களின் பங்கு ஓங்குக! - ஓரிரு

நொடியேனும் எங்களின் அலறலை - உலகுக்கு

சொல்லுமையா ! - பாதக் கமலதிட்கு

செருப்பை இருக்கிறோம் - நெருப்பாய்

இருக்க வேண்டியவரே - ஏன்

இப்படி செருப்பாய் இருக்கிறீர்?

தமிழச்சி மார்பில் தான் மழலை

பசி தீர்தீரோ? பிறகேன் பன்றி

கூட்டத்திடம் - பல்

இழித்து நிற்கிறீர்?

இளைப்பாறும் போதிலேனும் தமிழனுக்கு

எள்ளளவேனும் ஏதும் செய்குக!

உளியின் ஓசை வடித்தவரே - எங்கள்

வலியின் ஓசை மட்டும் கேட்கலையோ?

வீழ்வது மு க வகா இருப்பினும் எழுவது

தமிழினமாய் இருக்கட்டும்.- வெல்க தமிழ்!


நன்றி:

KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal



--
அ.புபேசு மோகன்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற காணப்படும்.
The worthy and the unworthy
Are seen in their posterity
-திருக்குறள்
-Holy Kural







--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

வருவோம் மீண்டும் புலியாக ! நீ அழிய காத்திரு சுனாமியாக !

தமிழா!
மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,

சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,

துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,

சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,

இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,

என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன் இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!

காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?

அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!

நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!

வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!

மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,

என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,

நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !

வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !

சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்


அன்புடன் தோழன்
....மதன் (பகலவன்) ....
. குவைத்