Friday, December 25, 2009

இன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தாக்கப்பட்டார்

A WOMAN described as "unstable" jumped over a barricade then attacked and knocked Pope Benedict to the floor at the start of Christmas Eve mass at the Vatican.

http://www.thesun.co.uk/sol/homepage/video/article300101.ece?vxSiteId=0bc72527-aa8e-4487-a5e8-94aae448c9dd&vxChannel=Sky%20News&vxClipId=1347_SUN41173&vxBitrate=300

Wednesday, December 16, 2009

தமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான்: உறுதிப்படுத்துகிறது டைம்ஸ் பத்திரிகை

ரத்த வெறி பிடித்த சிங்கள இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்ததை அம்பலபப்டுத்தியது சேனல் 4 தொலைக்காட்சி.

இந்த வீடியோ காட்சிகள் உண்மை இல்லை; இது தயாரிக்கப்பட்டது என்று இலங்கை அரசு நாடகம் ஆடியது. இலங்கை அரசு ஆடியது நாடகம்தான் என்று என்று டைம்ஸ் பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ’டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விசயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்பட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

Monday, December 14, 2009

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 99 வீதமான வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"

பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.

தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,

31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,

மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 99வீதமான பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் "தமிழீழமே" இறுதித் தீர்வென மக்களாணை தெரிவித்துள்ளனர். இன்னமும் அஞ்சல் மூலமான வாக்குகளின் முடிவுகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.

இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை நகர ரீதியாக பார்வையிட இங்கே அழுத்தவும்.

Sunday, December 13, 2009

தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: யாருக்கும் வெட்கமில்லை








'தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படையால் சுடப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும்,அவர்களது படகுகள், வலைகள் போன்ற உடமைகள் சேதப்படுத்தப்படுவதும், அபகரிக்கப்படுவதும் வானிலைச் செய்திபோல் அன்றாடம் நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன. நமது எல்லையில் ஊடுருவி, தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைவிட அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கடற்படை வசம் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் அவலம் இது. இச் செய்திகளை அடிக்கடி பார்த்து நாமும் மரத்துப் போய்விட்டோம். மாநில அரசு இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும், மத்திய அரசு இலங்கை அரசிடம் புகார் செய்து விட்டதாக அறிக்கை வெளியிடுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. இந்த அரசுகளுக்கும் இப்பிரச்னை மரத்துப்போய்விட்டது. ஆனால், தமிழக மீனவர்களின் துயரம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது.

இக்கொடுமைக்கு முடிவேயில்லையா? 1974-ல் அன்றைய மத்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்டது. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்த மாநில தி.மு.க.வின் அரசு இந்தத் தாரைவார்ப்பிற்கு உடன்பட்டது. அன்றிலிருந்து மீனவர் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசிடம் தரப்பட்டாலும், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவது, இளைப்பாறுவது போன்ற நடவடிக்கைகளை கச்சத்தீவில் தொடரலாம் என்று அன்றைய மாநில அரசு கூறியது, பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிட்டது.

இலங்கைக்குக் கச்சத்தீவை தாரைவார்க்கவேண்டிய அவசியம் என்ன என்பது இன்றைக்கும் புரியவில்லை. அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்பதும் புரியவில்லை. அத்தீவை இத்தனை ஆண்டுகளாய் இலங்கை அரசு எந்த வகையிலும் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை. அத்தீவுக்கு அருகில் செல்லும் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவதைத் தவிர, அத்தீவின் உரிமை எவ்வகையிலும் இலங்கை அரசுக்குப் பயன்படவில்லை. பிறகு ஏன் இலங்கை அரசு இத்தீவின் உரிமையைக் கோரிப் பெற்றது? ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகவும் கச்சத்தீவு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இருநாட்டுத் தமிழர்களும் கச்சத்தீவில் கூடி, தங்களது கலாசார ஒருமைப்பாட்டு விழாவை நடத்திவந்தனர். அத்தீவின் அருகில் உள்ள கடற்பகுதியில் விலைமதிப்புள்ள மீன் இனங்கள் அதிகமாகக் கிடைத்து வந்தன. இவ்விரு காரணங்களும் இலங்கை அரசின் கண்களை உறுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், இதே காரணங்களுக்காக இத்தீவின் உரிமையை விட்டுத் தர முடியாது என்று கூற, அன்றைய தி.மு.க. அரசுக்குத் தைரியம் இல்லை. இத்துணைக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கச்சத்தீவின் உரிமை இலங்கை அரசுக்குத் தரப்படுவதைக் கடுமையாக எதிர்த்தன. ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்தது. ஆனால் இந்த எதிர்ப்புக்களை எல்லாம் மீறி, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் மத்திய அரசின் முடிவில் மாநில தி.மு.க. அரசு உறுதியாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள கடல் எல்லை என்பது ஒரு கற்பனையான கோடு. இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல நேரங்களில் இந்த எல்லைக்கோட்டை தாண்டியுள்ளன. நவீன தொழில்நுட்பம் கொண்ட இவ்விரு படைகளால் கூட சரியாகக் கணிக்கமுடியாத எல்லைக்கோட்டை அப்பாவி மீனவர்களால் எப்படிக் கணிக்கமுடியும்? ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடற்பகுதி வெறும் 12 கடல் மைல்கள் நீளத்தைக் கொண்டது. இதில் ஒரு கிலோமீட்டர் முன்னே சென்றால் கூட, தமிழக மீனவர்கள் தங்களை அறியாமலேயே இலங்கைக் கடற்பகுதிக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அறியாமல் செய்யும் பிழைக்கு, அவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

கடலில் சென்று மீன் பிடிப்பதே ஓர் ஆபத்தான தொழில். தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படை மூலம் இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. சுனாமியால் சூறையாடப்பட்ட இம்மக்களின் மிச்சமீதி வாழ்வாதாரமும் இலங்கைக் கடற்படையால் கொள்ளையடிக்கப்படுகிறது. முன்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்குத் தேவையான பொருள்களை கடத்தினார்கள்; அதனால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது என்று இலங்கை அரசு கூறிவந்தது. ஆனால் அவர்கள் கூற்றுப்படியே, விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், தமிழக மீனவர்கள் மீதான கொடுமைகள் தொடர்வது ஏன்? இதற்கு எந்தப் பதிலையும் இலங்கை அரசிடமிருந்து நமது அரசுகளால் பெறமுடியவில்லை.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறும்போதும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு புகார் அனுப்புகிறது. அப்புகார்களின் மீது இலங்கை அரசின் பதில் என்ன?, இந்நிகழ்வுகள் திரும்ப நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - என்பது குறித்து நமக்கு எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் இந்திய அரசு புகார் கொடுத்த ஒரு சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மீண்டும் தமிழக அரசால் கடிதம் எழுதப்படுகிறது. மீண்டும் மத்திய அரசால் புகார் கொடுக்கப்படுகிறது. மீண்டும் இலங்கைக் கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடிதம் எழுதுபவர்களுக்கும் வெட்கம் இல்லை. புகார் கொடுக்கும் மத்திய அரசுக்கும் வெட்கம் இல்லை. அவ்வப்போது புலம்பும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் வெட்கம் இல்லை. மொத்தத்தில் யாருக்கும் வெட்கம் இல்லை.

இந்திய வம்சாவழியினர் வாழும் பிஜி, மாலத்தீவு போன்ற நாடுகளில் அவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது, கொதித்தெழும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது மட்டும் அசட்டையாக இருப்பது ஏன்? தமிழக மீனவர்கள் இந்தியப் பிரஜைகள் இல்லையா? அமெரிக்க நாட்டினர் வேற்று நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது, அமெரிக்கா நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது. ஆனால் இந்தியப் பிரஜைகளாகிய தமிழக மீனவர்கள் பல்லாண்டுகளாய் இலங்கைக் கடற்படையிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது, நமது மத்திய அரசு ஒப்புக்குப் புகார் தருவதோடு நிறுத்திக்கொள்வது ஏன்? இலங்கையின் கேந்திர தொழில்களில் கிட்டத்தட்ட 75% முதலீட்டை இந்திய பெருமுதலாளிகள் வைத்திருப்பது ஒரு காரணமா? இந்திய பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்க, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காவுகொடுக்கத் துணிந்துவிட்டதா? அதற்கு மாநில அரசு ஒத்து ஊதுகிறதா? எதற்கும் விடையில்லை.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவது என்று இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு முன்பு கூறப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்? இந்தியக் கடல் எல்லையை மீறி இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை பிடிக்கும் இலங்கைக் கடற்படை அவர்கள் மீதான நடவடிக்கையை எடுக்க, அவர்களை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைப்பதுதானே சரியாக இருக்கும். அவர்கள் எல்லையை மீறி எவ்வளவு தூரம் இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்தார்கள் என்று ஒவ்வோர் அத்துமீறல் குறித்தும் இலங்கை அரசு மத்திய அரசிடம் புகார் கொடுத்து வந்துள்ளதா? நம் கடற்பகுதியைத் தாண்டாது எச்சரிக்கையுடன் செயல்பட தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படை பயிற்சி வகுப்புகள் நடத்தியதா? அவ்வாறு அவர்கள் கடல் எல்லையை மீறும்போது இந்தியக் கடற்படையும், கோஸ்ட் கார்டும் அவர்களை எச்சரிக்க முடியாதா? கூட்டு ரோந்து மூலம் இரு நாட்டு கடற்படைகளும் இப்பிரச்னையைத் தீர்க்கமுடியாதா? மேற்படி எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு இது நாள்வரை மேற்கொள்ளாதது ஏன்? தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு சிரத்தை இல்லையா?

சமீபத்தில் 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடித்து செல்லப்பட்டபோது, ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் கொதித்தெழுந்தனர். இதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்காக டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த அறிவித்தவுடன், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத்தமிழர் பிரச்னை குறித்து, இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசும்போது, தமிழக மீனவர் பிரச்னை குறித்தும் பேசியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 'இப்பிரச்னை குறித்து இலங்கை அரசிடம் நான் பேசுகிறேன்'- என்ற வாக்குறுதியை பிரதமரிடம் இருந்து பெறுவதில் எந்தப் பயனும் இல்லை. இது போன்ற வாக்குறுதிகள் ஏராளமாக ஏற்கெனவே தரப்பட்டுள்ளன. அவற்றால் பைசா பயன்இல்லை என்பது வரலாறு. இப்பிரச்னை, ஒட்டுமொத்தமாகத் தீர, வெறும் வாக்குறுதிகள் தேவையில்லை. மீண்டும் ஒருமுறை இக்கொடுமை நடக்காமல் இருப்பதற்கான உறுதியான நடவடிக்கைதான் தற்போதைய தேவை. மத்திய அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு தொடர்ந்து இக்கொடுமைகளைச் செய்து வருகிறது. தன்னை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற ஆணவப் போக்கை அது கடைப்பிடிக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் மத்திய அரசில் தி.மு.க. தொடர்வதில் அர்த்தமில்லை. 'பேராசை பிடித்த மீனவர்கள் சிலர் எல்லையை மீறி மீன் பிடிக்கச் செல்வதுதான் இப்பிரச்னைக்குக் காரணம்' என்ற பொருள்படும்படி, தமிழக முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார். அப்படியே போனாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இலங்கை அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அப்படி என்றால், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் வந்தது இல்லையா? அப்படி வந்தவர்கள் மீது இந்தியக் கடற்படை என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களைப் பிடித்து இலங்கை அரசிடம்தானே ஒப்படைத்துள்ளது. இத்தகைய பொறுப்பு இலங்கைக் கடற்படைக்கு இல்லையா? தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி மீண்டும் ஒருமுறை வரக் கூடாது. இதுதான் இந்த விஷயத்தில் தமிழக மக்களின் ஒரே கோரிக்கை.

நிரந்தர தீர்வு என்ன?
"தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசினால் மட்டும் பாதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகளும்தான் காரணம். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை மண்டபம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கடலோரப் பாதுகாப்புப்படையினரிடம் பதற்றத்துடன் சொன்னோம். ஆனால் பிரயோஜனமில்லை. அவர்கள் மத்திய அரசு செய்து வைத்த சிலைகளாகவே மாறி விட்டார்கள். மீனவர்களுக்கு எல்லைகள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சரியான தீர்வாக இருக்காது. இரு நாட்டு மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடித்துக்கொள்ளலாம் என்பதே நிரந்தரத்தீர்வாக இருக்கும். பாரம்பரியமாக இரு நாட்டவர்களும் எங்கெங்கு மீன் பிடித்தார்களோ, அங்கேதான் இப்போதும் பிடிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? முன்பெல்லாம் முத்தரையர்களும், மீன்பரவர்களும் மட்டுமே மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் இன்றோ தேவர், செட்டியார், நாடார், பிராமணர்கள்கூட மீன்பிடித்தொழில் செய்து பிழைக்கும் காலமாக இருக்கிறது. உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட பதினெட்டு தமிழக மீனவர்களை அரை நிர்வாணத்துடன் நிற்க வைத்து கொடுமைப்படுத்தும் அராஜகமும் நடப்பதாக வேதனையான தகவல்கள் வெளியாகின்றன!" என்று கொதிப்பு அடங்காமல் கூறினார் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் கணபதி தேவர். -குமரகுரு










'

கலை
நன்றி தமிழக அரசியல் ...

Saturday, December 12, 2009

வேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு தமிழனின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரிகளுக்கே

மக்களே நம் முன் நல்லவன் போல் நடித்த விஜய், சில மாதங்களுக்கு முன் மேலும் பணம் சேர்த்து கொளவதற்க்காக, தமிழ் இனத்தினையே அழிக்க கங்கனம் கட்டி கொண்டிருக்கும் காங்கிரஸ், சோனியாவுடன் கை கோர்க்க சென்றான், அங்கு தலைவர் பதவி கிடைக்காததால் திரும்பி வந்து எனக்கு காங்கிரஸ் கொள்கைகள் பிடிக்கும் என்று சொல்லி அதன் கொள்கையான அனைத்து தமிழர்களையும் கொல்வதற்கு சம்மதம் தெரிவித்தான். அதுவே தனது விருப்பமாகவும் தெரிவித்தான்.

இன்று சன் பிக்சர்ஸ், விஜய் ஆண்டனி மற்றும் ரட்னே வுடன் சேர்ந்து நம்மிடமே பணம் பிடுங்க வருகிறான்.

வன்னி கை பற்றபட்ட போது சிங்களனை குதுகாலபடுத்த சிங்கள பாட்டின் மெட்டினை அப்படியே எடுத்து இதில் பயன்படுத்தி தமிழ் மக்களை மடையனாக்க நினைக்கிறான்.

இவன் படத்தை எந்த மானமுள்ள தமிழனும் பார்க்கும் முன் அங்கு வன்னியில் நடந்த அவலத்தினை ஒரு முறை நினைத்து பார்க்கவே தூண்டும்.

இந்த தமிழின எதிரிக்கு நாம் இந்த முறை கொடுக்கும் அடி பெரிய இடியாக இருக்க வேண்டும்.

Thursday, December 10, 2009

சீமானை கண்டும் ஒன்னுக்கு அடிக்கும் அம்பிகளும், தமிழின துரோகிகளும்

பிரபாகரன் போயிட்டார்ன்னு சொல்லியாவது தமிழ் மக்களின் கனவுகளை நசுக்கி விடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு இன்று சீமான் சிம்ம சொப்பனமாக தெரிவது வியப்பில்லை.

இவர் தமிழ் மக்களுக்கு பாடுபடுவது பிடிக்காமல், அம்பி முதல் ரோ வரை அனைத்து தில்லு முல்லுகளையும் பண்ணி பார்க்கிறது.

இனியும் தமிழனை எந்த அம்பிகளும், ரோ-க்களும் ஏமாற்ற முடியாது. அவரு தமிழனுக்காக பாடுபடுவது பொறுக்க முடியலை இந்த நாதாரி பயலுகளுக்கு.
அவர் மேலே களங்கம் கற்பிக்க என்னவெல்லாம் பேசறானுங்க. கொஞ்சம் சிந்தியுங்கடா தமிழன் தமிழனுக்கு குரல் கொடுக்கறான். இதுல எண்டா பொறாமை உங்களுக்கு.

Thursday, December 3, 2009

பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… தங்கர் பாய்ச்சல்

இலங்கை அகதிகளுக்காக ஒரு படம் ஒரு நடிகனும் முன்வரவில்லை - தங்கர்
ஆவேசம்!

எல்லோருக்கும் வாயில் நாக்கு இருக்கும். ஆனால் தங்கர் பச்சானுக்கு
சவுக்கே நாக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எப்போது யாரை நோக்கி
அது திரும்பும் என்றே தெரியாது.

சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த கார்த்திக் அனிதா படத்தின்
ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசிய பேச்சு, படத்தின் ஆடியோ
நிகழ்வுச் செய்தியைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டது.

விழாவில் தங்கர் பேசியது:

"நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே
கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க
முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணுங்கிறதுக்காக பல வருடங்கள்
போராடி ஒரு கதையை உருவாக்கினேன்.

இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்திச்சிருக்கேன். ஆனால் அதில்
நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை…"

"அந்தக் கதையை நான் சொல்லி, யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு
சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே
உட்கார்ந்திருந்தான்.

இப்ப தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ. தளபதின்னு
போட்டுக்கிறானுவ… மானங்கெட்ட பயலுங்க… இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே
கிடையாது.

இப்ப இந்த மேடையில சொல்றேன்… இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப்
பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன்
செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை
குனிகிறேன்…

அதுக்காக எல்லாரும் தீக்குளிச்சி சாவணும்னு நான் சொல்லல… அவனை மாதிரி
உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கத்துக்கங்க… என்றார்.

நங்கூரம் இணையத்திலிருந்து

http://www.nankooram.com/thankar-bachan

முத்தமிழ்வேந்தன்
சென்னை

Tuesday, December 1, 2009

ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

மாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..

சராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..

ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?

எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?

நன்றி
http://siruthai.wordpress.com/2009/12/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

சீமான் கர்ஜனை! மிரன்

 

 



                        மிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும்.

போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்... வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர்.

கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த "மாவீரர் நாள்' நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற சீமான், இந்நிகழ்விற்கு முதல்நாள் டோரொண்டோவில் கனடிய தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்த "பிரபாகரன் பிறந்த நாள்' நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஈழத் தமிழர்களும் இளைஞர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.

விழாவில் பேசிய சீமான், தனக்கே உரிய வழக்கமான பாணியில் ஏக கர்ஜனை செய்ய... உடனடியாக அவரை இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி விட்டது கனடிய அரசு. இந்த சம்பவத் தால் ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.

""இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வு, சர்வதேச நாடுகள் முழுமைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாவீரர் நாளில் ஈழ இளைஞர்களிடம் உருவாகும் தமிழீழ எழுச்சியை, அழிக்கத் திட்டமிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனது தூதரகம் மூலம் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்டது சிங்கள ராஜபக்சே அரசு.

அப்படிப்பட்ட ஒரு இணக்கப்பாட்டை கனடா அரசோடு இங்குள்ள சிங்கள தூதரக மும் போட்டுக் கொண்டது. ஏற்கனவே சிங்கள தூதரகத்திற்கும் கனடா அரசுக்கும் "நல்ல புரிதல்' உண்டு. அதன் அடிப்படையிலே, நிகழ்வு துவங்குவதற்கு முன்பே, கனடிய உளவுத்துறை யினர் மண்டபத்திற்கு வந்து கண்காணிக்கத் துவங்கினர். இதற்காக தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தனர். இங்குள்ள சிங்கள தூதரகம், இந்த அதிகாரியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

விழா துவங்கியதும் அந்த அதிகாரி சொல்ல சொல்ல ஒவ்வொரு நிகழ்வை யும் குறிப்பெடுத்தனர் உளவுத் துறையினர். சீமான் பேசிய பேச்சுக்களும் அவ்வாறே குறிப்பெடுக்கப்பட்டது. விழா முடிந்ததும் தனது அறைக்கு சென்றுவிட்டார் சீமான். அடுத்த சில மணி நேரங்களில் கனடா அரசு ஒரு முடிவை மேற்கொண்டு, அதிரடியாக சீமானை திருப்பி அனுப்பிவிட்டது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படியே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நினைக்கிறோம். மாவீரர் நாள் நிகழ் வில் சீமான் பேசுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை'' என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழ் இளைஞர்கள்.

அப்படி என்ன பேசினார் சீமான்?

""கனடாவிற்கு எதற்காக வந்தேன், தன்னிடம் பிரபாகரன் கட்டளையிட்டது என்ன, "நாம் தமிழர்' இயக்க செயல்பாடுகள், தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகம் என்பது குறித்தெல்லாம் உணர்ச்சி பொங்க பேசிய சீமான், ""புலிகளை ஒழித்து விட்டோம், போராட்டம் ஓய்ந்துவிட்டது, போர் நின்று விட்டது என்று நினைக்கிறான் ராஜபக்சே. உலகத்திலுள்ள தமிழர்கள் அத்தனைபேரையும் புலிகளாக மாற்றிவிட்டு... ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே. புலி என்றால் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சீமான் புலி. அவன் செத்தால் அவன் தம்பி புலி.

"சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்' என்பார் சோலை. அப்படி புலியானவர் களடா நாங்கள். அது தெரியாமல் போர் நின்றுவிட்டது, போராட்டம் ஓய்ந்து விட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றான். ஆனா அப்படி இல்லை. இனி என் தலைவன் (பிரபாகரன்) கையில் இல்லை போர். தம்பிகள் கைகளில் இருக்கிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டாயா? 100 சிங்கள பள்ளிகள் மீது குண்டு போட்டிருந் தோமேயானால்... தமிழச்சியின் மார் அறுக்கி றாயா? சிங்களச்சியின் மாரை அறுத்தெறிந்திருப் போமேயானால்... அவனுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும். சர்வதேச சமூகத்தாருக்கும் வலித்திருக்கும். இதையெல்லாம் செய்யாத என் தலைவன் பயங்கரவாதி. இதையெல்லாம் செய்த ராஜபக்சே ஜனநாயகவாதியா?

இனி மரபுவழி போர் கிடையாது. இனி எங்கள் நிலப்பரப்பிலும் (ஈழம்) சண்டை கிடை யாது. இலங்கை தலைநகர் கொழும்பில்தான் சண்டை. 1000 கரும்புலிகள் போதும். வாரத்திற்கு ஒரு குண்டு. ஒரு கரும்புலி சிதறினால் 1000 சிங்களவன் சிதற வேண்டும். தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பான் கரும்புலி. நாம் தனித்தனியாக சிறு நெருப்பாக சிதறிக் கிடந்தது போதும். ஒன்றிணைந்து ஒரு பெரு நெருப்பாக மாற வேண்டும். என் இழப்பு, சிங்களவனுக்கு 100 மடங்கு இழப்பு என்பது போல் நம் வெறி மாற வேண்டும். அவன் ஒரு வெட்டு என்றால் நாம் 100 வெட்டு வெட்ட வேண்டும் ஓய்ந்து விடக்கூடாது. விடுதலைப் போராட்டம் இனி நம் கையில்தான் இருக்கிறது. நம் வலிமையை பார்த்துதான் தலைவர் விரைவாக வருவதும் மெதுவாக வருவதும் இருக்கிறது. வேக வேகமாக களமாட தயாராகுங்கள் என் தம்பிகளே! விடுதலையை வென்றெடுக்க வேண்டும். தமிழீழம் உருவாகியே தீரும்'' என்றார் மிக ஆவேசமாக.

தனது 46 நிமிட ஆவேச பேச்சில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் தமிழகத்தையும் கடுமையாக விமர்சித்த சீமான், எது பயங்கரவாதம் என்பது குறித்தும் சர்வதேச சமூகத்திடம் நிறைய கேள்விகளை எழுப்பினார். சீமானின் ஆவேசத்தை கண்டு ஆர்ப்பரித்தது கனடாவில் உள்ள ஈழத் தமிழினம்.

""நிகழ்வில் பேசிய சீமானின் பேச்சுக்களை கனட அரசிடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட்டாக தர, அந்த ரிப்போர்ட்டின்படி "கனடா பார்டர்ஸ் சர்வீஸ் ஏஜென்சி' என்கிற இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட்டிடம் ஆக்ஷன் எடுக்கும்படி கேட்டுக் கொண்டது கனடா அரசாங்கம். அதன்பேரில் அதன் அதிகாரிகள், சீமான் தங்கியிருந்த அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கைக்குள் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும், சிங்களவர்கள் வாழவே கூடாது, ஒரு பள்ளிக்கூடம் மீது குண்டு விழுந்தால் 100 பள்ளிக்கூடம் மீது குண்டு வீசுவோம் என்று பேசியுள்ளீர்கள்.

எங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து இங்கு அசாதா ரணமான சூழலை உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், சீமானும் அவரது வழக்கறி ஞர் ஹதாயத் நஹாமியும் "30-ந்தேதி வரை விசா இருக்கிறது' என்று வாதாடினர். ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து திருப்பி அனுப்பினர்'' என்கின்றன கனடாவில் இருந்து கிடைக்கிற தகவல்கள்.

சீமானின் வழக்கறிஞரான ஹதாயத் நஹாமி, ""இமிக்ரேஷன் அதிகாரிகளின் நோக்கம், சீமானை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்பதிலேயே இருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக்கூடாது என்பதையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்'' என்கிறார்.

ஏர்போர்ட்டில் இருந்த சீமான், ""தமிழின விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது. அதனால் போராடும் எங்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவிட்டிருக்கிறது. ராஜபக்சே சகோ தரர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே, நான் பேசவிருந்த மாவீரர் நாள் உரையை தடுத்து நிறுத்தி கனடா அரசு என்னைத் திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் போராட்டம் தொடரும்'' என்றார் உறுதி தளராமல்.

-இளையசெல்வன்



 இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா?

                 னடாவில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சீமான் இனி வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற கவலை ஈழ ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் இமிகிரேஷன் அதிகாரி கள் சிலரிடம் சீமானுக்கான சிக்கல் குறித்து பேசினோம்.

""வெளிநாட்டில் இருந்து வருகின்ற நபர்களை இரண்டு வகையில் தடுப்பார்கள் இமிக் ரேஷன் அதிகாரிகள். ஒரு நபர் தான் செல்லும் நாட்டின் கரன்சியை போதுமான அளவு வைத்துக் கொள்ளாமல் இருத் தல், போதுமான ஆவணங்கள் இல்லாமை, முறைகேடான ஆவணங்கள் உள்ளிட்ட தவறு கள் இருப்பின் விமான நிலை யத்தில் இருந்தே அந்த நபரை திருப்பி அனுப்பி விடுவார்கள். இதற்கு "ரெஃப்யூஸ்டு என்ட்ரி' என்று பெயர்.

ஒரு நாட்டுக்குள் அனு மதிக்கப்பட்டு அதன்பிறகு நடைபெறும் தவறுகளுக்காக சம்பந்தப்பட்ட நபரை திருப்பி அனுப்புவதை "டீபோர்ட் என்ட்ரி' என்பார்கள்.

சீமானைப் பொறுத்தவரை அவர் கனடா நாட்டின் விசா பெற்று அங்கு சென்றிருக்கிறார். அங்கே நடந்த கூட்டத்தில் அவர் பேசியவை கனடா சட்டப்படி குற்றம் என்பதால் அவர் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற நேரங்களில் பொது வாக சம்பந்தப்பட்ட நாட்டின் இமிக்ரேஷன் அதிகாரிகள் வெளி யேற்ற உத்தரவை தனியாக தயா ரித்து, எந்த விமான நிறுவனம் குறிப் பிட்ட நபரை தங்கள் நாட் டுக்கு அழைத்து வந்ததோ அந்த விமான நிறுவனத்திடம் கொடுப்பார்கள். அந்த விமான நிறுவனம் சம்பந்தப் பட்ட நபரை எங்கிருந்து ஏற்றிய தோ அங்கேயே இறக்கிவிடும்.

அந்த வகையில் சீமான் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இங்கே இந்திய இமிகிரேஷன் அதிகாரி கள், "என்ன காரணத்துக்காக உங் களை கனடா அரசு திருப்பி அனுப் பியது?' என்று சீமானிடம் விசா ரித்து அவரை அனுமதிப்பார்கள்.

சீமான் பாஸ்போர்ட்டில் அவர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் கனடா அரசு தன்னுடைய ஆவணங் களில் சீமான் பெயரை பிளாக்லிஸ்ட் செய்துவிடும். எனவே கனடா வைத் தவிர மற்ற நாடுகளுக்கு செல்வதில் அதிகம் சிக்கல் இருக் காது'' என்றனர்.

-சகா

~~
Thanks : Nakheeran
~~
 

--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"