Tuesday, December 1, 2009

ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

மாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..

சராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..

ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?

எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?

நன்றி
http://siruthai.wordpress.com/2009/12/01/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

0 Comments: