Tuesday, June 30, 2009

நொறுக்கப்படும் கோயில்கள்! சிங்கள மயமாகும் தமிழீழம்

மூன்று லட்சம் தமிழர்களையும் அவர்களது வாழ்விடங்களுக்கு செல்ல அனுமதிக்காமல் தடுப்பு முகாம்களில் சிறை வைத்துள்ள சிங்கள அரசு, ""கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து சிந்திக்க முடியும்'' என்பதனைத் தொடர்ந்து கூறிவருகிறது.

ஆனால் கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழினத்தின் தொன்மையான அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே ராணுவம் வீசிய குண்டுகளால் இங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. அதேசமயம், எஞ்சியுள்ள தமிழர்களின் கோயில், கலாச்சார பீடங்கள், ஆய்வு நிலையங்கள் என பலவற்றை அழித்துவிட்டு, அந்த இடங்களில் பௌத்த மதத்தின் ஆலயங்களையும் சிங்களத்தின் அடையாளங்களையும் நிர்மாணித்து வருகிறார் ராஜபக்சே.

சிங்கள பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய தலைவர் மேதானந்ததோரர், ராஜபக்சே கட்சியின் கொள்கை வகுப்பாளரும் சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பக்க ரணவக்க, சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கா ஆகியோரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத் துள்ளார் ராஜபக்சே.

இலங்கையில் உள்ள பௌத்த தொல்லியல் ஆய்வுக்குழு தேர்ந்தெடுத்து கொடுத்துள்ள இடங்களில் சிங்கள அûடாயளத்தை நிறுவும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்ற னர். தமிழர்களின் தொன்மை மிக்க நகரமான கிளிநொச்சியில், கடந்த இரண்டே மாதத்தில் பௌத்த விகாரத்தை அமைத்துள்ளனர்.

மேலும் கிளி நொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பெயர்களை மாற்றி சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி கிளிநொச்சியை கிரானிக்கா என்றும் முல்லைத்தீவினை மூலதூவ என்றும் சிங்களத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக ராணுவ கெஜட்டில் ஏற்றியிருக்கிறார் கோத்த பாய ராஜபக்சே. இந்த மாவட்டங்களில் உள்ள மற்ற இடங்களில் தமிழ்ப் பெயர்களையும் சிங்களத்திற்கு மாற்றிடும் பணியில் ஈடுபட சமயத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, June 29, 2009

தமிழர்களின் 1000 கிலோ நகைகளை கொள்ளையடித்த கயவர்கள்

புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடந்த தேடுதல் வேட்டையில் புலிகள் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியதாக சிக்கள ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையில் அவைகள் புலிகள் பதுக்கிவைத்த நகைகள் அல்ல. உக்கிரமான கடைசி கட்ட ராணுவத் தாக்குதலில் தங்களிடம் இருந்ததையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு இடம் பெயர்ந்த தமிழர்களின் நகை கள் அவை. மேலும் ""100 கிலோ என்பது பித்தலாட்டம், 1000 கிலோவுக்கும் அதிகமாகவே கண்டுபிடித்திருப்பார்கள். காரணம் புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் செழிப்போடு இருந்தார்கள்'' என்கிறார்கள் வன்னி மக்கள்.

தமிழனை ஏய்ச்சு பிழைக்கும் இந்த சிங்கள காடையர்களுக்கு இன்னும் உதவும் இந்திய துரோகிகளை என்ன சொல்வது.

Sunday, June 28, 2009

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிங்கள காடையர்கள் அட்டூழியம்

ராமேஸ்வரத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதிக்குள் மீனவர்கள் நுழைந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர்.

இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முடியாத மீனவர்கள் பலர் மீன்பிடிக்காமல் நள்ளிரவில் கரை திரும்பினர். இதனால் மீனவர்களின் படகில் 10 கிலோவிற்கும் குறைவாகவே இறால் மீன்கள் பிடிபட்டு இருந்தது.

இதுபற்றி மீனவர்கள் கூறும்போது "மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க சென்றோம்.கடலுக்கு சென்று கரை திரும்பும் வரை கச்சத்தீவு கடல் பகுதிக்குள் எங்களை இலங்கை கடற்படையினர் அனுமதிக்கவில்லை.

மூன்று கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை உள்ளே விடாமல் விரட்டியடித்தனர். நமது கடல் எல்லைக்குள்ளும் வந்து விரட்டி விடுகின்றனர். இதனால் மீன்பாடு இல்லாமல் கரை திரும்பியதால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் நாளை முதல் யாரும் கடலுக்கு செல்லமாட்டோம். அரசு எங்களை கண்டுகொள்ளாமல் உள்ளது. இலங்கை கடற்படையினரால் மீண்டும் படகுகளை கட்டி போடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது' என்றனர்.

கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்! தாமரை

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...

கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...

இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...

உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...

அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

பின்குறிப்பு :

உங்கள் குழந்தைகளை மட்டும்
சபிக்க மாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Saturday, June 27, 2009

ரவுடிகள் செய்தால் கொலை, ராணுவம் செய்தால் போர்!

அகராதிகளில் ஒளிந்து கிடக்கிற இதுபோன்ற அர்த்தங்கள் புரிபடாமல், வயிற்றில் பசியோடும் மனதில் நம்பிக்கையோடும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கிறார்கள் அப்பாவி தமிழர்கள். அவர்கள் அவலங்களுக்கு 'உச்' கொட்டி இரக்கம் தெரிவிக்கவும் நேரமில்லாமால் ஓடி கொண்டிருக்கிறார்கள் உலகத்தமிழர்கள்.

மேலும் படிக்க

Thursday, June 25, 2009

செந்தழல் ரவி அவர்களின் அட்டகாசம்

உங்களோட இந்த சேவை இந்த அளவு தமிழர்களுக்கு பயன்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. உங்களின் இந்த முயற்சி இன்று கஷ்டப்படும் தமிழர்களுக்கு ஒரு உதவியாக இருக்கப்போகிறது. ஆம் நீங்கள் பதிவு செய்த இந்த இடுகை இன்று தமிழின தலைவரை தட்டி எழுப்பி, இன்று இந்திய கதவினை தட்டி கொண்டிருக்கிறது.

இது விரைவிலே இலங்கை வரை சென்று நமது தமிழீழ மக்களுக்கு பயன்படட்டும்.

உங்களின் இந்த பதிவிற்காக என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இது போல் மேலும் சமூக நோக்குடன் பல பதிவுகளை நீங்கள் இட வேண்டும்.

வணங்காமண் கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...

உறங்காத கண்மணிகள்! உலுக்கும் உண்மைகள்!



உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவ வெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப் பட்டிருக்காது. விடுதலைப்புலிகளின் முன்னணி ராணுவ புலனாய்வுப் பிரிவின் பிள்ளைகளுக்குப் பெயர்தான் "உறங்காத கண்மணிகள்'. நிலவு காயும் நாட்கள்தான் இவர்களது தீபாவளி. கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் திறக்கும். காற்றோடு காற்றாய் போவார்கள். கணப்பொழுதில் வெட்டி மறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.



புலிகள் படைத்த ராணுவ வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது துல்லியமான திட்டமிடல். பிசிரற்ற திட்டமிடலுக்கு ஆதாரத் துணையாய் இருப்பது "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் உளவுத் தரவுகள். எழுத எளிதாக இருக்கிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அதிசயங்களில் ஒன்று.

ஒரு ராணுவ முகாமை தாக்கி அழிக்கும் முடிவினை தலைமை எடுத்த பின்னர் முதலில் புறப்படுவது உறங்காத கண்மணிகள். தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு, ஆறேழு மாதங்களுக்கு முன்னரே அவர்களது பயணம் தொடங்கும். பெரிய முகாமென்றால் ஆயிரத்திலிருந்து, ஐந்தாயிரம் ராணுவத்தினர் வரை இருப்பார்கள். முட்கம்பி வேலிகள், கண்ணிவெடி வெளிகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஐம்பது மீட்டருக்கு ஒரு காவல் அரண் இவை அனைத் தையும் கடந்துதான் ஓர் இரவுப்பொழுதில் ஊடுருவி உள் நுழைவார்கள்.

உள் நுழைந்தபின் அந்த முகாம் குறித்த முழு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்த பின்னரே அங்கிருந்து வெளியேறுவார்கள். எங்கெல்லாம் கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன, பீரங்கித் தளம் எந்த இடத்தில் இருக்கிறது, மின் இணைப்புகளுக்கான தலைமையிடம் எங்கிருக்கிறது, முன் அரணில் எத்தனை ராணுவத்தினர் நிற்கின்றனர், அவர்கள் என்ன ரக துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என அத்தனை தகவல்களையும் சேகரித்து முடிக்க பல வாரங்கள் ஆகும். எதிரியின் கண்களில் படாமல் அவர்களது நரம்பு மண்டலத்திலேயே குடியிருந்து இத்தனை நாட்கள் எப்படி அவர்களால் இயங்க முடிந்ததென்பதை அறிந்தால் நீங்கள் உங்களையுமறியாமல் வியந்து தலைபணிவீர்கள்.



இரவுகளில்தான் இவர்கள் இயங்குவார்கள். இயங்கவும் முடியும். பகலெல்லாம் இவர்கள் எங்கு பதுங்கியிருப்பார்கள் தெரியுமா? இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தும் கக்கூஸ் கழிவுகள் வந்திறங்கும் மலக் கிணறுகளில், ஆயிரம், ஐந்தாயிரம் ராணுவத்தினர் இருக்கும் மலக்கிணறு பற்றி எழுதவே நாற்றம், அசிங்கமாக அருவருக்கிறது. நினைக்க குமட்டு கிறது. அக்கிணறுகளுக்குள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்கியிருப்பதென்றால் எந்தளவுக்கு இலட்சிய உறுதியும், சுயம் அறுத்த அர்ப்பணமும் வேண்டுமென எண்ணிப்பாருங்கள். இதனை எழுதுகின்றபோதே அந்தக் கண்மணிகள் காவி யங்கள் படைத்த தமிழீழத் திசைநோக்கி விழுந்து தொழவேண்டும்போல் உணர்வெழுகிறது.

எதிரியின் பாசறைகளது கழிவுக் கிணறுகளில் பகல் முழுதும் நின்று சாய்ந்துறங்கி இரவெலாம் கண்விழித்துப் படம்பிடிக்கும் இவர்கள், ஊடுருவி உள்ளிருக்கும் நாட்களில் வாழ்வது வைட்டமின் மாத்திரைகளில். குடல்வற்றி சுருங்கி ஒட்டிப் போகாதிருக்கவேண்டி பிஸ்கட்டுகளும் ரஸ்க்கும் கணக்கு பார்த்துச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சிங்களம் பேசும் லாவகமும், கூடவே சுட்டித்தனமும் கொண்ட கண்மணிகளென்றால் நள்ளிரவுவரை வேவுத் தகவல்கள் சேகரித்துவிட்டு சிலமணிநேரம் ராணுவத்தினரின் கூடாரங் களிலேயே படுத்துறங்கி வேடிக்கை செய்வதும் உண்டாம். இயக்கம் இட்ட பணி முழுமையாய் முடிந்தபின் உள்துழைந்ததுபோல் ஓர் இறுக்கமான இரவில் வெளியேறுவார்கள். பிடிபட்டு கொடும் சித்ரவதைகளுக்குப்பின் கொல்லப்படும் துயரங்களும் நடப்பதுண்டு.

உறங்காத கண்மணிகள் கொண்டுவரும் தரவுகளின் அடிப்படையில் எதிரியின் முகாம் போலவே ஒன்றை கட்டியெழுப்பி உருவாக்கு வார்கள் புலிகளின் பயிற்சிப் பிரிவினர். முன்பொரு கட்டுரையில் தமிழீழ வரலாறு தந்த ஈடு இணையற்ற பயிற்றுவிப்பாளர் கடாஃபி அவர்களை கெஞ்சி மன்றாடி பயிற்சி முகாம் ஒன்றினைப் பார்வையிட்டது பற்றிக் குறிப்பிட்டி ருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். எந்த இடத்தில் என்ற விபரக் குறிப்பை இங்கு தவிர்க்க விரும்புகிறேன்.

பயிற்சி முகாம் நுழைவாயிலில் அவர்கள் பொறித்து வைத்திருந்த இரு வசனங்கள் மறக்க முடியாதவை. வாயில் முகப்பில் அவர்கள் எழுதியிருந்தது: ""கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.'' எத்துணை பெரிய உண்மையை மின்னிடும் சொல்லாடல். கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை. காட்டுவெளி போன்ற புதர் பரப்பில் துண்டோ, பாயோ இன்றி தரையில் படுத்துறங்க வேண் டும். பாம்பு வரலாம், தேள் கடிக்கலாம், எது வேண்டுமா னாலும் தங்கள் மீது ஊரலாம். நள் ளிரவு 12 மணிக்குத் தான் படுத்திருப் பார்கள். மூன்று மணிக்கு விசில் ஊதப்படும். மின் னல் வேகத்தில் துடித்தெழுந்து ஆயுதத்துடன் முடை நாற்றமெடுக் கும் இடுப்பளவு சாக்கடைக்குள் குதித்து நிலை யெடுக்க வேண்டும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு அசையாது அப்படியே நிற்கவேண்டும். உடலைவிட மன உறுதிக்குத்தான் இங்கு பயிற்சி. பயமும், பணிந்து போகும் குணமும், தாழ்வு மனமும் இயல்பிலேயே கொண்டதொரு இனத்தினது மரபணுவில் போர்க் குணம் ஏற்றிப் புடமிடும் பாசறை!

பயிற்சி முகாம் நுழைவாயிலில் பொறித்து வைத்திருந்த பிறிதொரு வசனம். ""ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.'' உபயம் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார்கள்.

""இந்த என் கையாலேயே எங்கள் செல்வங்களை ஏழு போராளிகளை நான் கொன்றிருக்கிறேன்'' என்று கடாஃபி சொல்லும்போதே அவரது உடல் அதிர்ந்து கண்கள் ஒருகணம் துயரத்தில் ஆழ்ந்ததை கவனித் தேன். "உறங்காத கண்மணிகள்' கொண்டுவரும் தகவல்களின் அடிப்படையில் எதிரி முகாமையே "டம்மி' உருவாக்குவார்களென்று சொன்னே னல்லவா? ஆனால் பயிற்சியோ நிஜ சண்டையாக இருக்கும். புலிகளே இரு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் சிங்கள ராணுவம்போல் நிலையெடுப்பார்கள்.

உதாரணமாக, உறங்காத கண்மணிகள் தந்த தகவலின் படி எதிரி முகாமின் முன் அரங்கில் மூன்று அரண் நிலை களும் அவற்றின் பின் முப்பது ராணுவத்தினர் ஏ.கே.47 துப்பாக்கிகளோடும் நிற்கிறார்களென்றால் அவ்வாறே இங்கும் புலிகள் அதே ஆயுதங்களோடு நின்று சுடுவார் கள். நிஜமாகச் சுடுவார்கள். அதனை எதிர்கொண்டு எப்படி அந்த அரண் நிலைகளை தாக்கி கைப்பற்றுவதென்பது தான் பயிற்சி. மின்னல் மழைபோல் பீறிப் பறந்து வரும் துப்பாக்கி ரவைகளின் தூரம் - வேகம் இவற்றை கணநேரத் தில் கணித்து தலையை தாழ்த்தியும் வலது இடது புறங் களில் வெட்டிச் சரிந்தும் தரையில் பொத்தென விழுந்து படுத்தும் அவர்கள் களமாடும் காட்சியினை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்குகிற வலு உங்களதும் எனதும் இதயங்களின் ரத்தக்குழாய்களுக்கு நிச்சயம் இல்லை.

கடாஃபி சொன்னார் : ""என்ட கையாலெ ஏழு போ ராளிகள் செத்தது தாங்கஏலா வேதனைதான். ஆனா அத்தகைய பயிற்சியாலெ நிஜ சண்டையில் எழுநூறு போராளிகளின் உயிரை நாங்கள் பாதுகாக்கிறோம்'' ஆம் கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை.

இதுவரை எழுதிவிட்டு இரவு 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலைவரை உறக்கம் வரவில்லை. குவார்ட்டர், பிரியாணி, கைப்பணம் இல்லா மல் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக்கூட தொண்டர்கள் இல்லை என்ற அரசியல் களப்பணி காட்சியை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கண்ட எனக்கு உறங்காத கண்மணிகளின் நினைவு உயிரைப் பிழிந்தது. முன்பொருமுறை நான் குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களுக்குச் சென்றவர்களுக்கும், ஜிகாத் போருக்குப் போனவர்களுக்கும் மரணத்திற்குப் பின் பரலோகப் பரிசு இருந்தது. ஆனால் தமது தமிழ் தலைமுறைகள் ஒருநாள் விடுதலைபெற்று சுயமரியாதையுடன் தமது தாயகத்தில் வாழ்வார்கள் என்பதைத் தவிர இந்த உறங்காத கண்மணி களுக்கு வேறென்ன இருந்தது? இத்துணை அர்ப்பணமும், தியாக உணர்வும் கொண்டு வரலாற்றுப் பேரதிசய மாய் எழுந்த ஒரு விடுதலை இயக்கத்தை உலகின் அத் தனைபேரும் சேர்ந்து முற்றுகையிட்டு, வதைத்து தகர்த் திட தமிழ் இனம் என்ன பாவம் செய்தது... நாமெல் லாம் கையாலாகாத வர்களாய் பார்த் திருக்கவல்லவா இக் கொடுமை நடந்தேறி யது... என்றெல்லாம் எண்ண மனம் உண்மையிலேயே ஆற்றுப் பெற முடியாமல் தவிக்கிறது.



கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பில் இருந்தபோது போராளி ஒருவர் பகிர்ந்து கொண்ட பிறிதொரு பதிவு இதனை படிக்கிற உங்களால் மரணம்வரை மறக்க முடியாத ஒன்றாய் இருக்கும். பெருமழை பெய்த ஒரு நாள். இடத்தின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. கஞ்சிக்குடிச்சி ஆறு என்று நினைக்கிறேன். சிறியதோர் ராணுவ முகாம் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டு திரும்புகிறார்கள் 17 போராளிகள். திரும்பி வரும்வேளை அக்காட்டாற்றில் பெருவெள்ளம். கடக்க முடியாதென்ற நிலை. ஆற்றின் அப்பக்கமாய் இருந்த தம் தளத்திற்கு "வாக்கி-டாக்கி'யில் பேசி கயிறு கொண்டு வரச்செய்து எப்படியோ இருபுறமும் இழுத்துக் கட்டி அதைப் பிடித்துக்கொண்டே ஆற்றைக் கடக்கிறார்கள். இவர்கள் நட்டாற்றை கடக்கையில் பிற முகாம்களிலிருந்து திரண்டு வந்த சிங்கள ராணுவத்தினர் கயிறை அறுத்துவிட 17 பேரையும் பெருவெள்ளம் அடித்துச் செல்கிறது. ஆற்றங்கரைகளை அறிந்தவர்களுக்குத் தெரியும், கரையோரங்களில் மரமும் இல்லை- செடியும் இல்லை என்பது போன்ற ஒருவகை புதர்கொடி இருப்பது. அப்படியொரு புதர்கொடியை ஒரு போராளி பற்றிப் பிடித்துக்கொள்கிறார். அடுத்த நிமிடம் வெள்ளம் அடித்துவரும் இன்னொரு போராளியும் அதே புதர்கொடியை பிடிக்க எத்தனிக்கிறார். முதலில் அக்கொடியை பிடித்து நின்ற போராளிக்குத் தெரிகிறது இரண்டு பேரையும் தாங்கும் வலு அந்த புதர்கொடிக்கு நிச்சயம் இல்லையென்பது. இரண்டாவது வந்த போராளி கொடியைப் பிடிக்க கையை நீட்டவும் முதற்போராளி, ""நீ பத்திரமா போய் சேர்ந்திடப்பா'' என்று சொல்லிக்கொண்டே தன் கையை எடுத்து பெருவெள்ளத்தோடு போகிறார். எங்கோ கடலுக்குள் போன அவரது உடல்கூட கிடைக்கவில்லையாம்.

தமிழர்களே, நண்பர்களே! கேளுங்கள், உரத்துச் சொல்கிறேன். அருட்குருவாகிய நான் அந்த புதர்கொடியினை முதலில் பிடித்தவனாய் நின்றிருந்தால் நிச்சயம் இன்னொருவருக்காய் என் கைகளை எடுத்திருக்கமாட்டேன். நம்மில் பைபிள், குர்ரான், நாயன்மார்கள், ஆழ்வார் களையெல்லாம் படிக்கிற எத்தனைபேர் இத்தகைய தியாகத்திற்குத் தயாராகியிருப் போம் என ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். கண்கண்ட எங்கள் தெய்வீகச் செல்வங்களே நீர் வாழ்ந்த திசை நோக்கி கரம் கூப்பினோம்.

(நினைவுகள் சுழலும்)

நன்றி நக்கீரன்

Wednesday, June 24, 2009

இந்திய தேசத்தின் அடிமைகள் தமிழர்கள்

முதல் அடிமை கருணாநிதி, அடுத்து வருவது நாம். நம்முடைய கருத்துக்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாத ஒரு தலைவன், பதவிகளில் மட்டும் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் கராராக இருப்பவர்.

வணங்கா மண் கப்பலை கூட இவரால் ஈழத்தமிழர்களுக்கு உதவ வைக்க முடியவில்லை. சும்ம நொல்லை காரணங்களை கூறிக்கொண்டு இந்த கப்பல் செல்வதினை மத்திய அரசு தடுத்து நிறுத்துகிறது, தமிழர்களுக்கு எந்த உதவியும் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

யாழில் இன்னும் ஊரடங்கு உத்தரவு , 6 மணிக்கு மேல் யாரும் வெளியே போகக் கூடாதாம்.

முள் வேலி கம்பிகளின் பின் 3 லட்சம் மக்கள் இன்னமும்.

தமிழா உனக்கு ஒரு சிறந்த தலைவன் வேண்டு அல்லது நீ எப்போதுமே அடிமையாகவே இருக்க போகிறாய்.

Tuesday, June 23, 2009

30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.

தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம்.

எந்த சுரணையுமின்றி வேலை,பிழைப்பு, குடும்ப வாழ்க்கை என்று குறுகிய வட்டத்திற்குள் மட்டுமெ இருக்க விழையவும் எந்த போராட்ட குணமுமின்றி யார் வாழ்ந்தால், செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்த்து விட்டவர்கள்.

தலைவர்கள் எவ்வழி.. மக்கள் அவ்வழி...

அப்படியே அதையும் மீறி நடந்த போராட்டங்களை கல்லூரி விடுமுறை, போலிஸ் தடியடி என்று திசை திருப்பி நீர்த்து போகச்செய்தவர்கள்.

தேர்தல் நேரத்தில் யார் ஈழ நிலைப்பாடு சிறந்தது என்று பாப்பையா பட்டி மன்றம் ந்டத்தி ஓட்டு கேட்ட்வர்கள்.

இன்னும் ஒரு சீட்டு கிடைத்தால் எதிர் அணிக்கு தாவ ரெடியாகி விட்ட அரசியல் அனுமான்கள்.


ஊடகங்களே பற்றி சொல்லவே வேண்டாம்.

திடுக் ரிப்போர்ட், அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு செய்தி என்று எல்லாவற்றையும் காசாக்க எல்லாவித கேடு கெட்ட செயல்களையும் செய்து அவர்களும் போலெரோ வில் சவாரி செய்ய எடிட்டர் காலத்தை எச்சையாக்கி விற்பனையாக்கும் விபச்சாரிகள்.

இன்னும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் ஏராளம்.

தெரிந்தே அவரவர் த்த்தம் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

நமக்கு தேவை அரசியல் கட்சிகள் அல்ல.

சுயநலமில்லாத நல்ல தலைவன். அதுவே அவசியம்.

அவன் சினிமாக்காரனாக இல்லாதிருத்தல் அதைவிட அவசியம்.

நன்றி வண்ணத்துபூச்சியார்

இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள் போராட்டம் -ஒர் பார்வை

மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)

தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியது தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்டதிற்கு மன்னிப்பு கேட்பாரா?

    மாற்றத்திற்கான வழி:

மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!

    இந்தி அரசியல் வியாதிகள்
    (கவலையளிக்கிறது-வருத்தமளிக்கிறது- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)

இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள் ஆகிவிடலாம்.உண்மையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக்கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை. நேரடியாக செயலில் இறங்குவதுதான் இவர்களது பாலிசி.மலெசிய தமிழர் போராட்டதில் இருந்து வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சிறையில் வாடிய போதும் இவர்கள் கூறியது மேற்கூறியவார்தைகள் தான். அதாவது இவர்களுக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் எ.டி.எம் மிஷின் தானே தமிழர்கள்!தமிழீழத்தில் இருந்து தினம் தினம் 100க்கும் மேல் நமது உறவுகளை குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தி அரசினை கண்டித்தும் இங்கு கக்கூசு கழுவுபவர்கள் முதல் காய்கறி கடைக்காரர்கள் வரை போராடி பார்த்தாகிவிட்டது ஆனால் இந்தி அரசு இம்மியளவும் நகர்கிற வழி தெரியவில்லை.தமிழினத்தின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன?இந்தி அரசின் சட்டதிட்டங்களும் மற்றும் அதை நடைமுறைபடுத்தும் இந்திய ஆட்சியாளர்களே ஆகும்!

இந்த இந்தி ஆட்சியமைப்பு முறையில் சராசரி ஒரு சிங்கும் ஒரு தமிழனும் ஒரு கோரிக்கை மனுவோடு புதுடெல்லியில் உள்ள எதாவது ஒரு மத்திய அரசின் அமைச்சகத்தின் முன் நிற்கட்டும் யாருடைய மனு முதலில் பரிசீலிக்கபடும் என்பது நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…ஏன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?

    மாற்றத்திற்கான வழி:

சுயநலமற்ற தலைவர்களை எம்.பிக்களாக தேர்ந்தெடுப்பது.. வெளியுறவு மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு பெறுவது.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும் ..சில காலத்திற்காவது அவர்களை முக்கிய பிரச்சனைகளில் காக்க வைக்கவேண்டும். அப்போதுதான் நாமும் மனிதர்கள் என உணர்வார்கள்.நம்முடைய வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியும்.

    தமிழக அரசியல் வியாதிகள்:(தந்தி-தபால்-பொதுகுழு- செயற்குழு -அனைத்துகட்சி கூட்டம்-மத்திய அரசிற்கு தீர்மானம்)

தமிழக அரசியல் வியாதியாவதற்கு மேற்குறியவைகள் இருந்தால் போதும் வியாதி ஆகிவிடலாம் எவன் தமிழ்நாட்டில் இருந்து தந்தியடித்தாலும் அது எங்கு செல்லும் என இங்குள்ள வியாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆகா தமிழ்நாட்டில் இருந்து தந்தி தபால் வந்ததா.. மிளகாய் பஜ்ஜியை அதில் வைத்து சாப்பிடுவோம் என இந்திகாரன் சாப்பிடுவான் என அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஏன் அதையே தொடர்ந்து செய்கிறார்கள்?இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!

    சரி இவர்களை மாற்ற என்ன வழி?

1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.

2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..

3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..

4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்

5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..

6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்

–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!

    மக்களுக்காக:(மானாட மார்பாட- கலக்க போவது யாரு- சீரியல்கள்-இலவசங்கள்)

தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.ஒரு சீக்கிய இனத்திற்காக போராடிய பிந்துவாலேவிற்காக ..எங்கே நம்மை விட்டு பிரிந்து போய்விடுவார்களோ என இந்தி அரசு அவர்களை கண்டால் நடுங்குகிறது. எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான். எந்த காரணம் சொல்லி இந்த அரசு ஈழ தமிழர்களை கொன்று ஒழித்ததோ அதே ஆயுதத்தை நாமும் ஏந்துவோம் ! பிரிவினைக்காக பிறகு! நம்முடைய பிரச்சனைகளுக்கு ஈழ தமிழரின் வாழ்வுரிமைக்கு!




நன்றி :
புரட்சிகர தமிழ் தேசியம், விழிதெழு தமிழா! விழிதெழு!

http://siruthai.wordpress.com/2009/06/21/&/

இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.

நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.

ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.

இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.

நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.

நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.

வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.

ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?

வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.

சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.

இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.

ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.

இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.

மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.

எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.

தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.

இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.

ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.

எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.

தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.

எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.

36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.

சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.

சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.

சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.
வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.

ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.

உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.

திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.

நேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.

நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.

இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?

ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.

பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.

ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.

அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.

ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.

நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.

இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,

அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.

அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?

உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.

இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.

எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.

நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.

நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.

அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.

அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.

அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.

இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.

ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.

உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.

சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.

அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.

பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.

பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.

ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.

ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.

ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.

அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.

எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.

1. சமாதான உடன் படிக்கை.
2. சுனாமி
3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.
4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;
5. கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.
6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.

என்பன மிக முக்கியமானவை.

இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.

ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.

எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.

அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.

இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.

ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.

அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.

அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.

குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.

மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.

டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.

இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.

ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.

விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.

சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.

மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.

இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.

இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.

ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.

இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.

சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.

அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.

முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.

எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.

இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.

இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.

ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.

எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.

அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.

உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.

ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.

இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.

இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.

நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.

ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.

மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.

தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.

எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.

இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.

அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.

இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.

உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.

ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.

வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.

நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.

எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.

எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.

எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.

நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.

நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.

இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.

இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;

கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.

இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி.

தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.

அன்புடன்
படைப் புலனாய்வுப் போராளி
அரவிந்தன்.

நன்றி நெருடல்

Monday, June 22, 2009

இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை எதற்கு இந்தியாவில்?: இயக்குனர் சீமான்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குனர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சீமான் பேசியதாவது:

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை அவுஸ்திரேலிய அரசு கேட்கிறது. அவுஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?

இன்றைக்கு பிரபாகரன் குறித்தும், புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், என்றார் சீமான்.

கொளத்தூர் மணி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி தடை செய்யப்பட்டால் நாம் வேறு பெயரில் இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அந்த இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது? அதை அரசே முடிவு செய்யட்டும்.

தமிழ் ஈழ பிரச்சினை தற்காலிகமாக ஓய்ந்து இருக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? இலங்கையில் தொடர்ந்து போர் நடக்குமா? என்ற கருத்துக்கள் நிலவுகிறது. ராஜபக்ச இன்னும் ஒரு இலட்சம் சிங்களவர்களை இராணுவத்தில் சேர்ப்பது என்று கூறுகிறார். அப்படி என்றால் அங்கு போர் தொடரும் என்று தானே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இலங்கையில் உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Sunday, June 21, 2009

விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன்

எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும்.

வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

கானகத்தில் உள்ள புலி ஆபத்தானது. அடிபட்ட புலி அதை விட ஆபத்தானது. விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் கொரில்லா முறையில் தாக்குவார்கள். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார்.

அவர் இறந்து விட்டார் என்பதை உலக தமிழர்கள் நம்பமாட்டார்கள். ஆயுதம் தாங்காத போராளிகளான நாம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும்.

மன்மோகன்சிங், சோனியாவை இனி ராஜபக்சே மதிக்கமாட்டார். சீனாவின் ஆதிக்கம் அங்கு (இலங்கையில்) வந்து விட்டது. விரைவில் இது அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா? - விகடன்

தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது.





விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எமது தலைவர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை சிறிலங்கா படை யினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார்' என்று அறிவழகனின் அறிக்கை தெரிவிக் கிறது.

பிரபாகரன் பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை உட னடியாக மறுத்து அறிக்கை விட்டவர்தான் அறிவழகன். அவர் பத்மநாதன் வழியில் இப்போது அறிக்கை வெளியிட்டிருப்பதால் உலகத் தமிழினம் பதைபதைப்பும் குழப்பமும் அடைந்திருக்கிறது. இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது பற்றி விடுதலைப்புலிகளின் சர்வதேச அளவிலான செயல்பாட்டாளர்களிடம் நாம் விசாரித்தோம்.

""இறுதிக்கட்டப் போரின்போது சிங்களப் படையினர் திணறிப்போகும் வகையில் ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, விடுதலைப்போராட்டத்தைத் தொடர் வதற்காக வெளியேறினார் எங்கள் தேசியத் தலைவர். சிங்கள அரசோ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது சொல்லிக் கொண்டிருக்கும் பொய் எங்களுக்கு ஒரு வழியில் நல்லதுதான்.

உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குவதுதான் இப் போதைய எங்களின் முதல்பணி. பிரபாகரன் இல்லை என சிங்கள அரசாங்கமே சொல் லும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்துக் கான தடை தேவையற்றது என்ற வாதத்தை வைத்து நாங்கள் தடையை நீக்கப் போராடு வோம். அந்த நிலைப்பாட்டின் அடிப்படை யில்தான் அறிவழகனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுவும் விடுதலைப் போரின் ஒரு யுக்திதான்.

ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை கிடையாது. இப்போது அங்கும் தடை விதிக்கக் கோரியது இலங்கை அரசு.

ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக நீங்களே சொல்கிறீர்கள். பிறகு எதற்கு தடை. நாங்கள் தடை விதிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. இதே அடிப்படையில் மேற்குலக நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கப் பாடுபடுவோம்.

சிங்கள அரசின் மனிதஉரிமை மீறல்கள் வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கி யுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்கள் இயக்கத்திற்கு உள்ள தடையை நீக்கி, விடுதலைப் போராட் டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதுதான் தற்போதைய எங்கள் திட்டம். நாடு கடந்த தமிழீழத் தாயகம் என்ற முறையில் செயல்படத் தொடங்கியுள்ளோம்.

தற்போதைய நிலையில் தமிழீழக் குடியரசை வெளிநாட்டில் நிறுவுவது என்றும் அதன் மூலமாக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெருக்குவது, புலிகள் மீது தடையில்லா உலகத்தை உருவாக்கியபின், எங்கள் தேசியத் தலைவரின் தலைமையில் இலங்கை மீது போர் தொடுப்பது என நீண்ட திட்டங்கள் உள்ளன. இவை சிதைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அறிவழகனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்த ஆஸ்திரேலியாவிலோ அல்லது புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் உள்ள கனடா விலோ நாடு கடந்த தமிழீழத் தாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை ருத்திர குமாரன் தலைமையிலான ஈழத்தமிழர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நேதாஜி இப்படித்தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். இன்று விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பலர் இதே முறையில் செயல்படுகின்றனர். உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் எங்களின் நாடு கடந்த தமிழீழக் குடியரசின் பணிகள் இருக்கும்'' என விரிவாகத் தெரிவித்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அளவில் எழுச்சி பெறச் செய் திருக்கிறது ராஜபக்சே அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரத் தாக்குதல்.

பிரபாகரன் இறந்தார் என்று சொல்பவர்கள் ஏன்

எப்படி இறந்தார் என்று சொல்ல மறுப்பதேன், இலங்கை அரசு காட்டியது அவரது உடல்தான் என்றோ அல்லது அது அவரல்ல என்று கூற மறுக்கின்றன.

இதுவே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது, இவர்கள் அனைவரும் இலங்கை அரசாலும், ரோ போன்ற அமைப்புகளாலும் இயக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் உள்ளது.

சரி பிரபாகரன் இறந்தான் என்றால் இலங்கை அரசு காட்டிய ஒருவரின் உடல் பிரபாகரனா இல்லையா என்பதினை ஏன் கூற மறுக்கிறார்கள். இலங்கை அரசுக்கு சாதகமாக நடக்க நினைப்பதாகவும் தோன்றுகிறது.

Saturday, June 20, 2009

வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவேண்டும்: இந்தியா, கருணாநிதி

'கப்டன் அலி' என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலிருந்து நிவாரணப் பொருள்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலட்சக்கண்கான மக்களைச் சென்றடைவதற்கான உதவிகளை இந்திய மத்திய அரசாங்கம் எடுக்கவேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த வணங்காமண் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பியனுப்பப்பட்டது. இந்தக் கப்பலிலுள்ள பொருள்களை இறக்கி அவை மக்களைச் சென்றடைவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவேண்டுமெனவும், அந்தக் கப்பலிலுள்ள பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் போன்ற சர்வதேச அமைப்பின் முன்னிலையில் இறக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை இந்தியா செய்யுமெனத் தான் நம்புவதாகக் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேநேரம், வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதிமொழி வழங்கியுள்ளார்.


புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய “கப்டன் அலி” என அழைக்கப்படும் வணங்காமண் கப்பல் கடந்த ஏப்ரல்மாத கடைசியில் பிரான்ஸிருந்து புறப்பட்டு மே மாதம் இலங்கையை வந்தடைந்தது.


வணங்காமண் கப்பல் இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை கடற்பகுதிக்கு இழுத்துவரப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


அக்கப்பலில் வெடிபொருள்கள் எதுவும் இல்லையென்றபோதிலும், நிவாரணப் பொருள்களை இறக்காமல் நாடு திரும்பிச் செல்லுமாறு கடற்படை அதிகாரிகள் கண்டன் அலிக் கப்பலுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து கப்டன் அலி கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு வெளிப்புறமாக நங்கூரமிட்டுள்ளது.

மனமார்ந்த நன்றிகள் கருணாநிதிக்கு, மேலும் உங்கள் உதவிகள் தொடர வேண்டும்.

நன்றி ராஜாராம்

Friday, June 19, 2009

எம் தலைவர் சாகவில்லை..செல்லப்பா அவர்கள் பாடிய பாடல்

செல்லப்பா இசையமைத்து பாடிய இந்த பாடலை கேட்கும் போது
மனதுக்கு நிம்மதியாக இருக்கின்றது .ஆனால் எம் தலைவர் பற்றிய செய்திகள் முரண்பட்டதாகவே இணையத்தளங்களில் வருகின்றது .இது வேதனையாக உள்ளது .இது “ரோ” அமைப்பின் வதந்திகளாக இருக்குமா ? உங்கள் கருத்து ?

ஈழத்தமிழன் (பிரியன்) wrote on 19 June, 2009, 10:12


நான் பாண்டியராஜ் தமிழகத்தில் இருந்து எழுதுகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். சில தமிழினத் துரோகிகளாலும், பல தமிழின எதிரிகளாலும் (மஹிந்த ராஜபக்சே) நம் தமிழினம் படு துயரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் தமிழீழம் தலைக்கும் அது தமிழை எதிர்பவரின் தலை தனை உடைக்கும். என்னால் என் சகோதரனுக்காக போராட இயலவில்லையே என்று மிகவும் வேதைனையாக இருக்கிறது. எனினும் இல்லயே தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன். நம் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களுக்கு என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி..

பாண்டியராஜ் wrote on 19 June, 2009, 11:06


http://www.nerudal.com/nerudal.8447.html

Thursday, June 18, 2009

நான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தமிழ்நாட்டில் எவன் நம்புவான்? - கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .

முதலில் செய்தியை படியுங்கள் :-
சென்னையில் நடந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ’’காங்கிரசுக்கு தமிழகத்திலே எவ்வளவு பெரிய வீழ்ச்சியை உருவாக்குவதற்கு இலங்கை பிரச்சினை எதிர்கட்சிகளுக்கு பயன்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை வைத்து தமிழர்களுடைய உணர்வு, உணர்ச்சி, போராட்டம்- தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற காரியங்கள்- இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு துணை போகிறது என்கின்ற ஒரு கற்பனையையும், அந்த காங்கிரஸ் அரசோடு தி.மு.க. சேரலாமா என்ற கேள்வியையும் எழுப்பி நம்முடைய பலத்தை குறைக்க எண்ணினார்கள்.

காங்கிரசை பொறுத்தவரையில் அது மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்கள் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள ராணுவத்திற்கு உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொய்களை இங்கே உள்ள மக்கள் நம்புகின்ற அளவிற்கு சொன்னார்கள்.

அதை சிலர் நம்பவும் செய்தார்கள். நாம் உண்மையிலே இலங்கை தமிழர்களுக்காக எங்கிருக்கின்ற தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்றவர்கள், பணியாற்றுகின்றவர்கள் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தார்கள்- கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- தமிழ்நாட்டில் எவன் நம்புவான்?

பேராசிரியர் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- அவருடைய பதவியை தூக்கி எறிந்ததை- இலங்கை தமிழர்களுக்காக நானும், அவரும் சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்ததை மறந்து விடுவார்களா? எனவே மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொன்ன பொய்யை யாரும் நம்பத்தயாராக இல்லை.
நமது கேள்விகள் /விளக்கம் இங்கே :
  • பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள் .
  • நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள் .
  • ஊரோடு எல்லாரையும் மழயில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும்
    " அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
  • ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள் .
  • மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள் .
  • பத்து முறைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது .
  • இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
  • கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு . போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள் .
  • ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய் .
  • அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய் .
  • முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை .
  • ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்ததிக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .



நன்றி mdmkonline.com

'சானல் - 4' , காணொளி, தமிழ் மக்களை அழிப்பதே இலங்கையின் நோக்கம்



http://www.channel4.com/news/articles/world/asia_pacific/fresh+claims+over+tamil+casualties/3217257

Fresh claims over Tamil casualties
Updated on 17 June 2009
By Jonathan Miller

A doctor working with injured and displaced Tamils in northern Sri Lanka tells Channel 4 News that there may be as many as 20,000 amputees among those who fled last month's routing of the Liberation Tigers of Tamil Eelam.

Eyewitnesses interviewed during a week-long undercover investigation for Channel 4 News, told of thousands of civilian deaths as government forces advanced on the Tigers' final stronghold.

The deaths, they said, were the result of government shelling.

The Sri Lankan president and senior government ministers have repeatedly denied causing a single civilian death in what the government had desginated a "no-fire zone."

International aid agencies believe as many as 100,000 civilians may have been trapped inside, under a fierce bombardment.

"I think every day a thousand people were killed," one of the very last to escape the tiny enclave told us. He was referring to the final two weeks of the conflict, during which the Sri Lankan government claimed not to have used heavy artillery.

"There were continuous shelling attacks," said the eyewitness. We have verified his identity as a man in a position of authority, but we are unable to reveal it.

Members of Sri Lanka's ethnic Sinhalese majority also expressed deep misgivings about the fate of the island's Tamil minority now that the Tamil Tigers have been so decisively defeated. Despite severe restrictions on access to camps for displaced civilians, evidence is emerging of maltreatment, despite a promise made by President Mahinda Rajapaksa in his "victory speech" to Sri Lanka's parliament.

Speaking in the Tamil language, the president promised equal rights for Tamils and took "personal responsibility" for protecting them.

"Our heroic forces," he said, "have sacrificed their lives to protect Tamil civilians." A senior Roman Catholic priest, who has worked with the displaced in the heavily militarised northern town of Vavuniya, said the triumphalism of Sinhalese was "very sad" to witness.

"There is no one to represent the aspirations of the Tamil community," he said. "They have a very uncertain future. It means they will live as a subjugated community, like under a foreign ruler."

One of the few senior members of the Tamil Tigers to have survived, Selvarasa Pathmanathan, its head of international relations, said yesterday that the rebels' struggle for a separate Tamil homeland would now continue from exile.

"The legitimate campaign of the Tamils to realise their right to self-determination has been brutally crushed through military aggression," said a statement, released from an unspecified location. Sri Lankans expressing concerns about the welfare and treatment of Tamil civilians -- or questioning the army's version of its final assault on the Tamil Tigers -- are branded unpatriotic, even traitorous.

Dr Wickramabahu Karunarathne, a left-wing politician and one of the few dissident voices in the Sinhalese community said: "The state media, every day, radio, papers, they classify us as traitors and they are rousing people against us."

Dr Karunaratne was the only interviewee prepared to talk openly on camera without having his face obscured and voice changed. One prominent Sinhalese journalist, Podala Jayantha, who had campaigned for greater media freedom, was abducted and severely beaten by unknown assailants, two weeks ago.

Amnesty International says that since 2006, 16 Sri Lankan journalists have been murdered, 26 assaulted, and many more detained. Foreign journalists have had their movements severely restricted and last month, our own accredited Asia Correspondent Nick Paton Walsh was deported.

Journalists and all independent observers were banned from the no-fire zone, during and after the fighting, so no independent assessments have been made of government claims not to have killed civilians. It has blamed any deaths on the rebels.

Journalists have also been unable to enter the hospital in Vavuniya, where thousands of wounded civilians are being treated. Channel 4 News successfully smuggled a small camera into Vavuniya and interviewed a Tamil doctor there.

"It is most sure that the numbers without limbs are over 20,000. Most of the injuries causing loss of limbs were from shelling," he said. The doctor alleged that conditions in the camps for displaced people around Vavuniya, are poor and that malnutrition and disease are rife.

"We were all gathered together recently by the government and we were told that if we told the figures of the sick and why people are dying to the foreign NGOs that we will be killed for doing this."

Response from the Sri Lanka government

Click on the image below to read the response in full.

Wednesday, June 17, 2009

மதுரையில் ஒலித்த அந்தக் குரல் டெல்லி வரை கூட்டணிக் குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டம் இரவில்தான் நடந்தது என்றாலும் வார்த்தைகள் உஷ்ணமாகவே வெளிப் பட்டன. பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ""நான் மதிக்கக்கூடிய வைகோ ஈழத் தமிழருக்கு எதிரான ராஜபக்சேவை முதல் எதிரியாகக் கருதாமல், கலைஞரை முதல் எதிரியாக சித்திரிக்கப் பார்க்கிறார். அவர் வழிநடத்தும் இயக்கம் போயஸ் தோட் டத்து இயக்கமாக நடைபெறுவதால் நாங்கள் தனியாக இயக்கம் நடத்த வேண்டியதாகிவிட்டது. நாங்கள் ஒரு காலமும் போயஸ் தோட்டத்தில் கால் மிதிக்க விரும்பாதவர்கள். தேர்தல் வரை தனி ஈழம் பற்றிப் பேசிய ஜெயலலிதா இப்போது எங்கே? கொடநாட்டிலா தனி ஈழம் காண்கிறார்?'' என்றார்.

சுப.வீ.யைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேச வந்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. ""உலகில் 500 கோடி மக்கள் வாழ்கிறோம். அவர்களில் பிரபாகரனைப்போல ஒரு போராட்டத் தலைவனை உங்களால் கூற முடியுமா? அதனால்தான் அவரை மாவீரன் என்று அழைக்கிறோம்.

இலங்கையில் 6 மாதத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது போர் நிறுத்தம் வேண்டும் என குரல் ஒலித்தும், இந்தியா போரை நிறுத்தச் சொல்லாதது மன்னிக்க முடியாத குற்றம். நாடாளுமன்றத்தில் எனக்கு வழங்கப்பட்ட நேரத்தில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று சொன்னேன். அந்த நேரத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் இல்லை. சோனியாகாந்தி இல்லை. 543 எம்.பி.க்களில் வெறும் 35 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர்'' என்று கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்திய திருமா, தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு பற்றி பேசத் தொடங்கினார்.

""என்னிடம் சிலர், இன்னமும் இந்தக் கூட்டணியில் இருக்கிறீர் களா என்று கேட்கிறார்கள். கலைஞ ருடனான கூட்டணியில் நான் தொடர்ந்து இருக்கத்தான் செய்வேன். ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். இதற்காக கூட்டணியில் என்னை வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் வைத்துக் கொள்ளட்டும். இல்லையென்றால் முடிவை அவர்களே எடுக்கட்டும். இதற்கு நானோ விடுதலை சிறுத்தைகளோ பயப்படப் போவதில்லை. இலங்கை யில் நான்காம் கட்டப் போர்தான் முடிந்துள்ளது. இன்னமும் போருக்குப் புலிகள் தயாராக இருக்கிறார்கள். ஐந்தாவது போரில் பிரபாகரன் தோன்றுவார். போராடுவார். அவர்தான் போரை வழிநடத்துவார். அவர் வெற்றி அடைவார்'' என்று திருமா உரத்த குரலில் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச வந்தபோதும் அந்த ஆர்ப்பரிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. கி.வீரமணி தனது உரையில், ""எனக்கு முன்னால் திருமா நிறைய பேசிவிட்டார். நாங்கள் ஆரம்பித்த இயக்கம் யாருக்கும் எதிரி அல்ல. வைகோவும் இங்கு வரலாம். எங்களுக்கு ஒரே எதிரி ராஜபக்சேதான். தமிழர்களை மதம், சாதி என பிரித்து வைத்து பார்க்கவேண்டாம். நாம் தமிழுணர்வுடன் தமிழர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்'' என் றார் அழுத்தம் கொடுத்து.

மதுரை பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசியவை, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியலைகளை உண்டாக்கி யிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கும் நிலையில், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என நாடாளு மன்றத்தில் திருமா பேசியதுடன் அதை மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்தியிருப்பதால் இது சர்ச்சையாக்கப்படும் என டெல்லி அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

கூட்டணி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஈழத்தமிழர் பிரச்சனையை இந்திய நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாகத்தான் எம்.பி. பதவி கிடைத்திருக்கிறது என நினைக்கிறார் திருமா. அவரிடமிருந்து தொடர்ச்சியாக வெளிப்படவிருக்கும் குரல்கள் காங்கிரசுக்கு நெருக்கடியை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நன்றி நக்கீரன்

Tuesday, June 16, 2009

"தேசிய வெட்கக் கேடு" மனித உரிமைகள் கண்காணிப்பகம்

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 பொதுமக்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கை அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தடுப்பு முகாம்கள், "தேசிய வெட்கக் கேடு" என அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி, ஒரு வருடத்திற்குள் அதிகமாக தடுப்பு முகாம்களை நிறுவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அங்குள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளாக அரசாங்கம் கருதுவதாக அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பொது மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் முகாம்களில் உள்ள விடுதலைப் புலி போராளிகளை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அரசாங்கத்தினால் நிவாரணக் கிராமங்கள் என அழைக்கப்படும் இடங்களிலும் பொது மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 300,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் உள்ள பொது மக்கள் தாம் தங்குவதற்கு வேறு இடங்கள் இன்றி முகாம்களில் வசிப்பதில்லை எனவும், அங்கிருந்து அவர்கள், வெளியேற அரசாங்கம் அனுமதிக்காத நிலையிலேயே முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முகாம்களில் அதிகரித்த சன நெரிசல் காரணமாக, முகாம்கள் பொது மக்கள் தங்குவதற்கான வசதியான சூழ்நிலையை கொண்டிருக்கவில்லை எனவும் எதிர்கால பருவ பெயர்ச்சி மழை காரணமாக மிகவும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து வாழ விரும்பும் பொது மக்களை, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

BBC Hard Talk Interview Erik Solheim

http://www.vakthaa.tv/play.php?vid=4441

Monday, June 15, 2009

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982-ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது.

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!

1986-ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

1986-ல் சென்னை போலிஸ் கமிசனர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!

அந்த அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ.3 லட்சம்.

அந்த அமைப்பின் இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே 18-ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982-ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986-ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!

இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!

இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

Courtesy : Netrikkan
Source : Yahoo Mail

Last update : 12-06-2009 06:46

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ"

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதி நோக்கத்துடன், ஆங்கில, தமிழ் ஊடக வலையமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இந்தியாவின் வெளியக உளவு அமைப்பான "றோ" நிறுவனம் இறங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.


இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்றஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், "றோ" நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


இதனிடையே, தென்தமிழீழமாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.


இதுதொடர்பாக தென்தமிழீழத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள், கடந்த ஒரு வாரகாலப்பகுதிக்குள் தமது அரசியல்துறைப் போராளிகள் எவரும் எவ்விதமானஅறிக்கைகளையும் வெளியிடவில்லை என்று, திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

Sunday, June 14, 2009

தமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்து வைப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறீலங்கா அரசு சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது:

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறீலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை உடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

வடபகுதியில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறீலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. குடும்பங்களாகவும் மக்கள் படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அனைத்துலக சட்டங்களை மீறும் செயலாகும்.

இந்த வருடத்தின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் தமது இடங்களுக்கு செல்லலாம் என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும்போது அவர்கள் மக்களை காலவரையறையின்றி தடுத்துவைக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற கருத்துக்கள் தோன்றியுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள மக்களும் இலங்கையில் உள்ள ஏனைய மக்களின் உரிமைகளை கொண்டவர்கள். இடம்பெயர்ந்த மக்களில் இருந்து விடுதலைப் புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டாலும், கைது செய்யப்படுபவர்கள் எழுந்தமானமாக தடுத்து வைக்கப்படுவது அனைத்துலகத்தின் விதிகளை மீறும் செயலாகும்.

தேவையற்ற முறையில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை தடுத்தல் கூடாது. அதாவது, கைது செய்யப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்

ஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ‘புலிகளுக்கு வீரவணக்கம்’ என்று காவடி எடுத்துள்ளார்கள். ’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.

என்ன தான் இவர்களது அரசியல்? இவர்கள் உண்மையில் யார்? ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன? இவர்கள் உண்மையிலேயே ‘புரட்சி’யாளர்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன? இவர்களை இயக்குகின்ற சக்தி எது?

யார் இந்த ம.கஇ.க. ?

‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ (ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.

பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ‘தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ‘சாகசங்களை’....

இட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோர்க்கும் ‘ராஜதந்திரம்’

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்

இந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ‘இந்தியா நமது நாடு’ என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ‘நடிகர்கள்’. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்பார்கள். ‘ஒ.. அப்படினா என்னங்க..’ என்று யாராவது கேட்டால், ‘இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது’ என்பார்கள்.

இந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இவர்களுக்கு தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதும் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களைப் போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.

ஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

ஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ‘பேனர்’ பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ‘பிழைப்புவாதிகள்’ என்று முத்திரை குத்தும் இவர்கள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ‘வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்’ என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.

தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் அங்கு இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.

ஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத ம.க.இ.கவினர், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.

ஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழன்’ என்று இவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் ‘தமிழின பிழைப்புவாதிகள்’. ஆனால் இவர்கள் ‘தமிழர்களே சிந்தியுங்கள்’ என்று துண்டறிக்கை அடிப்பார்கள்; சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ‘தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி’ என்று கூறுவார்கள்.

‘தமிழ்த் தேசியர்கள்’ யார்?

வாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ‘புரட்சி’யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா?

தேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ‘இலங்கை’த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

அவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது ’தமிழ்த் தேசியம்’ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசியவாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.

இவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ‘தமிழ்த்தேசிய’த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.

மேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.வினர் இவர்கள் பேசுவது தான் ‘தமிழ்த் தேசியம்’ என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.

அந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.

பெரியார் தி.க.

தமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தேர்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.

‘செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல’ என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது ம.க.இ.க.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ‘வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று மட்டும் பரப்புரை செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.

உண்மையான ‘தமிழ்த் தேசியம்’ எது?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

பெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

ம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று குறிப்பிடுகின்றது?

‘இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா?’ என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.

தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘தமிழ்த் தேசியர்கள்’ வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.

இவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது ம.கஇ.க.விற்கு தெரியாதா? என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ம.க.இ.க.வினர் தான் சுட்டிக் காட்டி பதிலெழுத வேண்டும்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்றே தோன்றுகிறது.

வெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.

இந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.

இந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.

தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்?

பார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன?

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.

‘இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்’ என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ‘லாபம்’ பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ‘மேலாதிக்கவெறி’ தானா காரணம் என்று விளக்குமா?

தனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ‘சோசலிசத் தமிழீழம்’ என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.

ம.க.இ.க. கூறுவதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும..? இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ ?! இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..?

முதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன..? ம.கஇ.க. ‘தத்துவ’ புருடர்கள் விளக்குவார்களா..?

இது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.

எப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...!

- அதிரடியான் (athiradiyaan@gmail.com)


நன்றி : கீற்று
http://www.keetru.com/literature/essays/athiradiyaan.php