Sunday, June 14, 2009

ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்

ஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ‘புலிகளுக்கு வீரவணக்கம்’ என்று காவடி எடுத்துள்ளார்கள். ’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.

என்ன தான் இவர்களது அரசியல்? இவர்கள் உண்மையில் யார்? ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன? இவர்கள் உண்மையிலேயே ‘புரட்சி’யாளர்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன? இவர்களை இயக்குகின்ற சக்தி எது?

யார் இந்த ம.கஇ.க. ?

‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ (ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.

பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ‘தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ‘சாகசங்களை’....

இட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோர்க்கும் ‘ராஜதந்திரம்’

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்

இந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ‘இந்தியா நமது நாடு’ என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ‘நடிகர்கள்’. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்பார்கள். ‘ஒ.. அப்படினா என்னங்க..’ என்று யாராவது கேட்டால், ‘இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது’ என்பார்கள்.

இந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இவர்களுக்கு தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதும் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களைப் போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.

ஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

ஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ‘பேனர்’ பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ‘பிழைப்புவாதிகள்’ என்று முத்திரை குத்தும் இவர்கள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ‘வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்’ என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.

தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் அங்கு இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.

ஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத ம.க.இ.கவினர், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.

ஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழன்’ என்று இவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் ‘தமிழின பிழைப்புவாதிகள்’. ஆனால் இவர்கள் ‘தமிழர்களே சிந்தியுங்கள்’ என்று துண்டறிக்கை அடிப்பார்கள்; சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ‘தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி’ என்று கூறுவார்கள்.

‘தமிழ்த் தேசியர்கள்’ யார்?

வாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ‘புரட்சி’யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா?

தேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ‘இலங்கை’த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

அவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது ’தமிழ்த் தேசியம்’ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசியவாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.

இவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ‘தமிழ்த்தேசிய’த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.

மேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.வினர் இவர்கள் பேசுவது தான் ‘தமிழ்த் தேசியம்’ என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.

அந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.

பெரியார் தி.க.

தமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தேர்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.

‘செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல’ என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது ம.க.இ.க.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ‘வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று மட்டும் பரப்புரை செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.

உண்மையான ‘தமிழ்த் தேசியம்’ எது?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

பெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

ம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று குறிப்பிடுகின்றது?

‘இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா?’ என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.

தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘தமிழ்த் தேசியர்கள்’ வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.

இவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது ம.கஇ.க.விற்கு தெரியாதா? என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ம.க.இ.க.வினர் தான் சுட்டிக் காட்டி பதிலெழுத வேண்டும்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்றே தோன்றுகிறது.

வெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.

இந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.

இந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.

தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்?

பார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன?

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.

‘இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்’ என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ‘லாபம்’ பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ‘மேலாதிக்கவெறி’ தானா காரணம் என்று விளக்குமா?

தனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ‘சோசலிசத் தமிழீழம்’ என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.

ம.க.இ.க. கூறுவதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும..? இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ ?! இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..?

முதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன..? ம.கஇ.க. ‘தத்துவ’ புருடர்கள் விளக்குவார்களா..?

இது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.

எப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...!

- அதிரடியான் (athiradiyaan@gmail.com)


நன்றி : கீற்று
http://www.keetru.com/literature/essays/athiradiyaan.php

12 Comments:

Anonymous said...

தமிழ்ச்செல்வன், மாதவராஜ் போன்ற சுயவிருத்திங்கள பாருங்க. போதிமரத்துகீழெ உக்காந்து கம்யூனிசம் லெச்சர் அடிக்கானுங்க. ஈழதமிழனுங்க சாகறப்ப ஸ்ரீலங்கா ஒருநாடு தத்துவம் பேசின கயவானிங்க தமிழனுங்க செத்த பொரகு ரெத்தகண்ணிர் வடிக்கானுங்களாம். ஏலே எவனட ஏமாத்தரீங்கன்னு சொன்னா காமெண்ட விடமாட்டானுங்க. இவனுங்கலாம் கம்யூனிச்டு கவிதைப்பொறுக்கிங்க

Anonymous said...

புரட்சி இல்லா மார்க்சியம், யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் பு.ம.க.ட்ச்ச்.ச்ட்

மைக் மாமா said...
This comment has been removed by a blog administrator.
மைக் மாமா said...
This comment has been removed by a blog administrator.
நிலவு பாட்டு said...

அட மானங்கெட்ட சிங்கள காடையனே உனக்கு இனி என் பதிவில் பின்னூட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது. நீ என்று தமிழனை ஒரு மனிதாக மதிக்கிறாயோ அன்றுதான் உனக்கு அனுமதி வழங்கப்படும். நீ சென்று வரலாம்.

Anonymous said...

உலக உத்தமர்கள்(!) மகஇகவினருக்கு சரியான சாட்டையடி. இவர்கள் திட்டாத ஆளில்லை. இவர்களை திட்டுவதற்கும் ஒரு ஆள் வந்தாரே, அந்த வகையில் அதிரடியானின் வரவு நல்வரவு.

Anonymous said...

இட ஒதுக்கீடு பெறும் தேவர் மற்றும் வன்னியர் தலித் மக்களை சாதி ரீதியாக கொடுமைப்படுத்தினால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதற்கு தர வேண்டும்... இட ஒதுக்கீடு மாத்திரமே சாதியை ஒழித்து விடும் என்று நம்புகின்றீர்களா... ஆம் எனில் எப்படி என விளக்குங்கள்... இந்து ம‌த‌த்தை விட்டு வெளியேறுங்க‌ள் என‌ சொன்ன‌ அம்பேத்கார் த‌லித் ம‌க்க‌ளின் துரோகியா... தாங்க‌ள் அமைக்க‌ உள்ள‌ த‌னி ஈழ‌த்தில் சாதி என்ன‌வாக‌ இருக்கும் அத‌னை எப்ப‌டி ஒழிப்போம் என்று ஒரு வ‌ரி கூட‌ பேசாத‌ புலிக‌ள் புர‌ட்சியாள‌ர்க‌ளா....

இந்தியா ப‌ல்தேசிய‌ இன‌ நாடுதான்... ஆனால் அர‌சு அதாவ‌து எதிரி ஒருவ‌ன்தான்... எதிரின்னு ஒருத்த‌ன‌ முடிவு செய்தால்தான் போரிட‌ முடியும்... யார் எதிரினு தெரியாட்டி பேச‌ ம‌ட்டும்தான் முடியும்,, அதுவும் மாத்தி மாத்தி பேசுவோம்... த‌னித்த‌னியா புர‌ட்சி செய்வீங்க‌ன்னா எப்ப‌டி யாரை எதிர்த்து ன்னு சொல்லுங்க‌ பேச‌லாம்...ச‌ரி ங்க‌ த‌னித்த‌னியாவே செய்ற‌துன்னு ஒரு பேச்சுக்கு வ‌ச்சுக்குவோம்... இத‌ காசுமீர் ம‌க்க‌ள் ஏற்க‌ன‌வே போராடுற‌ ஒன்னுதான்... வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்க‌ள் போராடுற‌ ஒன்னுதான‌ இது... அவ‌ங்க‌ போராட்ட‌ம் நியாய‌ம்தான‌ அவ‌ங்க‌ த‌னிநாடு கேட்கும் உங்க‌ளுக்கு ந‌ண்ப‌னாக‌த்தானே இருக்க‌ முடியும்... ஆனா ஒரு நாள் கூட அதை ஆத‌ரிச்சு ஒரு ஆர்ப்பாட்ட‌ம் கூட‌ ஏன் நீங்க‌ ந‌ட‌த்த‌ல•... அது ச‌ரி புலிக‌ள் இந்தியா மாதிரி எதிரிட்ட‌ நாங்க‌ தான் ந‌ட்பு நாடு இல‌ங்கையால‌ உங்க‌ இறையாண்மைக்க‌ பாதிப்பு ன்னு சொல்லி காக்கா பிடிச்ச‌ மாதிரிதான் உங்க‌ க‌ண்ணோட்ட‌முமா...

வ‌ர‌த‌ராச‌ன் சொல்கின்ற‌ ஒன்றுப‌ட்ட‌ இல‌ங்கை வேறு ம‌க•இக‌ சொல்கின்ற‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை வேறு... சொல்ல‌ப் போனால் சுய‌நிர்ண‌ய‌ உரிமைதான் த‌னி ஈழ‌ம் என்ற‌ முடிவை விட‌ ஜ‌ன‌நாய‌க‌ப்பூர்வ‌மான‌து... அந்த‌ வ‌ர‌த‌ராச‌னுட‌ன் சேர்ந்துதான் த‌னி ஈழ‌ம் அடைவ‌த‌ற்காக‌ கோவையில் பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் த‌மிழின‌வாதிக்ள் ம‌ற்றும் பெரியாரிஸ்டுக‌ள்... இதுக்கு என்ன‌ செய்ற‌து... நீங்க‌ள்லாம் ஈழ‌த்துக்கு எதிரின்னு சொல்ல‌லாமா...

முத்துக்குமார் ஊர்வ‌ல‌த்துல‌ ர‌க‌சிய‌மாக‌ லேமினேச‌ன் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ புலிக‌ளின் ந‌டேச‌ன் கையோப்ப‌மிட்ட‌ க‌டித்த்தை ஊர்வ‌ல‌த்தில் தூக்கி வ‌ர‌ உத‌விய‌ அல்ல‌து திலீப‌ன் ப‌ட‌த்தை அச்சிட்ட‌ வெள்ளைநிற‌ டீ ஷ‌ர்ட்க‌ளோடு வ‌ன்னிய‌லிருந்து வ‌ந்த‌ வீர‌ர்க‌ளைப் போல‌ த‌ங்க‌ளை காட்டிக்கொண்ட‌ த‌மிழ‌க‌த்தின் த‌மிழ‌ன‌வாதிக‌ளின் த‌ங்க‌ங்க‌ளை விட‌ த‌ங்க‌ள‌து அர‌சிய‌ல் இன்ன‌து என‌ ம‌க்க‌ளுக்கு தெரிவிப்ப‌த‌ற்கான‌ தைரிய‌த்தோடு முன்வ‌ந்த‌ ம‌க•இக‌ அமைப்பின‌ர் ஜென்யூன் அர‌சிய‌ல் செய்த‌ன‌ர் என்றுதான் சொல்ல‌ முடியும். அத‌னை ம‌றைக்க‌ அதாவ‌து த‌ங்க‌ள‌து ப‌ல‌ம் என்ன‌ என‌ வெளியில் தெரிந்து விடும் என்ற‌ ப‌ய‌த்தில் சில‌ த‌மிழின‌ அமைப்புக‌ளும், ம‌க்க‌ளை அவ‌ர்த‌ம் உண்ர்ச்சித‌ள‌த்திற்கு மேல் உய‌ர்ந்து உண‌ர்வு த‌ள‌த்திற்கு உய‌ர்ந்துவிட‌க் கூடாது என்ற‌ உய‌ர்ந்த‌ குறிக்கோளோடு இருந்த‌ அமைப்புக‌ளின் கோரிக்கைதான் பேன‌ர் வேண்டாம் என்ப‌து.. முத்துக்குமார் சாவுக்கு முந்தைய‌ தின‌ம் வ‌ரை வீட்டுக்குள் முட‌ங்கிக் கிட‌ந்த‌ இவ‌ர்க‌ள் அத‌ற்கு பின்ன‌ரும் அத‌னை மாத்திர‌ம்தான் செய்வார்க‌ள் என‌த் தெரியும்,

அந்த சூழலில் பேனர் பிடித்து தங்களது அமைப்பின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வது தான் அமைப்புகள் என அறியப்படுவன செய்ய வேண்டியது... மாறாக அமெரிக்கன் கல்லூரியின் பிரிவு உப்ப‍ச்சார விழாவின் இறுதியில் செண்டிமெண்டாக மெழுகுவர்த்தி பிடிக்கின்ற வேலையால் சிறுநீர் அளவு கூட பிரயோஜனம் கிடையாது....

உங்க‌ கூட்ட‌த்துக்கு ம‌க•இக‌ தோழ‌ர்க‌ள் வ‌ருவ‌து அவ‌ர்க‌ள‌து அர‌சிய‌லின் மேல் உள்ள‌ ஆணித்த‌ர‌மான‌ ந‌ம்பிக்கையால்தான்... அது ச‌ரியான‌து என்ப‌தால் வ‌ருகிறார்க‌ள்... உங்க‌ அர‌சிய‌ல் ச‌ரியாக‌ இருந்தால் நீங்க‌ அவ‌ர்க‌ள் ந‌ட‌த்தும் கூட்ட‌த்துக்கு போங்க‌ளேன்... ஆயிர‌ம் க‌ருத்துக்க‌ள் விவாதித்துப் பார்த்துதானே ஒருவ‌ர் ந‌ல‌ல கருத்தை தேர்வு செய்ய‌ முடியும்... ஏன் இதுல‌ கூட‌ உங்க‌ள‌து தோழ‌ர்க‌ளுக்கு அறிவுக்கான‌ ஜ‌ன‌நாய‌க்த்தை வ‌ழ‌ங்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள்.... அறிவுக்கும் அறிவு போன்ற‌ மூட‌த்த‌ன‌த்துக்கும் உள்ள‌ வித்தியாச‌த்தை ம‌க்க‌ள் புரிந்து கொள்ள‌ முடிய த்தான் அங்கு அவ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள்...
-mani

Anonymous said...

தேச‌ம்னு ஒன்னு இருந்தாதான் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ முடியும்... அய்ய‌ய்யோ என‌ன் க‌ண்டுபிடிப்பு... வ‌ர்க்க‌ போராட்ட‌ம்கிற‌து உங்க‌ ஈழ‌ம் பெறுவ‌து போல‌ பிர‌பாக‌ர‌ன் விருப்ப‌மோ, இந்திராவின் ரா அமைப்பின் விருப்ப‌மோ ப‌சார்ந்த‌து அல்ல•.. அது புற‌வ‌ய‌மான‌து... இப்போதும் எல்லா இட‌த்திலும் ம‌னித‌ர்க‌ள் உயிரோடு இருக்கும் புராத‌ன‌ பொதுவுட‌மை ச‌மூக‌த்துக்கு அடித்த‌ க‌ட்ட‌த்துக்கு வ‌ந்த‌ அனைத்து இட‌த்திலும் வ‌ர்க்க‌ போராட்ட‌ம் ந‌ட‌ந்து கொண்டுதான் இருக்கிற‌து... அத‌ன் வ‌ர‌லாறு இர‌ண்டாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும் முற்ப‌ட்ட‌து... சேன‌நாய‌க்கா இட‌மிருந்து துவ‌ங்கிய‌து அல்ல•.. ச‌ரி அப்ப‌ ஓ த‌மிழ்நாட்டுல‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம் ந‌ட‌க்க‌ல்... ச‌ரி இத‌ க‌ண்ணாடி க‌ழ‌ட்டாம‌ யாரும் ப‌டிக்க‌ முடியாதுதான்... த‌மிழ்நாட்டில் உள்ள‌ தேசிய‌ இன‌ விடுத‌லை என்ற‌ கொரிக்கை கூட‌ வ‌ர்க்க‌ப் போராஃட்ட‌த்தின் அங்க‌ம்தான்.... எப்ப‌டி இன்றைய‌ வ‌ர்க்க‌ போராட்ட‌த்தில் முதலாளித்துவ‌ ச‌மூக‌த்தில் முத‌லாளி தொழிலாளி என்று உள்ள‌தோ அதேபோல‌ ஓடுக்கும் தேசிய‌ம் ஒடுக்க‌ப்ப‌டும் தேசிய‌ம்னு அத‌ப்பிரிச்சு ஒடுக்குற‌ தேசிய‌த்தோட‌ பாட்டாளி வ‌ர்க்க‌ம் அதாவ‌து க‌ம்யூனிச‌ இய‌க்க‌ தோழ‌ர்க‌ள் தங‌க்ள‌து அர‌சின் இந்த‌ ஒடுக்குமுறைக்கு எதிராக‌ ஒடுக்க‌ப்ப‌டும் தேசிய‌ இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌த்தோடு இணைந்து போராட‌ வேண்டும்... இதுதான் ச‌ரியான‌ அணுகுமுறையும்... வெற்றியை சாத்திய‌ம்ஆக்க‌ கூடிய‌துமாகும்... ம‌ற்ற‌ப‌டி போராடுகின்ற‌ தேசிய‌ இன‌த்தின் சார்பாக‌ க‌ம்யூனிஸ்டுக‌ள் அனைவ‌ரும் போராட‌ முன்வ‌ந்தால்தான் அவ‌ர்க‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ள்... ஏனெனில் தேசிய‌ம் என்ப‌தே முத‌லாளிக‌ளின் கோரிக்கைதான்... அத‌னைப் பெற்றுத் த‌ருவ‌த‌ற்கு க‌ள‌ப்ப‌ணியாற்ற‌ அவ்வ‌ர்க்க‌ம் சாதார‌ண‌ வ‌ச‌தியுள்ள‌ கீழ்த‌ட்டு ம‌க்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தும்... தேசிய‌ம்தான் அவ‌ர்க‌ளுக்கு ச‌ந்தையை உறுதி செய்யும்... அத‌ன்மீதான‌ அவ‌ர்க‌ள‌து ஃஆதிக்க‌த்தை உறுதி செய்யும்... தேசிய‌ விடுத‌லய‌ இப்ப‌டி செய்யாம‌ல் வேறு வ‌ழியில் முனைப‌வ‌ர்க‌ளுக்கு துப்பாக்கி இருக்கும், ராணுவ‌ம் இருக்கும் ... ஆனால் க‌ண்ணோட்ட‌ம் தெளிவாக‌ இருக்காது... யாராவ‌து பார்த்து பிச்சை போட்டால்தான் இவ‌ர்க‌ளுக்கு த‌னிநாடு கிடைக்கும்.

ஈழத்தமிழினம் இந்த அளவுக்கு அழிவை சந்தித்த‍தற்கு காரணம் பிரபாகரன் அல்ல•. மாறாக தமிழக்த்தில் அவர்களை ஃஆதரிப்பது போல இருக்கும் உங்களைப் போன்ற தமிழின வாதிக்ள்தான் காரணம்... நாங்கள் எண்பதுகளில் அவர்களுக்கு டெக்ராடடூனில் பிரத்யேக பயிற்சியை ரா அழித்த காலத்திலிருந்தே விமர்சனம் செய்து வருகிறோம்.. நல்ல நண்பன் என்பவன் நேர்மையாக குறைகளை சுட்டிக் காட்டுவான்... அதனை நாங்கள் செய்திருக்கிறோம்... அதனை புரிந்து கொள்ளும் நிலையில் அன்றும் இல்லாத புலிகள் புதிய ஜனநாயக்த்தை வாங்கி தீ வைத்துத்த்தான் எரித்தார்கள்... மாறாக அவர்களுக்கு வழிகாட்டிய தமிழகத்தின் தமிழின‌வாதிக‌ள் இந்த‌ அழிவுக்கு பொறுப்பேற்க‌ மாட்டீர்க‌ளா... இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ளை ந‌ம்பியா செத்தார்க‌ள் புலிக‌ள்...

ம‌க•இக‌ இன்றைக்கு வ‌ரை துப்பாக்கி தூக்கி புர‌ட்சிக்கு போக‌லைங்கிற‌து இருக்க‌ட்டும்... ஏற்கென‌வே துப்பாக்கி தூக்கிய‌ இய‌க்க‌த்த‌ மை வ‌ச்சு ஜ‌ன‌நாய‌க‌த்த‌ புரிஞ்சுகிட்ட‌ நாட்டுல‌ இருந்த‌ நீங்க‌ எல்லாம் தேர்த‌ல் முடிய‌ட்டும் மௌனியுங்க‌ள் அப்ப‌டின்னு வ‌ழிகாட்டி விட்ட‌து யாரு... அது வைகோ வோ ராம‌தாசோ திருமாவோ அவ‌ங்க‌ளுக்கெல்லாம் தெரியாதா... போர் நிறுத்த‌ப்ப‌டாதுன்னு... அப்போ அதுல் சேர்க்க‌ வேண்டிய‌ ஏ1 அக்யூஸ்டுங்க‌ இவ‌ங்க‌ கிடையாதா..
-mani

Anonymous said...

ச‌ரி விசி பாம‌க‌ ம‌திமுக‌ எல்லாம் திருட்டுப்ப‌ச‌ங்க•.. நெடுமாற‌ன் இந்திய‌தேசிய‌த்தை ஏற்றுக்கொண்ட‌ த‌மிழின‌வாதி, பெதிக‌ வுக்கும் இவ‌ருக்கும் என்ன‌ வித்தியாச‌ம்... இவ‌ங்க‌ க‌ட்சிங்கிற‌ பேர்ல‌ எதையோ ந‌ட‌த்துறாங்க•.. அவ‌ரும் அப்ப‌டின்ன‌னு ஏதோ ந‌ட‌த்துறாரு... இருவ‌ரும் ஜெய‌ல‌லிதா கால‌ ந‌க்கியாவ‌து ஈழ‌த்த‌ அடைய‌ணும்னு துடிச்சாங்க•.. மே 16 க்கு அப்புற‌ம் அந்த‌ ஈழ‌த்தாயின் வாயும் மௌனித்த‌து... அவ‌ அப்ப‌டிதான் எங்க‌ளுக்கு தெரியாத‌ அப்ப‌டின்னு சொன்ன‌ அவ‌ங்க‌ கோவைல‌ த‌னிஈழ‌த்த‌ எதிர்க்கிற‌ சிபிஎம் ஐ ஆத‌ரித்து பிர‌ச்சார‌ம் செய்து ஜெயிக்க‌வும் வைத்திருக்கிறார்க‌ள்... கொள்கைன்னு ஒன்னு தெளிவா இல்லாட்டி இப்ப‌டி எதிரிக்கு ஆத‌ர‌வாக‌ கூட‌ நீங்க‌ போக‌ வேண்டி இருக்கும் கிற‌த‌ இப்ப‌வாவ‌து புரிஞ்சுக்கோங்க•..

ம‌ணிய‌ர‌ச‌ன என்ன‌ சொன்னாரு... காங்கிர‌சுக்கு போடாதீங்க‌ அப்ப‌டின்னாரு... அப்ப‌டியா அப்ப‌டின்னா தேர்த‌ல‌ புற‌க்க‌ணிங்க‌ ன்னு அர்த்த‌மா... அப்போ அன்னிக்கு ம‌ட்டும் அவ‌ருக்கு இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌த்து மேல‌ ந‌ம்பிக்க‌ வ‌ந்திருச்சா... ஓட்டுப் போட‌ போற‌ பெரும்பாலான‌ ம‌க்க‌ள் கூட‌ அன்னிக்குத்தான‌ ஃந‌ம்ம‌ நாடு ஜ‌ன‌நாய‌க‌ நாடுன்னு தெரிஞ்சுக்கிறாங்க•. அப்போ இந்த‌ அமைப்புல‌ அவ‌ருக்க‌ ந‌ம்பிக்க‌ இருக்கு... ஜெயா பேர‌ச் சொல்ல‌ வெக்க‌ப்ப‌ட்டுட்டு அப்ப‌டி சொல்லிருக்காரு.. ச‌ரி அப்போ அதிமுக‌ பிஜேபிக்கு தான‌ போட‌ச் சொல்றாரு... அவ‌ங்க‌ எல்லாம் ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளா... ஒரு வேள‌ 40 சீட்டு ஜெயித்திருந்தால் அதிமுக‌ ஈழ‌த்த‌ வாங்கித் த‌ருவ‌து இருக்க‌ட்டும்... இந்த‌ அழிவையாவ‌து த‌டுத்து நிறுத்த‌ முடிஞ்சிறுக்குமா... அல்ல‌து முய‌ற்சித்துதான் இருப்பார்க‌ளா... இவ‌ங்க‌ள‌ ந‌ம்பி ம‌ற்ற‌ போராட்ட‌ங்க‌ள‌ கைவிட்டு ம‌க்க‌ள‌ தேர்த‌ல் பாதைக்கு கூட்டிப்போன‌ திருட்டுப்ப‌ச‌ங்க‌ளுக்கு த‌மிழ‌ர்க‌ள் என்ன‌ த‌ண்ட‌னை கொடுக்க‌ணும்
....

சரிங்க உங்க கணக்குப்படி மணியரசனும் தியாகுவும் 24 காரட் னு வச்சுக்குவோம்... புலிகள் வெளிநாட்டுக் கொள்கையை இவர்கள் ஆதரிக்கவில்லை... அதாவது இந்திய ஆதரவு கொள்கை... அதாவது தமிழர்களுக்கு எதிராக நீங்கள் குறிப்பிடுவது போல பெரியார் பிரச்சினை காவிரிப் பிரச்சினையில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக செய்ல்படும் மத்திய அரசை புலிகள் அமைக்க உள்ள தனி ஈழம் ஆதரிக்கும்... அப்படின்னா தனி ழம் என்பது தமிழக அளவில் இவர்கள் நடத்துவஉள்ள தனித் தமிழ் குடியரசுக்கு எதிரான ஒன்ற்ஆகத்தானே இர்க்க முடியும்.. அப்புறம் எப்படி புலிகள ஆஃதரித்து அதன் மூலமா தங்களது திட்டத்துக்கே ஆப்பு வச்சுக்குற்ஆங்க•.. சரி ஆப்பு வைக்கிறது இவங்களுக்கு புதுசு இல்லையே... பெதிக கூடத்தான் புரட்சித்தலைவிக்கு வீரமணி அடிச்ச ஜிங்ஜாஃங் பிட்க்காம வெளிய வந்த அமைப்பு... இன்னிக்கு அந்த அம்மாட்ட‍ வாலாட்டிக்கிட்டு இல்லையா... அது தனிக்கதை... யார் உங்களை தமிழக மக்களுக்கான விடுதலையை தாலியறுத்தாவது புலிகளை ஆதரிக்க வேண்டும் என்ற தமிழ் மக்கள் சாஃர்பாக முடிவு எடுக்கும் உரிமையைத் தந்த்து..இதனை தெளிவு படுத்த வேண்டியவ்கள் தியாகுவும் மணியரசனும்தான்...
-mani

Anonymous said...

இந்திய மேலாதிக்கமும், அதற்கு காரணமான உலகச் சூழலின் அணிமாற்றங்களையும் புரிய அகவயமாகவே யோசிக்க கூடாது... புற உலகிங் என்ன நடக்கிறது என்பதைய்யும் கண்கொண்டு பார்க்க வேண்டும்,... சும்மா ஆரியம் திராவிடம் னு பேசி இத புறக்க்க‍ணிக்கிற எல்லாஃரும் பாப்பான்னு பேசிட்டு ராம பக்தையிடம் ஆசி வாங்கி ஈழத்த அடையுற கொடுமைய என்ன்ன்னு சொல்றது...

மலையாளி, கன்னடர், தெலுங்கர் எல்லாஃம் திராவிடர்களா அல்லது ஆரியர்களா அப்படின்னா ஏன் அவங்களுக்கு ஆதரவாக அரசு செய்ல்படுதுன்னு நீங்கத்ன் விளக்க வேண்டும்.. மீனவர்கள் ஆந்திரத்திலும் கர்நாடாகாவிலும் உள்ளனர்தான் ஆனால் அவர்களுக்கு இலங்கை புவியியல் ரீதியாக அருகில் இல்லாத்தால் எல்லை தாண்டினான் என்று கூறி வந்து இலங்கை சுட முடியாது...

சுட்டுக் கொஃல்லப்படும் மீனவனை மாத்திரமல்ல•.. கொடுமைக்குள்ளாகும் தலித் ஐயும் பார்ப்பன இந்தி அரசுதான் கொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அந்த கடலில் அவனைத் தொழில் செய்யாமல் தடுத்து எந்த ஐயரும் அய்யங்காரும் போய் மீன் பிடிக்கப் போகிறார்க்ள•.. அதப் பிடிக்க உலக முதலாளிகளை வரவைக்கிறார்கள் தரகுமுதாலாளிகாளன டாடா பிர்லா அம்மானி மிட்டல் போன்றவர்கள்...

நீங்கள் அமைக்க இருந்த்து சோசலிச குடியரசா... அப்போ மதம் பற்றியோ சாதி ஒழிப்பு பற்றியோ உங்க திட்டத்துல சொல்லி இருக்கின்றீர்களா... நான் படித்த புலிகளின் திட்டத்தில் காகண முடியவில்லை... தெரிந்தால் சொல்லுங்கள். படித்துக் கொள்கிறேன்.. த‌

தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டதாக ஆண்டன் பாலசிங்கம் 2002 இல் சொன்னதை நீங்கள் மறந்து விட்ட் செலக்டிவ் அம்னீசியா பறெறி என்ன சொல்ல ... ஜெயா சாகவாசத்தால் வந்த வினையா.....

மார்க்சியத்து மேல புலிகளுக்கு ஈர்ப்பு எப்போ இருந்த்து ரா அமைப்பை பார்த்தபிறகா அல்லது முன்னரா... இல்லேன்னா திருமணத்துக்கு தனக்கு ஒரு கொள்கை உமா மகேஸ்வரனுக்கு ஒரு கொள்கைன்னு வச்சாரே உங்க தேசிய தலைவர் அதுக்கு முன்னாடியா அல்லது பின்னாடியா...தான் மட்டும் டெலோ அமைப்புக்கு போய் கொஞ்ச காலம் இருந்து விட்டு திரும்ப வந்த பிறகும் மாஃத்தையா போன்றவர்களை இரண்டாம் நிலைக்கு தள்ளிய சித்துவிளையாட்டு நடந்த பிறகா அல்லது முன்னரா... இத பிரபாகரனே ஒருதடவ கூட சொல்ல்லியே அப்புறம் ஏன் இல்லாத ஒன்ன இருந்த மாதிரி சொல்றீங்க•.. அப்படி சொல்லித்தான பிரபாகரனக் கொன்னீங்களா... படுபாவிங்களா...

ஆரம்ப காலத்தில் பிரபாகரன் உமா கிட்டு பத்மநாபா போன்றோருக்க ஈராஸ் மூலமாக பயிற்சி வழங்கியவர்கள்
பாலஸ்தீனப் போராளிக்ள்.. எப்படி அவர்களிடம் உதவி வாங்கி விட்டு இசுரேல் ஆதரவு அமெரிக்காவை ஆதரித்தாவது விடுதலை பெற வேண்டும் எனச் சிந்திக்க முடிந்த்து... இதுதான தமிழினத்தின் அறமா...

முதலாளிக்கு விசுவாசமா இருப்பேன்னு எங்க மேனஜரு கூடத்தான் சொல்லிக்கிறாரு அதுக்காக முதலாளி அவருக்கு பிங்க் சிலிப் குடுக்காமலா இருக்கான்... அத தீர்மானிக்து அவரேட விசுவாசம் இல்லன்னு அவருக்கு புரியுது... உலகளாவிய ரிசஸ்சன் என்று... ஒரு விடுதலை இயக்கத்துக்கு மாறிவரும் உலகச் சூழல் கூடபுரிய முடியாத அளவில்தான் அவர்தம்மின் அரசியல் உள்ளதா...

இந்திய முதலாளி நலன் மட்டமல்ல•. ஏழு நாட்டு முதலாளிகளுன் நலன் அதாவது இலங்கைக்கு ஃஆதரவாகபோரிட்ட நாடுகளின் முதலாளிகளின் அரசின் நலனைச் சார்ந்த்துதான் போர்.. இலங்கையின் சுற்றுலாவும், அதாவது விபச்சாரமும், தேயிலையும், எண்ணெயச்த் துரப்பானங்களும் என கடந்த பல ஆண்டுகளாக தீண்டப்படாத சரக்கு தேங்கிக் கிடக்கிறது... ராணுவரீதியில் இந்திய்ஆவை மிரட்ட பக்கதுத் நாடுகளுக்கு இராணுவ தளம் அமைக்க தளம் தேவை... தொழில் அமைதி நிலவ வேண்டுமென்றால் முதலாளிகள் ஆஃண்டான் அடிமை முறையை விடக் கேவலமான முறைக்கு கூடத் திரும்புவார்க்ள•.. அந்த முதல்ஆளிகளுக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி தந்து ஒரு விடுதலை இயக்கம் வெற்றி பெற்றால் அந்த விடுதலையின் தரத்தை நினைத்தால் குலை பதறுகிறது...

உளவுப் பிரிவுக்கும் வைகோ வுக்கும் தொடர்பு உண்டு.. கள்ள்த் தொணியில் கிளம்பி ரா கொடுத்த கடித்த்தை பிரபாகரனிடம் சேர்ப்பித்த வரலாறு அனைவரும் அரிந்த்து... ரா புலிகளிடம் மார்க்சிய லெனிய இயக்கங்களிட்ம பழக்க் கூடாது என அறிவுறுத்திய எண்பதுகளைப் பற்றி அவர்களிடமே கேட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.. இதப்பத்தி விவராமான அப்படவிட் மனுக்களை ஜெயின் கமிஷன் அறிக்கையில் நீஙல்கள் காண முடியும்...

தமிழ் உணர்வு பீறிட எல்லாம் இல்லை... அப்படி பீறிட்டிருந்தால் கருணாநிதி சூத்திர ஆட்சியை கவிழ்க்க் யாழ்ப்பாணத்து பிள்ளைம்ஆர் சதி என்று புலம்பியிருப்பார்... அப்படி நடக்கவில்லை... அவரும் பயப்படாத்தால்தான் போட்டி உண்ணாவித்த‍ம் மநடத்தினார்

--MANI

Anonymous said...

என்னதான் இருந்தாலும் கட்டுரையாளர் cpiml soc தான் மக இக என்பதை தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டாரே. சீனாவிற்கு வால்பிடித்து வாய் கிழிய புரட்டு செய்யும் நவீன பார்ப்பனர்களை இன்னும் அதிகமாக உரித்தெடுக்க வேண்டும்

saravanan said...

athiradiyaan, pesama onga peyarai agathiyannu matthi vachikanga. eanna nalla padam edukkureenka, kekkuravan kenappayanna earuma madu earoplane votumma antha kathaiyala erukku.....