Sunday, October 25, 2009

உலகதமிழ் மாநாட்டில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை: வைகோ குற்றச்சாட்டு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை அருகே உள்ள அன்னூர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:-

இதுவரை நடத்தப்பட்ட 8 மாநாடுகளும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரிலே நடத்தப்பட்டது. ஆனால் இப்போது உலகதமிழ் செம்மொழி மாநாடு என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய மாநாடு உலகத்தமிழ் மாநாடு அல்ல.

இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்த கடை பிடிக்கப்பட்ட விதிமுறைகள், மரபுகள் இப்போது கடை பிடிக்கப்படவில்லை. ஒழுங்கு நியதியை புறந்தள்ளி விட்டு நடத்தப்படும் உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது.

சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக துன்பங்களையும், துய ரங்களையும் ஈழத்தமிழர்கள் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசு நடத்தும் உலக தமிழ் மாநாட்டை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.

இலங்கைக்கு பயணம் செய்த எம்.பி.க்கள் குழுவால் எந்தவித பயனும் இல்லை. அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் ஒருவர் கூட அகதிகள் முகாமிலிருந்து சொந்த இடத்திற்கு திரும்ப வில்லை.

கேரள பகுதியில் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசு அனுமதி கொடுத்தது தவறு. இதற்காக கேரள முதல்- மந்திரி 5 முறை டெல்லி சென்றுள்ளார். ஆனால் தமிழக முதல்- அமைச்சர் ஒருமுறை கூட டெல்லி செல்லவில்லை. உண்மை நிலை பற்றி விளக்கமும் அளிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ள முல்லைப் பெரியார் அணைக்கு பதிலாக புதிய அணை கட்டகேரள அரசு முயற்சித்து வருவது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவையும், இந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.

இவ்வாறு வைகோ கூறினார்.
உங்கள் அன்பை என்றும் மறவாத S.சுடலைமணி

{ கந்தக பூமியுலே வெந்ததே எங்க குலம் ... சொந்தத்தை தொலைச்சிட்டு பதறுதே பாதி சனம் ... }
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"We are not chauvinists. Neither are we lovers of violence enchanted with war. We do not regard the Sinhala people as our opponents or as our enemies. We recognise the Sinhala nation. We accord a place of dignity for the culture and heritage of the Sinhala people. We have no desire to interfere in any way with the national life of the Sinhala people or with their freedom and independence. We, the Tamil people, desire to live in our own historic homeland as an independent nation, in peace, in freedom and with dignity."
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." - Velupilllai Pirabaharan, Leader of Tamil Eelam
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From cricket scores to your friends. Try the Yahoo! India Homepage!

0 Comments: