Wednesday, October 14, 2009

ராசபக்சேவுக்கு கிடைத்த வைரம் கருணாநிதி, பச்சை தமிழின துரோகியாக திருமா

இன்று தமிழினம் எப்படிப்பட்ட ஒரு அழிவினில் இருந்தாலும் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாது தனது ஆட்சி ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதிக்கு கண்டிப்பாக இந்த தமிழின வரலாறில் ஒரு துரோகியாகவே பார்க்கப்படுவார் எத்தனை தலைமுறைகளுக்கும்.

இன்னும் தேவையானால் இன்னுமொரு குழுவினை அனுப்பி அங்குள்ள தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் சொல்லச்சொன்னால் அதையும் ரொம்ப நல்லாகவே செய்வார்கள்.

பல் பிடிங்கப்பட்ட பாம்பாக திருமாவளவன், இவரு அறிக்கையை கருணாநிதிட்ட தனிப்பட்ட முறையில் கொடுப்பாராம், அவரு அதை அப்படியே குப்பை தொட்டியில தூக்கி போடுவாராம். பச்சை தமிழின துரோகியாக தன்னை காட்டி கொள்கிறார். நாமல்லாம் இவரு இன்னமும் தமிழினத்துக்கு குரல் கொடுப்பாருன்னு நினைச்சிட்டு இருக்கனுமாம். என்ன ஒரு பித்தலாட்டம்.

இது மாதிரி துரோகிகளும், முட்டாள்களும் இருக்கும் வரை நம்மை மலையாளி, கர்நாடகா, தெலுங்கன், சிங்களன் எங்கேயும் மதிப்பு மரியாதை கிடைக்கப் போவதில்லை.

5 Comments:

நிலவு பாட்டு said...

தமிழின உரிமைகளை நிலைநாட்டி விட்டு வருவார்கள் என்று பார்த்தால், மீதமிருக்கும் தமிழனின் கோவணத்தையும் உருவுவதற்கு சிங்களனுக்கு பச்சை கொடி காட்டிட்டு வந்துள்ளது இந்த குழு

Anonymous said...

டேய் அவங்களும் உன்னை போல பொய் சொல்லி ஊரை ஏமாத்தியே பிழைப்பை ஓட்ட வேண்டுமா? திருந்துடா

அன்புடன் நான் said...

உண்மையை சொல்லியிருக்கிங்க... நாளை யார் வேண்டுமானாலும் நம்மை அடிக்கலாம்... அப்போதும் ஒரு குழு வரும்... வேடம்போட.

Barari said...

avan dhuroki ivan dhuroki anaiththu indiya thamizarkalum dhuroki veru yaarthaan ungal nanbar.innum kanavuleye irunthu anaivaraiyum pakaiththu kollaartheerkal.

Anonymous said...

செவ்வாய்க்கிழமை அலரி மாளிகைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.

இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்.