Saturday, January 10, 2009

சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முரசுமோட்டைப் பகுதியில் உள்ள சிறிலங்கா படையினரின் முன்னரங்க பகுதிக்கு இன்று சனிக்கிழமை பொதுமக்கள் சென்றபோது அவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிறுவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் தப்பியவர்கள் படையினரிடம் பிடிபட்டுள்ளனர். இவர்களின் உடலங்களும் படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

உடலங்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் பிடிபட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை.

http://www.puthinam.com/full.php?2b24OOA4b33C6Df04dctVo0da0eA4AA24d2ISmA3e0dC0Mtlce02f1eW2cc4OcY4be

1 Comment:

Senthil said...
This comment has been removed by the author.