Saturday, January 17, 2009

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை மறைமலைநகரில் 3வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொல்.திருமாவளவன் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டது. அதில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொல்.திருமாவளவன் மிகவும் சோர்வாகக் காணப்படுவதாகவும், அவருக்கு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக மதுரையில் இன்று வதந்தி பரவியதை அடுத்து, அவரது கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

0 Comments: