Friday, September 25, 2009

ஆண்டவனிடம் ஓர் மனு

அரசியல் நாடகங்கள்-அங்கே
அவிழ்கின்ற பொய் மொழிகள்
உரசிப் பார்த்தாலும் உடலுக்குள்
உயிர்கொள்ளும் இரத்தம் தான்

வன்னி மண் எங்கும் சுடுகாடாம்
எண்ணிலடங்கா சிதைந்த உடல்கள்
கண்கொண்டு பார்க்க முடியா காட்சிகள்
தன்னம்பிகையில் வாழ்ந்த உறவுகள்-இன்று
தறிகெட்டு ஓடும் அவல காட்சிகள்
தொலைகாட்சியில் பார்த்து பரசவப்படும்
பட்டத்து அரசியல் வாதிகள்

கண்ணீரின் சுவடுகள்-எங்கும்
கழிப்பிழந்த வதனங்கள்
மண்ணை மூடும் குருதி ஆறுகள்
விண்ணை தொடும் வீறிட்ட கதறல்கள்

நரி வேட்டை ஆடும்
நாசக்கார அரசு
கரி நாளாக தொடர்கிறது
கண்ணியமான வன்னி மண்

கண்பரப்பில் எழுதி வைத்த
கரும்புலிகளின் ஒளி வண்ணம்
மண் மீட்க போராடும்
மனம் தளராத மைந்தர்கள்
எரிகுண்டுகள் எப்போ நிற்கும்
ஏங்கும் பிஞ்சுகள்-அங்கு
நிலையான வாழ்வு கிடைக்குமா
நிம்மதி இழந்து தவிக்கும் புலம் பெயர் நாம்

விடுதலை கிடைக்குமா
விண்ணை நோக்கி கரம் குவிக்கும் நாம்
அமைதி வாழ்வுக்காய்
ஆண்டவனின் பதிலுக்காய்
நம்பிக்கையில் நாளை எண்ணுவோம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments: