Monday, March 9, 2009

தமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்

சமீபத்திய தமிழ்மண மாற்றங்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், இதில் எனக்கும் எந்தவித உடன்பாடும் இல்லை. நாம் தமிழின உணர்வாளர்களை இழந்துள்ளோம், அவர்களின் செய்தி மக்களிடம் அதிக அளவில் சென்றடைவது தடுக்கப்படுகிறது அதுவும் இத்தகைய ஒரு சூழ்நிலையில் வன்னி படுகொலை, பாராளுமன்ற தேர்தல் வரும் நேரம் இத்தகையதொரு முடிவினை தமிழ்மணம் ஏன் எடுத்தது, இதன் பிண்ணனி என்ன எதுவும் தெரியாது. கண்டிப்பாக இது துரோகத்தனம் எதுவும் இருக்காது என நம்புகிறேன்.

ஆனால் இது ஒரு தவறான முடிவு. தவறு செய்வது மனிதனின் இயல்பு. அனைவரும் தவறு செய்கிறோம்.

ஆனால் தவறு என்று உணர்ந்து அதை திருத்தி கொள்பவன் ஞானி, அதில் தவறேதும் இல்லை. அது அவனுக்கு நல்ல ஒரு பழக்க வழக்கத்தை கற்று கொடுக்கிறது.

தமிழ் மணமும் தன் தவறை உணர்ந்து ஞானியாக வர வேண்டும் என்பது என் கருத்து. அது மேலும் உங்களின் மகுடத்தில் ஒரு கல் பதிப்பது போன்றதே. நீங்கள் நினைப்பது போல் அது கோழைத்தனம் அல்ல, பின் வாங்குவது அல்ல. என்னுடைய தந்தை எனக்கு கற்று கொடுத்த பாடம், பின்வாங்குவதும், தவறினை திருத்தி கொள்வதுமே ஒரு மனிதனை உண்மையான மனிதானாக்குகிறது.

நான் எடுத்த முடிவுதான் சரி எவனும் என்னை கேட்கமுடியாது, புயலுக்கு எதிராக புல்லாகதான் வளைய வேண்டும்.

அதற்க்காக தடைசெய்யப்பட்டவர்கள் புயலாகவும், நீங்கள் புல்லாகவும் நினைக்கவில்லை. உங்களுக்கு ஆயிரக்கணக்கில் பதிவர்கள் இருக்கலாம், இவர்கள் ஒரு துரும்பே இல்லை உங்களுக்கு. ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியினை நினைத்து பாருங்கள். ஒரு ரூபாயாக பிரிக்கப்பட்ட பணங்களும் இன்று ஈழத்தமிழர்களின் வயிற்று பசியினை போக்குகின்றன. இவர்களின் ஒரு செய்தி ஒரு நல்லவனிடன்(ஓபாமா, ஹிலாரி கிளிண்டன், மெக்ஸிகோ, சீமான் போன்றவர்களிடம்) போய் சேர்ந்தால் அதனால் விடுதலை கிடைக்காதா என்ன.

நாம் அனைவரும் தமிழரே, தமிழ் இனத்துக்காக போராடுபவர்கள் நமக்குள் ஏன் இந்த கருத்து வேறுபாடு.

மன்னிக்கவும் குளிர் காய்பவர்கள் என்று தலைப்பு வைத்து விட்டு வேறு என்னமோ பேசறேனுங்க. எதுக்கு அநாவசியமாக துரோகிகளை பத்தி பேசணும் தமிழ் மணம் மாறிவிட்டால். தேவையென்றால் மற்றுமொரு பதிவில் காணாலாம்.

32 Comments:

Senthil said...

Hi Nilavupaatu,
I understand what you intend to say..
As Mike said in his comments,after Tamilmanam's decision, less number of people might/will know(read) the genocide carried out by srilankan govt..

One way to circumvent this is to form a groups.
That will be like a forum to discuss the issues
and steps we can take to make the world aware of
the ethnic cleansing carried out by Srilankan govt.

Forming a group with like minded persons
will allow us to go further.
I am sure atleast 50 persons will actively participate in it.
Please let us know your thoughts.

--Senthil

ARASIAL said...

நண்பரே...
தொடர்ந்து சரியான முறையில் உங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறீர்கள். நன்றி.

செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?

ஒரு திரட்டி என்ற முறையில் அனைத்தையும் திரட்டட்டும். சரியானதை வாசகர்கள் தேர்ந்து கொள்வார்கள்.

எஸ்.சங்கர்
என்வழி.காம்

Anonymous said...

//செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?

ஒரு திரட்டி என்ற முறையில் அனைத்தையும் திரட்டட்டும். சரியானதை வாசகர்கள் தேர்ந்து கொள்வார்கள்.

எஸ்.சங்கர்
என்வழி.காம்//

Correct. Readers will decide...

Renga
A reader.

Anonymous said...

/*செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?
*/

சரியாக சொன்னிர்கள்

எந்த உணவாக இருந்தாலும் வாய் வழியாகத்தான் சாப்பிட வேண்டும் உணவுகுழல் வழியாகத்தான் வயிற்றினை அடைய வேண்டும். இல்லை இது எனக்கு பிடிக்காது அதனாலே நான் பின்னாடி வழியாதான் இதை அனுப்புவேன் சொன்னால் அவனை பார்த்து சிரிக்கறதா இல்லை அழறதா.


சொந்தமாக எழுதறது கூட ஒரு வகையில் வலைகளில் மேய்ந்து அதை மென்று கொத்தி, கொதறி கொடுப்பதும் அடங்கும்.

இந்த நம் தமிழின உணர்வாளர்கள்(மைக்,.....) உண்மையாக நன்றியுடன் எடுத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அதுதான் பிரச்சனையே. உண்மைக்கு இப்போது காலம் கிடையாது.

ஒரு தமிழின துரோகி பல காலமாக போட்டதையே இரு மாதத்துக்கு திருப்பி, திருப்பி போடறான் அவனெல்லாம் ராஜா. மொத்தம் 30 இடுகை வச்சிட்டு இவன் பண்ற அட்டூழியம் இருக்கே அப்பா.

நிலவு பாட்டு said...

நண்பர்களே உங்களின் கருத்துகளுக்கு நன்றி, முடிந்தால் உங்கள் சொந்த பெயரில வந்து எழுதுவது நலம். முந்தைய பதிவிலே மதிபால என்னமோ நானே அனானி வந்து எழுதறேன் போல ஒரு கருத்தை விதைச்சார். மேலும் தமிழ் மணத்துக்கும் தெரியிம் நம்முடைய ஒவ்வொருவரின் குரலும்.

எனனை பொறுத்த வரை நீங்கள் சொல்லும் கருத்துகள்தான் முக்கியமே தவிர இருந்தாலும் சில சந்தேகப் பேர்வழிகள் இதையும் அரசியலாக்க பார்ப்பார்கள்.

Anonymous said...

எங்களைப் போல் ரூ10\-க்கு இண்டர் நெட் சென்டரில் தகவல் அனைத்தும் ஓரே இடத்தில் பார்க்க முடிந்தது, அயல் நாட்டில் சொகுசாக வாழ்பவனுகு என்ன கவலை நல்ல சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து எழுதனும் அதை அடுத்தவன் படிக்கணும். இவரு ஊருக்குள்ள மைனராட்டம் காலரை தூக்கி விட்டுகிட்டு நானும் பதிவர் பீத்திக்கனும்.

ஏழை என்று ஒருவன் இருக்கிறான் தமிழ்மணம் அதை நினைவில் கொள்ள வேண்டும்.

வருண் said...

மன்னிக்கவும், இந்தப் பிரச்சினையை வைத்து குளிர்காய்வது நிலவு பாட்டு என்னும் தாங்கள் தான்.

இந்த மாதிரி ஒப்பாரி பாட்டு பாடுவதிலேயே 10 வது பதிவு இது!

Anonymous said...

தமிழ்மணம் முகப்ப இன்னும் பாக்கலையா? சூடான இடுகைக்கு மேல செய்திபகுதி இருக்கு. இனி பழையபடி ஹிட்ஸ் வரும். புலம்பலை நிறுத்துங்கப்பா

நிலவு பாட்டு said...

/*தமிழ்மணம் முகப்ப இன்னும் பாக்கலையா? சூடான இடுகைக்கு மேல செய்திபகுதி இருக்கு. இனி பழையபடி ஹிட்ஸ் வரும். புலம்பலை நிறுத்துங்கப்பா
*/

தமிழ் மணத்திற்கு நன்றி, ஆனால் இது

யானை பசிக்கு சோள்ப்பொறிங்கற மாதிரி இருக்குது, முகப்பில் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் இப்படி மாற்றுகிறார்களே.

கருணாநிதி போர்நிறுத்ததக்கு பிராணாப்பை அனிப்பின கதைதான்.

நிலவு பாட்டு said...

/* மன்னிக்கவும், இந்தப் பிரச்சினையை வைத்து குளிர்காய்வது நிலவு பாட்டு என்னும் தாங்கள் தான் */

நண்பா நான் வேதனையுடன் எழுதும் பதிவுகள் உங்களுக்கு குளிர்காய்வது போல் உள்ளதா.

puduvaisiva said...

தோழா நிலவு பாட்டு வணக்கம்
தமிழ்மணத்தின் இந்த சிறிய மாற்றம் மன வருத்தமே அளிக்கிறது.
1.செய்தி பிரிவில் பதிவுகள் அதிக நேரம் இருப்பதில்லை.
2.புதிய பதிவின் முந்தைய பதிவு இந்த மாற்றதால் தெரிவதில்லை.
3.செய்தி பிரிவில் அளிக்கப்படும் பதிவுகள் சொற்ப நேரமே இருப்பதினால் இதனால் வாசகர் பரிந்தரையிலோ அல்லது சூடான இடுகையாகவோ மாற வழி இல்லை.
இது மிக பெரிய குறை.
இருந்த போதிலும் இன்று நான் இட்ட பதிவில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறியே பதிவு தொடங்கினேன். பொறுத்து பார்போம் இன்னும் பழைய மாறுதல் வரும் வரை.
பட்டினத்தார் பாடல் ஒன்று நாபகம் வருகிறது.
'':தன்வினை தன்னை சுடும்
ஒட்டப்பம் வீட்டைச்சுடும்'
குள்ள நரி கூட்டத்திற்க்கு காலம் பதில் சொல்லும்.
நண்பா ஆடுகள் நிறைந்த உலகம் பாதைகளை பின்பற்றுமே தவிர அவற்றிக்கு பாதை அமைக்க தெரியாது.
இதை கண்ணதாசன் பாடலில் காணலாம்.
"யாரை எங்கே வைப்பது என்று யாருகும் தெரியல...
அட அண்டகாக்கைக்கும் குயிலுக்குக் பேதம் புரியல.''
அன்புடன்
புதுவை சிவா

Anonymous said...

''வருண் said...
மன்னிக்கவும், இந்தப் பிரச்சினையை வைத்து குளிர்காய்வது நிலவு பாட்டு என்னும் தாங்கள் தான்.
இந்த மாதிரி ஒப்பாரி பாட்டு பாடுவதிலேயே 10 வது பதிவு இது!''

வலை நண்பர்களே
இந்த சைகோ வருண் யார்??
அவர் எழுதும் வலைபதிவு யாருக்குனா தெரியுமா??
அல்லது தமிழக அரசு கீழ்பாக்கம்பாக்கம் மனநல மருத்துவமனை பழைய நோயாளிகளுக்கு இனைய வசதி இலவசமாக வழக்கப்பட்டு உள்ளதா??
தெரிந்தவங்க சொல்லுங்கப்பா
வருண் கொசு தொல்லை தாங்கல..
எழில் வேந்தன்
காஞ்சிபுரம்.

Anonymous said...

நண்பர்களே!
மக்கள் செய்திகளை பெற பல தளங்களை(சங்கதி, தற்ஸ்தமிழ், புதினம், முதலிய) நாடுகின்றனர். செய்தியை பதிபவர்களும் அங்கிருந்தே அதை எடுத்து போடுகின்றனர். செய்திகள் முக்கியம்தான் ஆனால் தமிழ்மணத்துக்கு யாரும் செய்திகளுக்காக மட்டும் வருவதில்லை. ஒரு செய்தியை பல கோணங்களில் ஆராய்ந்து யாரேனும் எழுதியிருந்தால் அதை படிக்கவே வருகின்றனர். அப்படி வரும்போது ஒரே செய்தி பல தலைப்புகளில் இடைவிடாமல் ஒலிபரப்பாவதால் என்ன பயன்? அது சலிப்பையே ஏற்படுத்துகிறது. நேரம் விரயமாகின்றது. மேலும் ஓரிடத்தில் வந்த செய்தியை மீண்டும் பதிவது பதிபவர்களுக்கும் ஆக்கபூர்வமான வேலையில்லையே, அதை விடுத்து வந்த செய்திகளின் அடிப்படையில் கட்டுரை எழுதுங்களேன். இப்போது கூட பார்த்தீர்களானால் சூடான இடுகைகளிலும் வாசகர் பரிந்துறைகளிலும், பெரும்பாலானவை செய்திகளை ஒட்டிய அலசல்களே.
தமிழ்மணம் உலகத்தமிழர்களுக்கான ஒரு இலவச சேவை. அதை குறைகூறுவது ஒரு குறுகிய பார்வையையே காட்டுகிறது. ஹிட்ஸ் குறைவதர்காக வருத்தப்படவேண்டாம், நல்ல தளத்துக்கு நாங்கள் (வாசகர்கள்) தினமும் வருவோம். அப்படி ஒரு தளத்தை நீங்கள் அமைக்க முயற்சி செய்யுங்கள், வாசகர்கள் ஆதரவு எப்போதுமிருக்கும்.

எல்லாளன் said...

1.செய்தி பிரிவில் பதிவுகள் அதிக நேரம் இருப்பதில்லை.
2.புதிய பதிவின் முந்தைய பதிவு இந்த மாற்றதால் தெரிவதில்லை.
3.செய்தி பிரிவில் அளிக்கப்படும் பதிவுகள் சொற்ப நேரமே இருப்பதினால் இதனால் வாசகர் பரிந்தரையிலோ அல்லது சூடான இடுகையாகவோ மாற வழி இல்லை.
இது மிக பெரிய குறை.//

செய்திகளின் எண்ணிக்கை நாலு

கீழ் மூலையிலிருந்து மேல் மூலைக்கு மாற்றுவதா மாற்றம்

ஆகக் குறைந்தது முகப்பில் நடுவில் இரு பிரிவுகளாக பிரித்து இட்டால் ஏற்றுக்கொள்ளலாம் கரையில் அல்ல

ஏமாற்றம்

எத்தனைக்கு நாங்கள் போராடுவது

ஈழத்தமிழனின் சாபக்கேடு

Anonymous said...

நலம் விரும்பி sir please read below it is for you.

/*செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?
*/

R.Durai
T.Malai

Anonymous said...

இப்ப உங்க பிரச்சனை ஹிட்சு போச்சு, முகப்புல வர்ர பெருமை போச்சு, பிளாகுல் விளம்பரம் போட்ட சில பேருக்கு/ போட நெனச்சவங்களுக்கு வருமானம் போச்சு. இத வெளிப்படையா பேசுங்க.... எதுக்கு தியாகி போல பில்டப்பு. உங்க செய்தியெல்லாம் உருப்புடியா இருந்தா மக்கள் எப்படியுமே வருவாங்க. யாரும் வராதபோதே தெறியலியா நீங்க போட்ட மொக்கதாங்காம நொந்து போயிருந்த மக்கள் இப்ப நிம்மதியா இருக்காங்கன்னு... அவ்வளவு ஏன், பாதிக்கப்பட்ட பதிவர்களத்தவிர பொதுவா எத்தன பேரு உங்களுக்கு ஆதரவாய் எழுதியிருக்காங்க? அப்புறம் தமிழ்மணம் செய்யாத எதையும் நீங்க தமிழ் மக்களுக்கு, உங்களையெல்லாம் தமிழ்மக்களுக்கு அறிமுகம் செஞ்சதே தமிழ்மணம்தானே. அந்த விசுவாசம் கூட இல்லாம நொட்ட செல்லிக்கிட்டே இருங்க.... உங்க மிரட்சலுக்கு பயந்து தமிழ்மணம் முகப்புல இடம் கொடுத்த்துதான் தப்பு.
முத்துசாமி
கோவை

வருண் said...

***வலை நண்பர்களே
இந்த சைகோ வருண் யார்??
அவர் எழுதும் வலைபதிவு யாருக்குனா தெரியுமா??
அல்லது தமிழக அரசு கீழ்பாக்கம்பாக்கம் மனநல மருத்துவமனை பழைய நோயாளிகளுக்கு இனைய வசதி இலவசமாக வழக்கப்பட்டு உள்ளதா??
தெரிந்தவங்க சொல்லுங்கப்பா
வருண் கொசு தொல்லை தாங்கல..
எழில் வேந்தன்
காஞ்சிபுரம்.***

அனானி:

நானும் உங்களை மாதிரி அனானிமஸா வந்து உங்களை கண்டமேனிக்கு திட்டலாம்தான்.

என்ன செய்றது? நான் உங்களைமாதிரி கோழைகளிடமெல்லாம் வாய்ச்சொல்லில் வீரத்தை காட்டுவதில்லை!

உங்க ஊர்ல கொசு கருத்தெல்லாம் சொல்லுமா?!

ரொம்ப அதிசயம்தான், போங்க!

நிலவு பாட்டு said...

தம்பி வருண்/நலம் விரும்பி நீங்க பிரச்னையை திசைதிருப்ப வேண்டாம்.

நீங்கள் உண்மையான ஒரு தமிழனாக, புரிந்து கொள்பவனாக இருந்தாலொழிய உங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

அதாவது கிராமங்களில் தாழ்ந்த சாதியினரை வீட்டிற்குள் விடுவதில்லை, அப்படியே அவர்கள் வந்தாலும் அவர்கள் பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். அது போல் உள்ளது இந்த தமிழ்மண மாற்றம். திரட்டி என்பது திரட்டுவதற்கே, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பதற்கல்ல.

Anonymous said...

எப்படி கருணாநிதி அமைதியாக இருந்து தமிழனை பழி வாங்கினாரோ, அதே போல் இப்போது தமிழ் மணமும் தன் வேலையை காட்ட ஆரம்பிக்கிறது.

இதில் வேறு குடுமிகள் மற்றும் துரோகிகளின் நக்கல், நையாண்டி வேறு, என்னமோ தமிழ்மணம் எடுத்ததை ஆதரிக்கறேன் சாக்கில தமிழின உணர்வாளர்களை போட்டு தள்ள பார்க்கிறானுங்க.

செந்தில், கோவை

வருண் said...

***நிலவு பாட்டு said...
தம்பி வருண்/நலம் விரும்பி நீங்க பிரச்னையை திசைதிருப்ப வேண்டாம். ***

முதலில் அனானியாக வந்து அனாகரிகப் பதிவு செய்கிற முதுகெலும்பு இல்லா தர்களின் பதிவுகளை அகற்றவும்!

அப்போத்தான் நீங்க யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி பெறுவீர்கள்!

Anonymous said...

ஓ! ரோஷக்கார மக்கள்! ஒருவேளை இட்லிவடை போல தமிழ்மணத்தை விட்டு வெளியேறிவிடுவார்களோ?

Anonymous said...

இந்த வருண் ஒரு முறை கூட தமிழனுக்காக குரல் கொடுத்தது கிடையாது, அதன் இந்த துள்ளு துள்ளறான். கண்டிப்பாக குடுமிதான் இவன்.

http://timeforsomelove.blogspot.com/

நிலவு பாட்டு said...

தம்பி வருண், மீண்டும் அதேதான் சொல்கிறேன் பிரச்னையை திசைதிருப்ப வேண்டாம். உன்னை மாதிரி பல பேரை பார்த்திருக்கிறேம்பா. நீ எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கோ, நான் குரல் கொடுக்கதான் போறேன் இந்த தமிழின உணர்வாளர்களுக்காக. நீ எப்படி வேண்டுமானாலும் வா அனானியாவ்வோ, வெத்து வேட்டாவோ.

Anonymous said...

thamilmaname thamilarkalukkaha nee kural kodukka veendum.

Anonymous said...

முத்துசாமி
கோவை
இப்ப உங்க பிரச்சனை ஹிட்சு போச்சு, முகப்புல வர்ர பெருமை போச்சு, பிளாகுல் விளம்பரம் போட்ட சில பேருக்கு/ போட நெனச்சவங்களுக்கு வருமானம் போச்சு. இத வெளிப்படையா பேசுங்க....////

முத்துசாமி வந்தாச்சு தமிழ்மணத்திற்கு யால்ரா போட்டாச்சு


எதுக்கு தியாகி போல பில்டப்பு. உங்க செய்தியெல்லாம் உருப்புடியா இருந்தா மக்கள் எப்படியுமே வருவாங்க.///

அப்படியானல் தமிழ்மணம் தேவையில்லை
எல்லோரும் அவர்களே தேடி வருவார்கள்

யாரும் வராதபோதே தெறியலியா நீங்க போட்ட மொக்கதாங்காம நொந்து போயிருந்த மக்கள் இப்ப நிம்மதியா இருக்காங்கன்னு... ///

உங்களப் போன்ற யால்ரா வருவதிலும் பார்க்க வரமலிருப்பது ந்ல்லது

அவ்வளவு ஏன், பாதிக்கப்பட்ட பதிவர்களத்தவிர பொதுவா எத்தன பேரு உங்களுக்கு ஆதரவாய் எழுதியிருக்காங்க? ////

பாதிக்கப்படாதவர்கள் ஏன் எழுதுவார்கள் எருமை மூளையை உபயோகி


அப்புறம் தமிழ்மணம் செய்யாத எதையும் நீங்க தமிழ் மக்களுக்கு, உங்களையெல்லாம் தமிழ்மக்களுக்கு அறிமுகம் செஞ்சதே தமிழ்மணம்தானே. ///

ஆகா விட்டால் புளக்கர் தமிழ்மணத்தின் என்று சொல்வாய் போல் இருக்கிறது

அந்த விசுவாசம் கூட இல்லாம நொட்ட செல்லிக்கிட்டே இருங்க.... ///
அதற்காக உன்னை மாதிரி யால்ரா அடிக்க வேண்டுமா

உங்க மிரட்சலுக்கு பயந்து தமிழ்மணம் முகப்புல இடம் கொடுத்த்துதான் தப்பு.
முத்துசாமி
கோவை///

அது முன்னமே முகப்பிலே தான் இருந்தது எருமை கீழே இருந்து மேலே விட்டிருக்கிறார்கள்

Anonymous said...

அண்ணன் முத்துசாமிக்கு வணக்கம், தமிழ் நாட்டுல கூடத்தான் எல்லாம் வாழறதுக்கு நல்லா வழி இருக்குது. அப்ப ஏன் அண்ணன் இந்த பொராட்டமெல்லாம் பண்றாங்கோ. நம் உரிமையை மீட்டெடுக்க குரல் கொடுப்பது விசுவாசத்துக்கும் வித்தியாசம் இருக்குதுங்கண்ணே. ரொம்ப பேசாதீங்கோ ஆத்துகாரி கோபிச்சுக்க போறா.

மதிபாலா said...

நண்பர்களே உங்களின் கருத்துகளுக்கு நன்றி, முடிந்தால் உங்கள் சொந்த பெயரில வந்து எழுதுவது நலம். முந்தைய பதிவிலே மதிபால என்னமோ நானே அனானி வந்து எழுதறேன் போல ஒரு கருத்தை விதைச்சார்.//

இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு?

அப்படி நான் எங்கேயும் சொல்லியிருக்கேனா என்ன? உங்கள் கருத்தில் நேர்மையிருந்தா ஏன் முகத்தை மறைக்கறீங்க என்று மட்டும்தான் சொன்னேன். நண்பர் நிலவுப்பாட்டு அனானியாக வருகிறார் என்று சொன்னேனே???

பதிவுலகத்திலும் , இணைய உலகத்திலும் என்னை அறிந்தவர்கள் அனேகம் பேர். இன்று வரை அப்படிப்பட்ட அநாகரீகமான குற்றச்சாட்டுக்களை நான் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

எனது கருத்து உங்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்கான வருத்தங்கள்......! ஆனால் அனானிகள் பற்றிய என் கருத்தை நான் மாற்றிக்கொள்வதாயில்லை.

இன்னமும் தோழமையுடன்
மதிபாலா.

நிலவு பாட்டு said...

/* இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு?

அப்படி நான் எங்கேயும் சொல்லியிருக்கேனா என்ன? உங்கள் கருத்தில் நேர்மையிருந்தா ஏன் முகத்தை மறைக்கறீங்க என்று மட்டும்தான் சொன்னேன். நண்பர் நிலவுப்பாட்டு அனானியாக வருகிறார் என்று சொன்னேனே???
*/
நன்றி மதிபாலா, என் புரிதலின் தவறு போல் உள்ளது. மன்னிக்கவும்.


/* உங்கள் கருத்தில் நேர்மையிருந்தா ஏன் முகத்தை மறைக்கறீங்க என்று மட்டும்தான் சொன்னேன். */

அப்படின்னா முகத்தை காட்டிட்டு வந்தால் நேர்மை இருக்கும் சொல்றீங்களா.

எல்லாளன் said...

உண்மையில் இது ஒட்டுக்குழுவுக்குத் தான் இலாபமாக போய் விட்டது

முன்பெல்லாம் அவர்களின் புலி எதிர்ப்பு மாமா வேலைகள் தான் அடிக்கடி
வலம் வந்து கொண்டிருந்தன

அது எமது வலைப்பூக்களால் முகப்பில் பின்னுக்கு போய் கொண்டிருந்தது

இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது

அவர்கள் எப்போதுமே தனிக்காட்டு ராஜாக்கள் தான்

இந்திய ராவினது செல்லப்பிள்ளைகளை அவர்கள் சும்மா விடுவார்களா ??

அதற்கான கண்டு பிடிப்பா ?
சுய ஆக்கம் என்பது ?

திட்டுவதற்கு வெட்டி ஒட்டத்தேவையில்லை தானே ???

ஆனாலும் சிலர் முத்துசாமி போன்ற சில அருவருடிகளினது தொல்லை தாங்க முடியவில்லை

தமிழ்மணம் ஒரு திரட்டி தானா இருக்கிறது ???

ஈழத்தமிழர்கள் தனி திரட்டி தொடங்க வேண்டும் போல் இருக்கிறது

அல்லாவிட்டால் எல்லோரும் தமிழ்மணத்தை புறக்கணிப்போம்

Anonymous said...

புறக்கணிப்போம் புறக்கணிப்போம்
தமிழ்மணத்தை புறக்கணிப்போம்

திரட்டியமைப்போம் திரட்டியமைப்போம்
தமிழருக்கென்று ஒரு திரட்டியமைப்போம்

Mike said...

தமிழ்மணத்தில் தமிழர்களுக்கு ஆதரவில்லை எனில் இனி நான் இங்கு எழுத போவதில்லை. நான் எழுத ஆரம்பித்தற்கு காரணம் தமிழ்மணமே, எழுதாமல் இருக்க போவதற்கும் காரணம் தமிழ் மணமே.

இதனால் அவர்களுக்கு பெரிய இழப்பு இல்லாவிடினும், இது தமிழ் மக்களுக்கு ஒரு இழப்பாகவே கருதுகிறேன். நானே என்னை பத்தி சொல்லிக்க கூடாது. ஆனால் வேறு வழியில்லை இன்று. என்னால் தமிழ்மணத்திற்கு வருகை தரும் ஒரு குழப்ப நிலையி உள்ள மக்களை தமிழர் பக்கம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அது நடக்கவும் செய்தது. ஆனால் இன்று மீண்டும் துரோகிகள் எல்லாம் முன் பக்கத்தில் ஆனால் தமிழ் உணர்வாளர்களோ பின் பக்கத்தில். எங்களுக்கு கொடுக்கும் மரியாதை எந்த விதத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. எங்களுக்கு ஆதரவாக இல்லாட்டியிம் உங்களிட ஒரு நடுநிலையை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதுவும் கிடைக்காத போது, அழையா விருந்தாளியாக வர என் மனம் இடம் கொடுக்க மாட்டேங்குது.

தமிழ் மணம் பாலுவின் இன்றைய பதில்கள் இன்னும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

Sent: Wednesday, March 11, 2009 6:11 PM
Subject: Re: my blog not showing


Hi:

We are always trying to improve the way we present the blog posts. I am sure, news section will see still better improvement in the coming days.

Thanks for your continued support.

Balu


மேலுள்ள செய்திக்கு என்னுடைய பதில்



Sent: Wednesday, March 11, 2009 6:19 PM
Subject: Re: my blog not showing


Thanks for your information Balu,

why don't you treat same as other rather than showing our posts in the cornet . You dont think we are helping to improve tamil people in all ways.
if you ignore us, then there are many people against tamil, they will be like a king in the main section.

Please again and again i'm telling we are not running our blogs to get money, we run for tamil people only. if you ignore us, it means you ignore the entire tamil people.


Thanks

Anonymous said...

தோழர்களே உண்மையிலேயே என்னால் இருபுறமும் குற்றம் சொல்லமுடியவில்லை. தமிழ்மணம் ஒரு முடிவெடுத்தால் மாற்றுவது கடினம். ஏற்கனவே லக்கி, கோவி, டோன்டு, ரவி ஆகியோர் பதிவுகள் இன்னமும் சூடான இடுகைகளில் வராத்து உங்களுக்கு தெறிந்திருக்கும். இருப்பினும் உங்கள் விடயத்தில் அவர்கள் மறுபரிசீலனை செய்து முகப்பில் மேலே செய்திப்பதிவுகளை திரட்டியிருக்கிறார்கள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை அதனால் நீங்கள மன சோர்வு அடையாமல், ஒரிரு வாரங்கள் உங்கள் சொந்த ஆக்கங்களை எழுதுங்கள் தானாய் நிலை மாறும். நம்பிக்கையுடன் இருங்கள்.