Tuesday, March 17, 2009

இலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன ‐ பிரித்தானியாவின் Presstv நடத்திய கலந்துரையாடலின் ஒளிவடிவம்:

இலங்கையில் தொடரும் மோதல்கள் குறித்து பிரித்தானியாவின் Presstv அண்மையில் நட்த்திய கலந்துரையாடலில் தற்போதைய நிலைகுறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நால்வர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் தமிழ் போருமைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றொபேட்ஈவன்ஸ் ஆகியோர் ஒருதரப்பாகவும், எதிர்த் தரப்பில் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரின் பிரதிநிதி டக்ளஸ் விக்கிரமரட்ண, மற்றும் கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நஸ்பி ஆகியோரும்; கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த போருமில் பார்வையாளர்களும் கருத்துரைத்தோரிடம் கேள்விகளை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய கலந்துரையாடலை ஒளிவடிவில் பார்க்கலாம்.

http://www.globaltamilnews.net/includes/news_player.php?ptype=v&nid=7241

0 Comments: