Wednesday, July 22, 2009

ஜோதிடர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது: விடுதலை

ஜூலை 22_ உலக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று முழு சூரிய கிர-கணம் நடந்து முடிந்தது.

சூரிய கிரகணத்தால் சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை பேரி-டர்கள் ஏற்படும் என்றும் இதனால் உலகத்துக்கே பெரும் கெடுதல் ஏற்படும் என்றும் வழக்கம் போல ஜோதிடர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்-பட்-டது. அவர்கள் முகத்தில் கரி பூசும் விதமாக சூரிய கிரகணம் நிகழ்ந்த இன்று உலக அளவில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்பட-வில்லை.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரக-ணம் இன்று நிகழ்ந்தது. இயற்கையின் மிக அரிய நிகழ்வான இதைக் காண உலகம் முழுவதும் மக்-கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்தியாவில் பெரும்-பாலான பகுதிகளில் முழுமையாக சூரிய கிர-கணம் தெரியவில்லை. வாரணாசி, சூரத்தில் மட்டும் முழுமையாக இருந்தது. பிகார் மாநிலம் தெரகானாவில் மேகக் மூட்டத்தின் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்-கள் பெரும் ஏமாற்ற-மடைந்-தனர். -சென்னை-யிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இன்று காலை 5.28 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்-கி--யது. குஜராத் மாநிலம் சூரத்துக்கு அருகே அர-பிக் கடலில் முதலில் சூரிய உதயப் புள்ளியில் கிரகணம் தொடங்கியது.

சூரத் நகரில் ஆயிரக்-கணக்கான மக்கள் சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தனர். சூரத் நகர மக்-களால்தான் சூரிய கிரகணத்தை முழுமை-யாக காண முடிந்தது.. பிற பகுதிகளை விட இங்கு-தான் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.

உ.பி. மாநிலம் வார-ணா-சியிலும் சூரிய கிர-கணம் முழுமையாக இருந்தது. அங்கு வைர மோதிரம் போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதிகம் எதிர்பார்க்-கப்பட்ட பிகார் மாநிலம் தெரகானாவில் சூரிய கிரகணம் சரிவரத் தெரி-யவில்லை. மேகக் கூட்ட-மாக இருந்ததால் கிர-கணத்தை சரிவரப் பார்க்க முடியாமல் மக்-கள் ஏமாற்றம-டைந்-தனர். இந்த இடத்தில்தான் சூரிய கிரகணம் முழு-மையாகத் தெரியும் என்று நாசா அறிவித்-திருந்-தது குறிப்பிடத்-தக்கது.
நாசாவைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள், ஏரா-ளமான விஞ்ஞானிகள், வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக தெரகானாவில் கூடியிருந்தனர்.
ஸ்பேஸ் அமைப்பின் பிரதிநிதியான அமிதாப் பான்டே கூறுகையில், மேகம் கூட்டமாக இருந்-த-தால் கிரகணத்தை சரிவர பார்க்க முடியா-மல் போய் விட்டதாக ஏமாற்றம் தெரிவித்தார்.
சூரிய கிரகணம் தொடங்-கியதுமே வட இந்தி-யாவின் பெரும்பாலான பகுதிகளில் இருளாக இருந்தது. சூரிய கிரகணம் இங்கு தெளிவாகத் தெரி-ய-வில்லை. இதனால் மக்-கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆக்ரா, குவஹாத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் பாதி அளவே கிரகணத்தைக் காண முடிந்தது. தலை-நகர் டெல்லியிலும் முக்-கால்வாசி கிரகணத்தை-யேப் பார்க்க முடிந்தது.
டெல்லியில் உள்ள நேரு பிளானட்டோரி-யத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
சென்னையில்...

சென்னையிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரி-யவில்லை. கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்-கத்தில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க சிறப்பு தொலைநோக்கி வசதி செய்யப்பட்டி-ருந்தது. இதை ஆயிரக்-கணக்கானோர் வரிசை-யில் நின்று பயன்படுத்தி கிரகணத்தைப் பார்த்-தனர். ஆனாலும், மேகக் கூட்டம் காரணமாக கிரகணம் சரிவரத் தெரிய-வில்லை. பாதி அளவே தெரிந்தது. இதற்கிடையே கிர-கண நேரத்தில் சாப்பிட்-டால் பல்வேறு பிரச்சி-னை-கள் ஏற்படும் என்ற பொய்ப் பிரச்சார ஜோதி-டர்களின் புளுகுகளை முறியடிக்கும் வகையில் திராவிடர் கழக ஏற்-பாட்-டில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலை-வர் கி.வீரமணி தலைமை-யில் பகுத்தறிவாளர்-களின் உண்ணும் விரதம் நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு கிர-கண நேரத்தில் காலை சிற்-றுண்டி அருந்தினர். இந்த மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து நிகழ்ச்சியை நேரடி ஒளி-பரப்பு செய்வதற்காக ஏராளமான முன்னணி ஆங்கில தொலைக் காட்சி-கள் பெரியார் திடலில் முகாமிட்டிருந்தன.

சூரிய கிரகணத்தை-யொட்டி இன்று தமிழ-கத்தில் பல்வேறு பள்ளி-களில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மூடநம்-பிக்கைக் கூத்தும் அரங்-கேறியது.

நன்றி விடுதலை

0 Comments: