Friday, July 3, 2009

ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?

13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?

இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்

ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? அங்குள்ள மக்கள் வதைமுகாம்களில் சிக்கி சின்னாபின்னபட்டு கொண்டு இருக்கும் போது ‘இந்தி’யன் ஆயில் கார்பரேசன் மூலமாக பெட்ரோல் பங்கு திறக்கிறார்களாம்.அதுவும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் .. அதேபோல கடலுக்கடியில் மின்சாரம் அனுப்ப போகிறார்களாம் .. இதில் கொடுமை என்னவென்றால் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து.. அங்கே தமிழர்கள் வதைமுகாம் களில் இருக்கும் போது இந்த பொந்தியா காரணமில்லாமல் ஏன் இவற்றை செய்கிறது? இங்கே தான் நாம் சிறிது சிந்தித்து பார்க்கவேண்டும்..ஈழ தமிழர்களை சாகடித்தோர் இனி சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்..ஆரியர்களுக்கு தூரபார்வை அதிகம்!இதை தமிழர்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் ஆடு மாடு மேய்த்து கொண்டிருந்த இக் கைபர் போலன் கும்பல்கள் இன்று நம் தலை மீது ஏறி மிளகாய அரைக்கும் நிலைவந்திருக்குமா? இந்தி அரசு காரணமில்லாமல் இவ்வேலைகளை செய்யவில்லை.. கூர்ந்து கவனித்தால் ஈழ தமிழர்களை பூண்டோடு ஒழித்துவிட்டு எப்படியும் நம் சிங்கள பங்காளிகள் அங்கு குடியேறிவிடுவார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூர நோக்கிலான செயல்பாடே அது!இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்..

இனி புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?

இனி ஈழதமிழர்கள் இந்தியா நம் தந்தையர்நாடு பாட்டி நாடு கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..பகைநாடு என்று கூறுதல் வேண்டும்! இவ்வளவுக்கும் காரணமான பொந்திய தேசத்தினை இனியும் இவ்வாறு கூற மானமுள்ள ஈழ தமிழன் முன்வரமாட்டான்.. தொப்புள் கொடி உறவு அவரை கொடி என்று வீரமுள்ள ஒரு தலைவர் கூட இல்லை..சொல்ல போனால் நாங்களே இங்கு அடிமைகளாக உள்ளோம்.. இந்தி தேசியத்தினை பொறுத்தவரை தன் தேசியத்தில் ஒற்றுமை பிறர் தேசியத்தில் வேற்றுமை இதுவே அது கடைபிடிப்பது!இன்று தமிழர்களுக்கு 4 மாநிலம் இலங்கையில் உருவாக்குவோம் என்று இந்தி தேசியத்தின் குரலாய் ஒலிக்கிறதே கோடாலிகாம்பு சிதம்பரத்தின் குரல் காரணம் என்ன? யாழ்பாணத்தான் ,மட்டகிளப்பாண்,திரிகோணமலையான்,வவுனியான் என பிரித்து தமிழர்களுக்குள்ளேயே ஒருவனை ஒருவன் மோதவிடும் செயல்திட்டங்களே அவை! இவைகளை எப்படி முறியடிப்பது? ஈழ அரசியல் தலைவர்கள் இங்கு முந்தி கொள்வது அவசியமாகிறது! ஈழ அரசியல் தலைவர்கள் ஈழத்திற்கான சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. புதிதாக வேறு ஏங்கும் தேட வேண்டாம் ஏற்கனவே உள்ள பிற நாட்டு அரசியல் அமைப்பை முன்மொழிய வேண்டும்..புதிதாக தமிழீழம் அமைந்த பிறகு நாம் ரூம் போட்டு யோசித்து கொள்ளலாம்! இப்போதைக்கு தேவை சுய நிர்ணய உரிமை! அதை உள்ளடக்கிய நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எங்குள்ளது என தேடலாம் உதாரணம் கனடா. அங்கு க்யூபக் மாகாணத்தில் பிரெஞ்சு பேசும் மொழியினருக்காக தனி க்யுபக் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடைபெற்றது..அதை உதாரணமாக கொள்ளலாம்.

தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு எப்படி உதவலாம்?

நாமக்கல் முட்டையும்,கோழியையும்,தஞ்சை பொன்னி அரிசியையும் நெய்வேலி மின்சாரம் உட்பட அனைத்தையும் தின்று தமிழன் முகத்தில் காறி உமிழும் இந்த அண்டை மாநில கும்பல்களை விட.. இவ்வளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் வாழும் தமிழனுக்காக பொன் பொருள் என வாரிவழங்கிட தயாராக இருந்தும் கூட.. கடைசிகாலம் வரை மறைந்த அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் உட்பட சிங்கள் தேசம் .. சர்வதேசம் .. சரியாக உணவு அனுப்பவில்லை என புலம்பி கொண்டு இருந்தது ஏன்? நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி அனைத்திற்கும் காரணம் நாமே ஆகும்..தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வெறும் 18 கி.மி தொலைவே இருக்கும் அவர்களுக்காக நாம் அனுப்பமுடியாதா? தடுப்பது எது இந்த இந்தி தேசம் தானே? நம் முதுகில் குத்தும் மலையாளிக்கு அரிசி,பழம் ,பால் அனுப்பும் நாம் .அதையேன் நம் ரத்த உறவுகளுக்கு செய்யமுடியவில்லை? அடசரி வியாபரமாகவே வைத்துகொண்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்காக செய்ய தயராகவே உள்ள நிலையில் தடுப்பது எது? முட்டையில் மயிர் புடுங்கும் இந்தி தேசம் தானே? சிங்கு எவனையாது இப்படி பட்டினி போட்டு கொல்வார்களா? இங்கு விடுதலை அடையவேண்டியது ஈழதமிழன் மட்டுமல்ல நாமும்தான் என புரிந்து கொள்ளுதல் வேண்டும்!

எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.

நன்றி : http://siruthai.wordpress.com/2009/07/03/ஒடுக்கபட்ட-தமிழினத்திற்/
புரட்சிகர தமிழ் தேசியம்
விழிதெழு தமிழா! விழிதெழு!

0 Comments: