Monday, January 26, 2009

ஈழத்தமிழர்களுக்காக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து தெரிவிப்பு

ஒரு மனித நேயம் இல்லா திமுக வே, ஆட்சியில் இருந்தும் ஒருவரும் குட சென்று இந்த மாணவர்களை பார்க்காதது, உங்களுக்கு உள்ள மனித நேயத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மாணவர்களாலே வளர்ந்த திமுக இன்று அந்த மாணவர்கள் அழிவதை வேடிக்கை பார்க்கிறது


ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரி, செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக, செங்கல்பட்டில் 5 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்ச அரசு நடத்தி வரும் தாக்குதலுக்கு, இந்திய அரசு துணை போகிறது. ராடர்கள், பணம், நிபுணர் குழுக்களையும் இந்திய அரசு அங்கு அனுப்பி இருக்கிறது. இது பச்சை துரோகம். மன்னிக்க முடியாத செயல் என்றார்.



நன்றி:

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dvj0A0ecQG7L3b4F9Es4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

0 Comments: