Thursday, January 29, 2009

கருணாநிதி புடவைக் கட்டிக்கொள்ளலாம்?

நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை ஒட்டுமொத்த தமிழினமும் காதில் பூச்சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்று நினைக்கிறார்களா? பிரணாப் ராசபக்சேவுடன் விருந்துசாப்பிட்டுவரத்தான் இவர்கள் டெல்லிக்குப் பறந்து சென்று மனு கொடுத்துவிட்டு வந்தார்களா? அதுவும் எங்கள் வரிப்பணத்தில்!


நாம் கொடுத்த வரிப்பணத்தில் சப்ளை செய்த ஆயுதங்களால்தான் நம் சகோதரிகளின் தாலி அறுக்கிறான் சிங்களவன். இந்தியாவின் இறையாண்மையென்று எதையோ சொல்லி எங்களை ஏமாற்றும் துரோகிகளே! எங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தைக்கொண்டே எங்களின் சொந்தங்களை கருவறுக்க உதவுவதுதான் காந்தி கண்ட தேசத்தின் இறையாண்மையா? மானங்கெட்டத்தமிழனே சிந்திக்கமாட்டாயா? தங்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கும் ஒரு நாட்டில் வாழும் தமிழன் தன்னை இந்தியன் என்று எப்படி மனமார இனங்காட்டிக்கொள்வது? திபத்திற்கும் வங்காளதேசத்திற்கும் ஒரு கொள்கை எங்கள் தமிழனத்திற்கு ஒரு கொள்கையா? நீங்கள் பிரித்துக்கொடுத்த வங்கதேசத்தில் இருந்துதானே அனுதினம் தீவிரவாதி எங்களுக்கு குண்டுவைக்கிறான். உங்களின் ஏகாதிபத்திய ஆசையால் போர்களில் எங்கள் சொந்தங்கள் உயிர்விட்டதற்கு நீங்கள் தானே காரணம். இப்படி எங்களின் பல ஆயிரம் உயிர்களை அழித்த நீங்கள் இங்கு போய்விட்ட ஒரு உயிருக்காக ஓலமிட்டு எங்கள் இனத்தையே அழிக்க நினைக்கிறீர்களே? உங்களின் தவறான முடிவால் அழிந்துபோன எங்களின் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

நாங்கள் என்ன உங்களை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமா தரச்சொன்னோம். அங்கே போரைத்தானே நிறுத்தச்சொன்னோம். போர் என்ற பெயரில் ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் சிங்களவன். எங்களின் ஏதுமறியா குழந்தைகளும் சிறுவரும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் நிலைகளை வேவு பார்த்துச்சொல்கிற உங்கள் விமானங்களின் கண்களுக்கு அப்பாவி மக்கள் கூண்டோடு கொள்ளப்படுவது மட்டும் தெரியவில்லையா? ஐநா வும் சர்வதேச சமூகமும் கண்டிக்கிற போது நீங்கள் மட்டும் விருந்துக்கு போய் கொட்டிக்கொள்கிறீர்களே? நீங்களெல்லாம் மனிதர்களா? இன்னும் இவர்களின் அரசுகளில் ஒட்டிக்கொண்டு இன்னும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டிருக்கும் தமிழ் மந்திரி அவதானிகளே! உங்களின் உடம்பில் ஒடுவது என்ன? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போட்டுச் சரணடைந்தால் பிரச்சினைத்தீரும் என்று கூறும் செயலலிதாவே! ஏன் நீங்கள் இதையே சிங்களவனைப் பார்த்து சொல்லக்கூடாது? விடுதலைப்புலிகளுக்காக சிங்களவர்கள் அப்பாவி பொதுமக்களை கொள்வதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? தமிழினத்தின் அழிவைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. அவனதான் நீங்கள் ஏறி மிதித்தாலும் உங்கள் கால்களில் விழுந்துகிடக்கிறானே. தன் இனத்தை அழிக்கும் சிங்களவனுடன் கைகோர்க்கும் அரக்கிகளையும் அம்மா என்று அழைத்து கொண்டாடும் மானங்கெட்ட இனம் தமிழினமே! உன்னை யார் காப்பாற்றுவது?

காட்டிக்கொடுத்த கருணாவுக்கு மூன்று பக்கம் ஒதுக்கும் பத்திரிக்கைகளே! எங்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படப்போது மட்டும் வாயை இறுக்கி மூடிக்கொள்கிறீர்களே! ஏன்? உங்களின் மேலாதிக்க வெறி இன்னும் அடங்கவில்லையா? எம்மக்கள் போடும் பிச்சைக் காசிலே கொழுத்த நீங்கள் சாப்பிட்ட இலையிலேயே மலம் கழிக்கிறீர்களே?

உணர்வுள்ள தமிழர்களே ! இனியாவது விழித்தெழுங்கள்! இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நம் எதிர்ப்பை சர்வதேச சமூகத்திற்கு தெரிவியுங்கள். தமிழினத் துரோகிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கள்.

http://jakartananban.blogspot.com/2009/01/blog-post_29.html

0 Comments: