Sunday, August 16, 2009

சேரனின் பேட்டி நேற்று கலைஞர் டிவியில்

சேரன் தான் படத்திற்க்காக பட்ட அனைத்து கஷ்டங்களையும் தெளிவாக எடுத்து கூறினார். ஆனால் ஒரு பயம் அவர் முகத்தில இருந்தது நன்றாகவே தெரிந்தது. பேசியவர்கள் அனைவரும் ஆட்டோகிராப் படம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டனர். சேரன் மனம் புண்படகூடாது என அனைவரும் பேசிய மாதிரி தெரிந்தது. பேட்டி எடுத்தவர் எதிர் மறை கருத்துக்கள் சேரனிடம் யாரும் கேட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

சேரனும் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளினையும் செய்து எப்படியாவது மக்கள் பொக்கிஷம் திரைப்படம் பார்க்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தார்.

திருச்சி ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஸ்ரீபிரியா அவர்களின் அம்மாவும் சேரனும் அலைப்பேசியில் நேரடியாக பேசி வாழ்த்தியது ஒரு சிறப்பாக அமைந்தது

சேரன் ஒரு சிறந்த படைப்பாளி அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்க்காகவாவது தமிழர் என்ற முறையில் நாம் பொக்கிஷம் படத்தினை வெற்றியடையச் செய்வோம்.

0 Comments: