Monday, August 31, 2009

சிங்கள வெறியாட்டம்:நார்வே முயற்சி

சிங்கள ரத்தவெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் குறித்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை நார்வே ஈர்க்கவுள்ளது என்று நார்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் கொல்லப்படும் இந்த கொடூர காட்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுவரும் நிலையில், பான் கீ மூனின் கவனத்தை இது தொடர்பாக ஈர்க்க நார்வே முன்வந்திருக்கின்றது.

இக்கொடூர கொலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது அலுவலகம் தொடர்ந்தும் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments: