Sunday, September 6, 2009

தினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 17- அன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளென கொண்டாடப்பட்டது. இது பலரையும் சாதாரணமாக கடந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்று தினமலர்(ம்) நாளேட்டில் வெளியான ஒரு செய்தி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் செய்திக்குப் பின்னால் ஒளிந்துள்ள அரசியல் வக்கிரம் பற்றி பலரும் சிந்திக்கவேயில்லை.

பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் வைசியன், வயிற்றுல பிறந்தவன் சத்திரியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் - என்கிற மனு கோட்பாட்டின்படி, தலித்துகள் கடவுளுக்கு பிறக்கவில்லை (ஆண் - பெண் இணைந்த மனிதர்களுக்கே பிறந்தார்கள்) என்று கூறி அவர்களை ஊரின் ஒதுக்குப்புறமாக வைத்திருந்த கொடுமை நடந்ததெல்லாம் அந்தக் காலம்; இப்போ அதெல்லாம் கிடையாது, நாங்க தாயா புள்ளையா பழகுறோம்... என்று பலர் மூடத்தனமாக பேசுவதுண்டு. இந்நிலையில், பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகமான தினமலர் சாதி, மத அடையாள சொல் வழக்கினூடாக சமூகத்தில் நிலைநிறுத்த முனையும் வக்கிர அரசியல் பற்றி பேச இவர்கள் தயாராகயில்லை. காரணம், அந்தச் சொற்கள் பிற்போக்கு தினமலருக்கு மட்டுமல்ல... முற்போக்கு - தமிழ்த்தேசிய அரசியல் பேசும் சாதி இந்துக்களுக்கும் பழகிப்போனவைதான். சமூக நீதி கொள்கை பேசி அரசியல் நடத்தும் தலைவர்கள் வாழும் ஊரில்கூட நீதியற்ற அநியாய சாதி மோதல்கள் இப்போதும் நடந்து வருகின்றன. இதைத்தான் தினமலரும் எதிர்பார்க்கிறது.

இதனால், காலம் கடந்தாலும் அந்தச் செய்தி குறித்து இப்போது விவாதிக்கலாம் என்றே தோன்றுகிறது.

” விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் ஊர் தரப்பினருக்கும், காலனி தரப்பினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டது......... நேற்றுக் காலை காலனி பகுதியில் உள்ள டி.பி.ஐ. பிரமுகர் கண்ணதாசன் ஊர் பொது இடத்தில் திருமாவளவன் பேனர் வைத்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றுக் காலை ஊர் தரப்பை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து டி.பி.ஐ. பிரமுகரான கிளியனூர் ஊராட்சித் தலைவர் இரணியன் மற்றும் சிலர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு வந்து விசாரித்து விட்டு திரும்பி சென்றபோது, ஊர் தரப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், சுகுமார் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாக்குதலுக்குள்ளான இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். இதையறிந்த ஊர் தரப்பினர் பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு சென்று, அங்குள்ள குடிசை வீடுகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது....”

-இப்படி நீளும் இந்தச் செய்தியில் ஊர் என்ற சொல் 8 முறையும், காலனி என்ற சொல் 4 முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நண்பர்களே! இப்போது நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். குறிப்பிட்ட சொற்கள் எத்தனை தடவை பயன்படுத்தபட்டு இருக்கிறது என்பதை கணக்கிடுவது நம் நோக்கமல்ல. அந்தச் சொற்கள் ஏன் ஆளப்பட்டு இருக்கிறது; அதன் உள் அரசியல் என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம். அந்தச் செய்தியில், ”தலித் அரசியலின் அடையாளமாக விளங்கும் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத சாதி இந்து வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் சண்டை ஏற்பட்டது’’ என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் உண்மை. ஆனால் தினமலரோ, ஊர் பொது இடத்தில் விலக்கப்பட்ட தலித்துகள் பேனர் வைத்ததே தவறு என்ற ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வக்கிர அரசியலின் நீட்சியாகவே ஊர் - காலனி சொற்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நாள்தோறும் தினமலரை புரட்டி பார்த்தால், (1) இந்து மதத்தை நிலைநிறுத்தும் கோவில் பற்றிய செய்திகள், (2) தலித் மற்றும் சூத்திரத் தலைவர்களை கிண்டல் செய்யும் செய்தி, (3) சாதி மோதல்களில் சாதி இந்துக்களுக்கு ஆதரவான செய்தி, (4) ஆரிய அரசியலுக்கு எதிரான திராவிட அரசியலை ஏளனம் செய்யும் செய்தி. (5)அரசும் ஆட்சியாளர்களும் அடித்தள மக்களுக்கு எதிராக செயல்படும்போது மக்கள் மத்தியில் சிலர் ஆக்ரோசமாக பேசும் செய்தி. இவ்வாறான செய்திகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

ஈழத்தில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு இரசாயண குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தபோதும், ”விடுதலைப் புலிகள் அட்டூழியம்; மக்கள் சிறைப்பிடிப்பு’’ என்று செய்தி வெளியிட்ட 'பெருமை' தினமலரையே சேரும். ஈழமக்களுக்கு ஆதரவாகவும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிவந்த விடுதலைப்புலிகளை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசினால் அதை தவறாமல் வெளியிட்டு காவல்துறைக்கு காட்டிகொடுக்கும் பணியையும் தினமலர் செய்து வந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்றாலே தினமலருக்கு எட்டிக்காய். யாரோ செய்யும் தவற்றைகூட விடுதலைச் சிறுத்தைகள் செய்ததாக செய்தி வெளியிடும். அதனைக் கண்டு அக்கட்சியினர் போராடினால், வன்முறை செய்ததாக செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு காட்டி கொடுக்கும். திருமாவளவனின் தலைமையில் கிளர்ந்தெழும் தலித் அரசியல் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததே இதற்கு காரணம் எனலாம்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகள் சீர்கேடாக இயங்குவது குறித்து செய்தி வெளியிடுமாறு எனக்கு தெரிந்த ஒருவர் தினமலரை கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அச்செய்தியை தினமலர் வெளியிட்டது. அதில், மாணவர்கள் அல்லல்படுவது குறித்து ஒரு வரிகூட எழுதாமல், அங்கு தங்கியுள்ள தலித் மாணவர்கள் பராமரிக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலையோரமாக இருந்த விநாயகர் கோவில் சுவர் சிறியளவு உடைக்கப்பட்டால் அதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக கரிசனையும் செய்தி வெளியிடும்.

கோவில் தேர் திருவிழாக்களை வெளியிடும் தினமலர், அக்கோவில்களில் இக்காலத்திலும் நுழையகூட முடியாமல் இருக்கும் மக்கள் பற்றி இதுவரை செய்தி வெளியிட்டிருக்குமா? ’ஊர் கூடி தேர் இழுப்போம்’ என்று பலரும் சொல்கிறார்கள். இந்த வாக்கியத்தின் அர்த்தம்: சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பெரிய செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஊர் கூடுவதில் ஒதுக்கப்பட்ட காலனி மக்கள் என்று சொல்லப்படுகிற தலித்துகள் சேர்க்கப்படவில்லை என்ற செய்தியை பதிவு செய்வதில்லை.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டு ஓரமாக கிடந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பற்றிக்கொண்டு பொதுதளத்தில் வந்துவிட்ட பின்னரும் தனியாக துண்டிக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் காலனி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல். தினமலர் திட்டமிட்டு செய்துவரும் இந்த கீழ்தரபுத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துகளை ஒதுக்கும் தீண்டாமை சுவரை மாவட்ட நிருவாகம் அகற்ற முனைந்தது. சேலம் மாவட்டத்தில் திரௌபதியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தபோது மாவட்ட நிருவாகம் சமரச முயற்சியை மேற்கொண்டது. அப்போதெல்லாம் சாதி இந்துக்கள் ஊரில் இருந்து வெளியேறி ஆடு, மாடு, பொண்டு புள்ளக்குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஊரில் உள்ள ஆறறிவு மனிதர்களான தலித்துகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத சாதி இந்துக்கள் காடுகளில் ஐந்தறிவு விலங்குகளுடன் சேர்ந்து வாழ முன்வந்தது அவர்களின் அறிவை அம்பலப்படுத்தியது. அப்போது அந்தச் செய்தியை தினமலர்(ம்) வெளியிட்ட போது, ஊர் தரப்பினர் ஊரைவிட்டு வெளியேறினர் என்று பெரும் கரிசனை பொங்க வருத்தப்பட்டது. ஆனால், காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக சேரி - காலனி என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தலித்துகளை வாழ நிர்பந்தப்படுத்திய காட்டுமிராண்டி கயமைத்தனத்தை பற்றி மனு”தர்மம்’’ பேசும் தினமலர்(ம்) என்றாவது வெட்கப்பட்டு எழுதியதுண்டா? இல்லவே இல்லை. தலித்துகளின் வாழ்வு பின்தங்கியதற்கு யார் காரணம் என்பதையும் அவர்கள் எழுச்சிகொள்வதற்கு தடையாக இருந்தது எது என்பதையும் அவர்கள் எழுதியிருந்தால் தலித் அரசியல் என்கிற சொற்கள் இந்தச் சமூகத்தில் இருந்திருக்காது. இதைவிட முக்கியமாக ஒன்று நடந்திருக்கும்: சாதி ஒழிப்புக்கு ஆய்தமாக மாமேதை அம்பேத்கர் வலியுறுத்தியதும், பார்ப்பன சாதி இந்துக்களால் கைவிடமுடியாததுமான அகமண முறை ஒழிந்து, அவர்களின் பெண் பிள்ளைகள் தலித் இளைஞர்களுடன் கைகோர்த்திருப்பார்கள். அந்தநிலை வந்துவிடக்கூடாது என்பதே தினமலரின் எதிர்பார்ப்பு,

பழமைகள் மாறி போய் நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக அனுப்பிய நிலையில்கூட, தினமலர்(ம்) போன்ற பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகங்கள் பழைய சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்நிறுத்தியே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக, இந்து சாதி சங்கங்களின் செய்தியை முக்கியத்துவம் கருதி வெளியிடும்போது. அதில், கெங்கசாமி ’நாயுடு’, வீரபத்திரக்(ன்) ’கவுண்டர்’ தலைமை வகித்தனர் என்று இருக்கும். சாதியை நிலைநிறுத்தும் இத்தகைய அடையாள சொற்களை பயன்படுத்தும் நோக்கம் என்ன? அடுத்தவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது எதுவோ அதை மக்களின் மனத்தில் நிலைநிறுத்த வேண்டும் அதுதான் அவர்களுக்கு அவசியம்.

நாட்டில் நடந்துவரும் கேடுகளுக்கு முழுமுதல் காரணமான மதத்தையும் சாதியையும் தோற்றுவித்த கடவுள் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி சாதியற்ற சமூகத்தை நிர்மாணிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் மாமேதை தந்தை பெரியார். ஆனால், பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்தில் சிறைக்கு சென்ற ஊத்தவாயம் சங்கரனை “பெரியவாள்’’ என்று மரியாதையுடன் செய்திகளில் குறிப்பிடும் தினமலர், தமது இனத்தவரை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்தும் கேடுகெட்ட எண்ணத்தில் தந்தை பெரியாரை - ஈ.வெ.ராமசாமி என்றே குறிப்பிட்டு வருகிறது.

இவ்வாறு சாதி, மத அடையாளங்களை நிலைநிறுத்தும் பிற்போக்குத்தன உள் அரசியல் கொண்ட பாசிச ஊடகம் தினமலர் என்றுள்ள நிலையிலும் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கு சாதியின் பிரம்மாக்களான பார்ப்பனர்களின் ஆதரவு மட்டுமே காரணமல்ல. 'இப்பெல்லாம் சாதிகளே இல்லை; நாங்க எல்லோருடனும் தாயா புள்ளையா பழகுறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சாதி இந்துக்களும் அவர்களின் உறவுகளும்தான். அதனால்தான் சமூக அக்கறை கொண்ட பல நல்ல ஏடுகள் பொருளாதார ரீதியில் திணறும்போதும், தினமலர் நாளேடு எந்தவித சிரமங்களுமின்றி வெளிவந்துகொண்டிருக்கிறது.

இவற்றைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை காரணம், தந்தை பெரியார் பிறந்த பூமியில் பெரியாரிஸ்ட்கள் ஆளுகிறார்கள் என்கிற பெருமையே போதும். இவர்களின் உறவுகளால் செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தப்படும் அம்பேத்கர் சிலைகளுக்கு பிறந்த நாளின்போதும், இறந்த நாளின்போதும் பூமாலை போடும் பரந்த மனப்பான்மை கொண்ட் தமிழ்த்தேசிய சமூக நீதி அரசியல் பேசுபவர்கள் நமக்கு தலைவர்கள் என்ற பெருமையும் போதும். எந்தவித மன நெருடலோ அச்சமோ இன்றி தினமலர்(ம்) தம் ’சமூகக் கடமை’யை தொடர்ந்து ஆற்றும்.
-முருக சிவகுமார்( murugasivakumar@gmail.com )

நன்றி கீற்று

Saturday, September 5, 2009

ராகுல் முன்னிலையில் சேரும் விஜய் என்ற மற்றுமொரு தமிழின துரோகி

சென்னை, செப்.5: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் வரும் 8ந் தேதி முதல் 10ந் தேதி வரை 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 9ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

ராகுலை சந்திக்கும் விஜய்

தமிழகத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தரும் ராகுல் வரும் 9ந் தேதியன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறது.

நண்டு கொழுத்தால் வளையில இருக்காது, விஜய் கொழுத்தால் ?

நிஜத்திலும் நல்லா அப்பாவி போலே நடிக்கிறானயா,இந்த விஜய்!! ஆமை புகுந்த வீடும், சோநியா புகுந்த நாடும் அம்பேல்

நண்டு கொழுத்தால் வளையில இருக்காது; நரி கொழுத்தால் காட்டுல இருக்காது; இப்போது இந்த நடிகர் கொழுத்திருக்கிறார் போலிருக்கிறது. இவர் வரலாற்றை சரியாக படிக்கவில்லையோ என்னவோ? எல்லோரும் எம். ஜி. இராமச்சந்திரனாகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் இவர்களாகவே இருக்க முடியாத போது...............? எப்படியிருந்தாலும் இவர் எதற்கும் தகுதியில்லாதவர்தான். இதன் மூலம் அதை நிரூபிக்கப் போகிறார்.

தமிழர்களை கொன்று குவித்துவிட்டு வரும் காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கு தம் தொழிலுக்காக தமிழர்களை நம்பி இருக்கும் நடிகர்கள் சேர எப்படி துணிச்சல் வருகிறது? தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்!

தமிழ் நாட்டு தமிழருக்கும், ஈழதமிழருக்கும் துரோகத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் காங்கிரசுடனா கூட்டு. இதுவரை நான் விஜயின் படங்களை பார்த்து வந்துள்ளேன், இனி பார்கமாட்டேன். உலக தமிழர்கள் அனைவரும் விஜயின் படங்களை புறக்கணிக்கவேண்டும். பணத்தாசை யாரை விட்டது.

Thursday, September 3, 2009

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில் இணையும் பொறுக்கி பயல் விஜய் ?

தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஆகியோர் முன்னணியில் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்ந்து கொள்ளும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சரிந்து போயிருக்கும் காங்கிரஸின் செல்வாக்கை மீளவும் கட்டியெழுப்ப காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்தது.

தமிழகத்தில் மீளவும் தனித்து காங்கிரஸ் ஆட்சியமைக்கும் காலத்தை உருவாக்குவதே தமது விருப்பம் என காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தமையும் அதை நிலை நிறுத்த பாடுபடப்போவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கியிருந்த நடிகர் விஜய், பல்வேறு சமூகப்பணிகளுடன் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைந்து மக்கள் இயக்கமாக மாற்றியமைத்து, செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த தொடங்கியிருந்தார். தான் அரசியலில் ஈடுபடப்போவதை வெளிப்படையாகவும் பேசத்தொடங்கியிருந்தார்.

காங்கிரஸ் பக்கமும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழகத்தில் பொருத்தமான முகமாக விஜய் இருப்பார் என கணக்கிட்ட காங்கிரஸ் தலைமைப்பீடம் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறது. கைக்காசை செலவு பண்ணி அரசியலில் ஈடுபடுவது எடுபடுமா? எதிராக இருக்கக்கூடிய பெரும் கட்சிகளையும், தலைவர்களையும் எவ்விதம் எதிர்கொள்வது என எண்ணிக்கொண்டிருந்த விஜய்க்கு காங்கிரஸின் அழைப்பு பழம் நழுவி பாலில் விழுந்த கதை ஆயிற்று.

காங்கிரஸின் அழைப்பை ஏற்று, புதுடில்லி சென்ற விஜய், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தை பேரம் நன்றாகவே முடிந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைப் பேரத்தின் பிரகாரம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிளின் இளைஞரணிப் பொறுப்பு விஜய்க்கு வழங்கப்படவுள்ளதாகவும், தெரிய வருகிறது. வெகு விரையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் இந்த இணைவு இருதரப்புக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விடயம் குறித்து விஜய் தரப்பில் பொறுத்திருந்து பாருங்கள் என்பதைத் தவிர வேறெதுவும் தெரிவிக்கப்படவில்லை

'சனல்-4' வெளியிட்ட காணொலி ஒளிநாடா தொடர்பாக அமெரிக்கா தீவிர அக்கறை: ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் விவாதிக்கப்படலாம்

விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
"இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியதை அடுத்து மனித உரிமைகள் அமைப்புக்களின் கவனம் அதனை நோக்கிக் குவிந்திருக்கின்றது.

இந்தக் காட்சிகள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் சிறிலங்காப் படையினர் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதனைத் தயாரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுசன் றைஸ், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியின்படி செப்ரெம்பர் மாதத்துக்கான தலைமைப் பதவியை றைஸ் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளுமா என்பதையிட்டு எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்த றைஸ், காணொலி ஒளிநாடா தொடர்பான தகவல்கள் புதிதாக இருப்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், இதனைப் போர்க் குற்றமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எடுத்த நிலைப்பாட்டினால் நிராகரிக்கப்பட்டது.

நன்றி புதினம்

http://nilavupattu.blogspot.com/2009/08/blog-post_9118.html

Wednesday, September 2, 2009

ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடர்கின்றன

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென்று காணாமல் போய்விட்டதை அடுத்து, இன்று புதன்கிழமை காலையிலிருந்து அவரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் வனப்பகுதியில் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இருந்து சித்தூருக்கு காலை சுமார் எட்டரை மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர்.

கர்னூலைக் கடந்து செல்லும்போது சுமார் ஒன்பதரை மணி அளவில்
அவரது ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட பல ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால், அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரைப் பற்றியும் அவரது ஹெலிகாப்டர் பற்றியும் தகவல் கிடைத்தால் கிராமப்புற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆந்திர மாநில நிதியமைச்சர் ரோசையா மற்றும் தலைமைச் செயலர் ரமாகாந்த் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியை நாடியிருப்பதாகவும், மேலும், அமெரிக்காவின் செயற்கைக் கோள்கள், இன்று காலை ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் சென்றபோது ஏதாவது படம் பிடித்திருந்தால் அதுபற்றிய விவரங்களைக் கொடுக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே டெல்லியில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரவு நேரத்திலும் தேடுதல் நடவடிக்கையைத் தொடருமாறு ஆந்திர அரசை அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்

Tuesday, September 1, 2009

தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நண்பர்களே நாம் அனைவரும் எப்படியாவது தமிழர்களை கொடூரன் ராசபக்சே கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறோம். நமது மனக்குமுறல் அடுத்தவர்களுக்கும் தெரியும் படியாக அழகாகவே பதிவுகளினை இடுகிறோம். ஆனால் ஒரு சிறிய குறை என்னவென்றால் நம்மை யாரும் தமிழ்மணா வாசகர் பரிந்துரையில் கொண்டு வருவதில்லை. நமக்கு, நாமே உதவி, உங்களால் முடியும் போதுலெல்லாம் ஒரு வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு போட்டு விட்டு செல்லுங்கள். காசா, பணமா இன்னும் 4 பேருக்கு செய்தி சென்றால் நமது இனம் காப்பது விரைவுபடுமே.

அந்த இலங்கை அரசின் கோர படுகொலை கூட வாசகர் பரிந்துரையில் வரவில்லை. தயவு செய்து உங்கள் வாக்கினை ஈழப்பதிவுகளுக்கு அளியுங்கள்.