Thursday, September 24, 2009

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,

செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !

மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
அண்ணா..

--~--~---------~--~----~------------~-------~--~----~
வெட்ட வெட்ட தழைப்போம்! பிடுங்க பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எளுவோம்!!!! காலம் ஒருநாள் மாறும், எம் கனவுகள் யாவும் பலிக்கும். ஈழம் ஒருநாள் மலரும், எங்கள் குறைகள் யாவும் தீரும்

நன்றி http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=785:2009-09-24-07-21-45&catid=42:breakingnews

9 Comments:

வால்பையன் said...

அண்ணா ஆவியாயிருந்தாலும் ஆட்டோ அனுப்புவாங்க ஜாக்கிரதை!

லக்கி லுக் said...

நீ ஏதாவது புலம்பு, அழு, அல்லது தூக்கு மாட்டிக்க ஆனா என் தலைவனுக்கு அண்ணா விருது கண்டிப்பா கிடைக்கும்

Anonymous said...

/* நீ ஏதாவது புலம்பு, அழு, அல்லது தூக்கு மாட்டிக்க ஆனா என் தலைவனுக்கு அண்ணா விருது கண்டிப்பா கிடைக்கும் */

அதுதான் தெரிந்ததே, கொஞ்சமாவது தமிழன் அப்படின்னு ஒரு நினைப்பு இல்லாதவனிடம் தமிழனை பத்தி என்னத்த பேசறது. காலம் கண்டிப்பாக கருணாநிதியிடம் கேள்வி கேட்கும்.

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

//காலம் கண்டிப்பாக கருணாநிதியிடம் கேள்வி கேட்கும்.//
என்ன கோவி கண்ணன்? கேள்வி கேட்பீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.

Anonymous said...

வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.

இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.

Anonymous said...

1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.

தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.

பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Anonymous said...

ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.