Sunday, September 6, 2009

சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான் உண்டு: 'குமுதம்' வார ஏடு

ஈழத் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான் உண்டு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார ஏடு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' வெளியிட்ட காணொலியில் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் காட்சி தொடர்பாக குமுதத்தில் வெளிவரும் அரசு கேள்வி - பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கேள்வி கேட்டுள்ளார்.

அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு:

ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக்காட்சியைப் பார்த்தீர்களா? அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லியிருக்கிறாரே நம்பலாமா?

கிருஷ்ணாக்கள், நாராயணன்கள், மேனன்கள் எல்லாம் விசாரணை என்ற பெயரில் ராஜபக்ச வீட்டில் டிபன் சாப்பிட்டு வருவார்கள்.

இப்போதைய தேவை விசாரணை அல்ல, தண்டனை. அதை இந்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தமிழர்களே தந்தால்தான் உண்டு.

நன்றி புதினம்

0 Comments: