Saturday, March 14, 2009

புலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி

இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கைப் படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.


விசுவமடு, யாழ்ப்பாணம், கிலாலி உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.


குறிப்பாக, விசுவமடு பகுதியில் ராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலைப்புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.


புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ராணுவ தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


மேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

4 Comments:

Anonymous said...

7000 படையினரின் இழப்பை வெறும் 700 எனக்காட்டி புலிகளின் வீரத்தை குறைத்த மதிப்பிட செய்யும் நீங்கள் ராஜபக்ஷே ஆளா

நிலவு பாட்டு said...

/* 7000 படையினரின் இழப்பை வெறும் 700 எனக்காட்டி புலிகளின் வீரத்தை குறைத்த மதிப்பிட செய்யும் நீங்கள் ராஜபக்ஷே ஆளா */

எனக்கு தெரிந்து அங்கு படையினரின் சாவு 10000 அதிகம், இந்த 700 கடந்த 3 நாட்களில் சாரே,

இப்படி வேறயா, எப்படியாவது தமிழனுக்கு போராடுபவனை கவிழ்க்கனும் என்ற ஒரே நோக்கில் செயல்படும் மகிந்தவின் குள்ள நரிகளே, உங்களின் ஒரு செயலும் என்னிடம் பலிக்காது.

வெத்து வேட்டு said...

if you count all the ltte supporters' claim of SLArmy's death now half of Srilankan Forces are dead or injured...
:) :) :)
Praba doesn't like to go back to Kilinochi

நிலவு பாட்டு said...

/*if you count all the ltte supporters' claim of SLArmy's death now half of Srilankan Forces are dead or injured...
:) :) :)
Praba doesn't like to go back to Kilinochi */

வெண்னை பயலே, உன்னை இங்கே வரவேண்டாம் அப்படின்னு சொல்லியிருக்கேன் மறந்துட்டியா, உனக்கு எத்தனையோ துரொக பயலுக ஜால்ரா அடிக்க இருக்கானுங்க அங்கே போயி பேசுடா. சரி ஹம்சா உனக்கு சம்பளம் ஒழுங்கா கொடுக்கறானா, எதுவும் உங்களின் துரொக துறையில் ஆள் குறைப்பு என்று கேள்விபட்டேன், பார்த்து இருந்துக்கோப்பா. குடுமி எல்லாம் நல்லா வளரு, நிறைய இது மாதிரி comments ஆங்கிலத்திலும் போடு உனக்கு வேலை நிச்சயம் ஹம்சாட்ட.