Tuesday, March 10, 2009

தமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு

தமிழ் மக்கள் மத்திய அரசிடம் போர் நிறுத்தத்துக்கு கேட்கிற மாதிரிதான் எங்களுடைய கோரிக்கைகளுமா. எத்தனையோ மக்கள் வன்னியில் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருக்க, அந்த செய்தியை உலகுக்கு சென்றடையாமால் தடுக்க நினைப்பதேன்.

உனக்கு புரியிம் விதத்தில் எத்தனையோ கருத்துக்கள் நமது நண்பர்கள் கூறி விட்ட்டார்கள், இன்னும் ஏன் இந்த மவுனம்.

இந்த நண்பரின கருத்துகளை பாருங்கள், மனம் மாறுங்கள்

/*செய்திகள் என்றால் அதற்கும் ஒரு தோற்றுவாய் இருக்கத்தானே வேண்டும்.சொந்தமாக செய்தி 'புனைந்தால்'தான் இவர்களுக்கு திருப்தி வருமோ?
*/

சரியாக சொன்னிர்கள்

எந்த உணவாக இருந்தாலும் வாய் வழியாகத்தான் சாப்பிட வேண்டும் உணவுகுழல் வழியாகத்தான் வயிற்றினை அடைய வேண்டும். இல்லை இது எனக்கு பிடிக்காது அதனாலே நான் பின்னாடி வழியாதான் இதை அனுப்புவேன் சொன்னால் அவனை பார்த்து சிரிக்கறதா இல்லை அழறதா.


சொந்தமாக எழுதறது கூட ஒரு வகையில் வலைகளில் மேய்ந்து அதை மென்று கொத்தி, கொதறி கொடுப்பதும் அடங்கும்.

இந்த நம் தமிழின உணர்வாளர்கள்(மைக்,.....) உண்மையாக நன்றியுடன் எடுத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அதுதான் பிரச்சனையே. உண்மைக்கு இப்போது காலம் கிடையாது.

ஒரு தமிழின துரோகி பல காலமாக போட்டதையே இரு மாதத்துக்கு திருப்பி, திருப்பி போடறான் அவனெல்லாம் ராஜா. மொத்தம் 30 இடுகை வச்சிட்டு இவன் பண்ற அட்டூழியம் இருக்கே அப்பா.

0 Comments: