Monday, March 9, 2009

ஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது

/* ஒரு விசயம் ஏற்கனவே கிடைக்கும் போது அதை மீண்டும் அதை எந்த விதத்தில் தனக்கு தகுந்த மாதிரி மனிதன் பயன்படுத்தி கொள்கிறான் என்பதே முக்கியம். கிரிக்கெட்டில் பேட் அவனேதான் பண்ணி விளையாடனும் அப்பதான் அவனுக்கு ரன் கொடுக்கப்படும் என்று சொன்னால் எப்படி இருக்கும் அது போல் உள்ளது உங்களின் வாதம் அவன் வேறு எங்கிருந்தோ பேட் வாங்கிருந்தால் இரண்டு ரன் எடுத்தாலும் ஒரு ரன் கொடுப்போம் என்பது எப்படி ஒரு முட்டாள் தனமோ, அது மாதிரி உங்களின் சிந்தனை உள்ளது. */

வளன் சரியாக சொன்னீர்கள், ஏன் மதுபாலாவும், தமிழ்மணமும் இணைந்து ஒரு internet கண்டுபிடிக்கட்டும், browsing software கண்டுபிடிக்கட்டும், ஒரு operating system கண்டுபிடிக்கட்டும், ஒரு server கண்டுபிடிக்கட்டும், ஏன் மற்றொருவரின் technology பயன் படுத்துகிறார்கள். வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்துமே மற்றவர்களின் முந்தைய கண்டுபிடிப்பே. ஏன் நம் எழுத்துக்களும் ஒரு வகையில் மற்றவர்களின் தாக்கமே.

தமிழின விடுதலை தன்னால் மட்டுமே எடுத்து செல்லப்பட வேண்டும், ஆனால் என்னால் என் வரம்புக்கு மீறி எதுவும் பேசவும் முடியாது, அப்படி எவனும் பேசினால் அதுவும் கூடாது என்று சொல்லும் கருணாநிதியை போல் உள்ளது உங்களின் கருத்து.

0 Comments: