Tuesday, June 23, 2009

30 வருட கழக ஆட்சிகளின் அன்பளிப்பு இதுதான்.

தமிழன் மூளையை மழுங்கடித்து சினிமா, டிவி, போதை, பரபரப்பு அரசியல், டாஸ்மாக் என்று எல்லாவிதத்திலும் அடைத்து போட்டு விட்டார்கள். அனைத்தும் ஒரு வித போதையே என்று தெரியாமல் அதை பற்றி கொண்டிருக்கிறோம்.

எந்த சுரணையுமின்றி வேலை,பிழைப்பு, குடும்ப வாழ்க்கை என்று குறுகிய வட்டத்திற்குள் மட்டுமெ இருக்க விழையவும் எந்த போராட்ட குணமுமின்றி யார் வாழ்ந்தால், செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்த்து விட்டவர்கள்.

தலைவர்கள் எவ்வழி.. மக்கள் அவ்வழி...

அப்படியே அதையும் மீறி நடந்த போராட்டங்களை கல்லூரி விடுமுறை, போலிஸ் தடியடி என்று திசை திருப்பி நீர்த்து போகச்செய்தவர்கள்.

தேர்தல் நேரத்தில் யார் ஈழ நிலைப்பாடு சிறந்தது என்று பாப்பையா பட்டி மன்றம் ந்டத்தி ஓட்டு கேட்ட்வர்கள்.

இன்னும் ஒரு சீட்டு கிடைத்தால் எதிர் அணிக்கு தாவ ரெடியாகி விட்ட அரசியல் அனுமான்கள்.


ஊடகங்களே பற்றி சொல்லவே வேண்டாம்.

திடுக் ரிப்போர்ட், அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு செய்தி என்று எல்லாவற்றையும் காசாக்க எல்லாவித கேடு கெட்ட செயல்களையும் செய்து அவர்களும் போலெரோ வில் சவாரி செய்ய எடிட்டர் காலத்தை எச்சையாக்கி விற்பனையாக்கும் விபச்சாரிகள்.

இன்னும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் ஏராளம்.

தெரிந்தே அவரவர் த்த்தம் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

நமக்கு தேவை அரசியல் கட்சிகள் அல்ல.

சுயநலமில்லாத நல்ல தலைவன். அதுவே அவசியம்.

அவன் சினிமாக்காரனாக இல்லாதிருத்தல் அதைவிட அவசியம்.

நன்றி வண்ணத்துபூச்சியார்

0 Comments: