Wednesday, February 18, 2009

இலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு

"போபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா" என்ற இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முஹமது அலி ஜின்னா இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,

"அப்பாவி தமிழர்கள் குறிப்பாக பெண்களும்,குழந்தைகளும் பலியாகின்றனர்.குறிப்பாக மருத்துவமனையில் கூட குண்டுகள் வீசபடுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜக போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டபேரவையில் தீர்மானம் போட்டும்,உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தியும் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து வரும் வேளையில் பாதிக்கப்படும் ஈழ தமிழர்களுக்காக இஸ்லாமியர்கள் குரல் குடுப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

0 Comments: