Monday, February 16, 2009

உலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போரை முறியடிப்போம் விரைவீர்

உலகத்தமிழர் செய்தி அன்பார்ந்த தமிழ் உறவுகளே தற்காலத்தில் இணையதளமானது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகமாக உள்ளது. தற்பொழுது நமது இனத்தினை தாயகத்தில் அழித்துக்கொண்டிருக்கும் சிங்களர்கள் இணையதளத்தின் மூலமாக தவறான கருத்துக்களை இவ்வுலகிற்கு பரப்பிவருகின்றனர்.

நம்மீதான இணையதள கருத்தியல் போரினை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் இணையத்தில் நம் நிலவரங்களை தெரிவித்து வரும் வேளையில் சிங்களர்கள் அக்கருத்துக்கள் தவறானது என்று பரப்பி வருகின்றார்கள். தமிழீழத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள சர்வதேச எழுத்தாளர்களின் கட்டுரைகளில் மறுப்பு தெரிவித்து தவறென்று சிங்களவர்கள் அதிகளவு கருத்து தெரிவித்துள்ளனர். ஆயுதப்போராட்டம் , அரசியல் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே புலம்பெயர் மக்களாகிய நாம் இணையதள ஊடகப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

நாம் செய்யவேண்டிய வேலை நமக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் சர்வதேச ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நம் ஆதரவு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். புலம்பெயர் வாழ்மக்களாகிய நாம் தாயக விடுதலைப்போராட்டத்துக்கு இவ்வகையான கருத்தியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உலகத்தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தளங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க விரைந்து தெரிவிக்குமாறு உணர்வுகளுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. Leading article: A military victory that will sow the seeds of hatred (The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/leadi...ed-1609198.html


2. British envoy banned in war without witnesses (The Independent - UK)
http://www.independent.co.uk/news/world/as...es-1609188.html

3. Robert Evans MEP: Who can protect Tamil civilians caught in the conflict?(The Independent - UK)
http://www.independent.co.uk/opinion/comme...ct-1609189.html

0 Comments: