Saturday, February 28, 2009

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளிப்பு

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒருவர் தீக்குளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.பீ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக கருதப்படும் இந்த தீக்குளிப்ப்பை அடுத்து லண்டன் அம்பியூலன் சேர்விஸ் அந்த இடத்திற்கு சென்றதாகவும் அவரை உடனடியாக வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் லண்டன் காவற்துறையை மேற்கோள் காட்டி ஏ.பீ செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தீக்குளித்தவர் யார் என்பது பற்றியோ அவரது தற்போதைய நிலை என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.



http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=6541&cat=13

0 Comments: