Saturday, April 11, 2009

1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள் பட்டொலி வீசி பறந்த வரலாற்று பேரணி


ஆம் இந்நாள் வரை தமிழீழ விடுதலை போராட்டத்துடன் புலிகளை இணைத்து பேசுவதோ, புலி சின்னம் பொறித்த தமிழீழ கொடியினை பயன்படுத்துவதனை இந்த ஆரிய பேய்களும், தமிழின துரோகிகளும் விடுதலை போராட்டத்தினையிம் விடுதலை புலிகளையும் பிரிக்கும் சூழ்ச்சியாக கையாண்டு வந்தன, இந்த பேரணியின் மூலம் அது தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள் என்பதனையே இந்த மாபெரும் பேரணி உணர்த்துகிறது. அனைவரும் இணைந்தே இனவெறி சிங்கள அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்ற செய்தியினை சொல்கிறது.

சிங்களவனுக்கும், சோ, சாமி-யும் கதி கலங்கப்போவது உறுதி. குடுமிகள் இப்பவே ஒன்னுக்கு போக ஆரம்பிச்சாடானுங்க. கருணாநிதியும், ஜெ எத்தனை அணை போட்டு தடுத்தாலும் இன்று போராட்டம் ஒரு முக்கிய இலக்கினை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த போராட்டம் மாணவர்களாலே ஆரம்பிக்க பட்டது, மாணவர் புரட்சி என்பது இன்று உலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

நன்றி மாணவர்களே, உங்கள் கையிலே தமீழீழ விடுதலை உள்ளது. பிரிட்டனின் பத்திரிக்கை துறையினரை இன்று தமிழீழம் பற்றி பேச வைத்துள்ளிர்கள். முதல் பக்கத்தில் இன்று ஈழ விடுதலையினை பற்றி பக்கம், பக்கமாக எழுதுகிறார்கள். மாணவ புரட்சி இன்று பேனா முனைகளை சிந்திக்க வைத்துள்ளது.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் இன்று இத்தகையதொரு போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

0 Comments: