Saturday, April 18, 2009

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை: கொலைஞர்

மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி,


எனக்கு முன்பு இங்கே பேசியவர்களெல்லாம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைபோல், இந்த தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று சூளுரைத்தார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை.


தமிழ் இலக்கியத்தில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்று உண்டு. நாம் 40 இடங்களில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம் என்றால், இவை இனியவை நாற்பது. நம்முடைய நாற்பது வேட்பாளர்களை எதிர்த்து நிற்க கூடியவர்கள் இன்னா நாற்பது. எனவே இனியவை நாற்பது வெற்றி பெற ஒத்துழைக்க நீங்கள் பாடுபட வேண்டும்.


இந்த தேர்தல் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்றாலும் கூட எதிரணியினர் என்ன பேசுகின்றனர் என்றால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணியை வென்று விட்டால், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரும் அதில் நாங்கள் நின்று வெற்றி பெற்று திமுக தலைமையில் உள்ள இந்த அணியை தண்டிப்போம். இந்த அணியை பழிவாங்குவோம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.


நான் அவர்களுக்கும் சொல்லுகிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன். மத்திய, மாநில அரசுகள் ஒன்றோடு ஒன்ற தொடர்பு கொண்டு ஒற்றுமைக்கு பங்கமில்லாமல் பணியாற்றி வருகிறோம். எனவே 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை என்றார்.

2 Comments:

சாந்தி said...

ஆம் ஆம் கொலைஞர் கொ(வெ)ல்லுவார். எவரையெல்லாமோ காலம் கொண்டு போகிறது இவரை ஏன் இன்னும் காத்திருக்க வைத்திருக்கிறது...? கடவுளுக்கா இல்லை காங்கிரசுக்கா வெளிச்சம் ?

சாந்தி

ttpian said...

மு.க இப்படி மாறுவார் என்று யார் எதிபார்த்தார்?
அப்படி இடாலி சொக்கத்தன்கத்தில் என்னத்தை கண்டார்?