Saturday, April 11, 2009

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும்

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் இன்று நாம் உள்ளோம். சில நண்பர்கள் தவறான கருத்துக்களுடன் இவர்களை தோற்கடித்தால் ஜெ வந்து விடுவார் என பயப்படுகின்றனர். இந்த காங்கிரஸ் அரசினை விட யாரும் தமீழீழ விடுதலையினை/தமீழீழ மக்களை கொலை செய்திருக்க முடியாது. ஏறக்குறைய இன்று தமிழினம் அழியும் நிலையில் உள்ளதற்கு காரணம் இந்த காங்கிரஸ்தான்.

இது புரியாதது போல் கருணாநிதியும், வீரமணியிம் மதி கெட்டு அழைகின்றார்கள். இந்த கூட்டணி பொன்.சகோ, ராசபக்சேயை மட்டும்தான் போர்நிறுத்த கூட்டங்களுக்கு அழைத்து வரவில்லை. முடிந்தால் மக்களை ஏமாற்ற அவர்களை அழைத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

தைரியமாக உண்மை தமிழனாக, தமிழ் மக்களின் மேலுள்ள அன்பினால், பாசத்தினால் கூறுகிறேன் எந்த குழப்பமும் இன்றி இந்த காங்க்கிரஸ்-திமுக கூட்டணியினை தோற்கடியுங்கள். இவர்களை தவிர்த்து யார் வந்தாலும் அது நமக்கு நன்மையே. நான் கட்சியால பிழைப்பவனும் அல்ல. எந்த கட்சி அனுதாபியிம் அல்ல.

வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போழுது முதலில் இந்திய ராணுவ உதவிகள் வாபஸ் வாங்கப்படும், இலங்கை ராணுவம் இன்று ஆள் பற்றாகுறையில் தவிக்கிறது. இந்தியா தனது உதவிகளை நிறுத்துவது கூட தமீழீழ வெற்றியின் ஆரம்பமே.

மீண்டும் சொல்கிறேன் தி.க தொண்டர்களே, வீரமணியின் புத்திசாலிதனம் காணாது, அவரால் ஒரு குறுகிய வட்டத்துகுள்ளே சிந்திக்க முடிகிறது. அந்த வட்டம் கருணாநிதியினை சார்ந்தே உள்ளது.

கருணாநிதி காங்கிரஸோடு இருக்கும் வரை அவருக்கு ஜெ வித்தியாசம் கிடையாது. கண்டிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்கப்படவேண்டும். இன்னும் 2 வருடத்திற்குள் கருணாநிதி திருந்துவதை பொறுத்து அவருக்கு சட்ட மன்ற தேர்தலில் ஆதரவளிக்கலாம்.

4 Comments:

மதி said...

கருணாநிதி-காங்கிரஸ் கூட்டணி வருவதினால எந்த பயனும் தமிழீழத்திற்கு வரப்போவதில்லை, இதே மாதிரிதான் கருணாநிதி தனது கையலாகததனத்தை கூறிகொண்டே இருக்கப் போகிறார், காங்கிரஸ் இதே போக் தமிழர்களை கொன்று குவிக்கத்தான் போகிறது. பாஜக அல்லது மூன்றாவது அணி வருவதே தமிழர்களுக்கு நல்லது.

சரியான பதிவு நண்பரே.

vanathy said...

எனக்கு இந்தியக் குடி உரிமையும் இல்லை,வாக்குரிமையும் இல்லை,ஆனால் இந்திய விவகாரங்களில் ஈடுபாடு உண்டு.உலகம் சுருங்கி விட்ட நிலையில் அமெரிக்க தேர்தலில் இந்தியருக்கு இருந்த அக்கறையை ஈடுபாடை விட எனக்கு இந்தியாவின் தேர்தலில் அதிகமான ஈடுபாடும் அக்கறை மட்டுமல்ல ,தமிழினத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் உரிமையும் உண்டு.
அது மட்டுமல்ல இந்திய மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ,ஈழத்தமிழரின் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் பாதித்து வந்திருக்கிறது.இப்போதும் பாதித்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நான் பிறப்பதற்கு ;பல காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன ஆனால் அதன் பின் விளைவுகளை ஈழத்தமிழர்கள் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் குடி உரிமையைப் பறிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்ததில் இருந்து கச்சை தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததில் தொடர்ந்து ஈழ விடுதலை இயக்கங்களுக்கு முதலில் ஆதரவு கொடுத்து பின்பு அவர்களுக்கு மத்தியில் பிரிவினையைத் தூண்டி சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததில் இருந்து இந்தியாவின் பங்கு தொடர்ந்து கொண்டு போய் அதன் உச்சக் கட்டமாக இந்திய அமைதிப் படையை அனுப்பி பத்தாயிரம் ஈழத்தமிழர்களின் உயிரை எடுத்ததில் இருந்து இன்று இலங்கை அரசின் இனப்படுகொலை யுத்தத்திற்கு உதவி செய்வது வரை இந்திய அரசு ஏதோ ஒரு விதத்தில் ஈழத்தமிழரின் நவீன பின் காலனித்துவ வரலாற்றில் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ளது.
அந்த விதத்தில்தான் இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் --பெரும்பாலான இந்த நடவைக்கைகள் திரைமறைவில் நடப்பவை.- ஈழத்தமிழரை நிச்சயம் பாதிக்கும். என்பதால் இந்தியாவின் தேர்தலில் அக்கறை காட்டுகிறேன்.
அந்த விதத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஒரு காலத்தில் நான் திமுகவின் ஆதரவாகத்தான் இருந்தேன் ,அவர்களின் ஆரம்ப கால கொள்கைகளான தமிழ் உணர்வு,சாதி எதிர்ப்பு ,மதச்சார்பின்மை எளிய பாமர மக்களுக்காக குரல் கொடுக்கும் தன்மை என்பவற்றால் ஈர்க்கப் பட்டேன் ,சமீப காலம் வரை செல்வி.ஜெயலலிதாவுடன் ஒப்பிடும் போது திரு கருணாநிதி பரவாயில்லை என்று நினைத்திருந்தேன்
ஆனால் திமுக இன்று கொள்கையில் சோரம் போன ,பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொண்ட ஒரு குடும்ப இயக்கம்மாக மாறிவிட்டது.
அதை விட மோசம் ,ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட அதைத் தடுக்க எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ,இலங்கை அரசுக்கு துணை புரியும் காங்கிரஸ் ஆட்சிக்கு முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆறு மாதத்துக்கு முன்பு ஆரம்பித்த தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு என்ற மக்கள் கிளர்ச்சியைத் தடுத்ததில் கருணாநிதி அவர்களின் பங்கு பெரியது .அது மட்டுமில்லை ஈழ ஆதரவாளர்களையும் ,தமிழ் உணர்வாளர்களையும் சிறையில் தள்ளி கருத்து சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் திரு கருணாநிதி காலில் போட்டு மிதித்து உள்ளார் இந்த விஷயத்தில் இவரும் ஜெயலலிதாவிற்கு சளைத்தவர் இல்லை.
ஜெயலலிதா பிரபாகரனைப் பிடியுங்கள் ,போரில் சாவது தவிர்க்க முடியாதது என்று எல்லாம் திருவாய் மலர்ந்து இருக்கிறார்தான் இவை எல்லாம் வாய் மொழிகள்தான் ,அவர் செயல் ரீதியாக இன்னும் ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை கரிக்கட்டைகளாக ஆக்கும் சிங்கள அரசுக்கு உதவும் காங்கிரசுக்கு ஆதரவு காட்டியதின் மூலம் கடந்த பல மாதங்களாகக் கொல்லப் படும் ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கும் மறைமுகமாக உதவி உள்ளார்.
எல்லோரும் சொல்கிறார்கள் ,அவரால் என்ன செய்திருக்க முடியும் என்று.
அவரால் நிறைய செய்திருக்க முடியும் ,ஆறு மாதங்களுக்கு முன்பே துணிச்சலாக நேர்மையாக இதய சுத்தியோடு ஈழத்தமிழரின் விடயத்தில் அவர் நடந்திருந்தால் இந்திய மத்திய அரசின் போக்கில் அவர் மாற்றம் கொண்டுவந்திருக்கலாம் இந்தியாவின் ஆதரவு இருந்த படியால்தான் இந்த சின்ன ஸ்ரீலங்கா இவ்வளவு திமிர்த்தனமாக நடக்கிறது. இந்தியாவும் இலங்கை போரில் சம்பத்தப்பட்டு உள்ளதால்தான் மற்றைய உலக நாடுகளும் ஐநா சபையும் இலங்கைமீது காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
எனவே சொல்லுகிறேன் ,அதிமுக வென்றாலும் பரவயில்லை என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன்
ஜெயலலிதா தமிழ் உணர்வு இல்லாதர்தான் ,ஆனால் முதியவருக்கு அது இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மதத்துவேஷக் கொள்கை உள்ளவர்களோடு கூடிக் கொஞ்சுபவர்தான் ஆனால் கருணாநிதி அவர்களும் பாஜக வுடன் கூட்டணி வைத்த்வர்தானே
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கிறார்,
கருணாநிதி அவர்கள் செய்தே இருக்கிறார்.
ஜெயலலிதா தமிழின எதிரி என்று சொல்லப்படுபவர் ஆனால் எதிரிகளுடன் போராடுவது சுலபம் ,ஏனெனில் அவர்கள் வெளிப்படையானவர்கள்
ஆனால் துரோகிகளோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ,ஏனெனில் அவர்கள் நயவஞ்சகத்தனமாக இருந்து நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களை அழித்து நம்பிக்கை துரோகம் செய்து முதுகில் குத்துவார்கள்.
ஒருகாலத்தில் அதிமுக வெற்றி பெற்றால் வருத்தபடுவேன் இப்போது அப்படி இல்லை.
காங்கிரஸ் தோற்றால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்
-வானதி
sorry I have put the same comments on an other blog as well.
but as I am not sure whether that will be published I have put the same comments here,hope you don't mind .

வெ. ஜெயகணபதி said...

மத்தியில காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வர கூடாதுன்னு தான் நானும் நினைக்குறேன் ஆனா அதுக்காக கலைஞர விட்டு கொடுக்க முடியாது...

தமிழ் ஈழம் மலருதுன்னா அது மகிழ்ச்சியான விஷயம் தான்..

அதுக்கு என்னோட ஆதரவு மட்டும் இல்ல உண்மையான தமிழரா கலைஞரோட ஆதரவும் நிட்சயம் இருக்கும்....

நிலவு பாட்டு said...

/* மத்தியில காங்கிரஸ் மறுபடியும் ஆட்சிக்கு வர கூடாதுன்னு தான் நானும் நினைக்குறேன் ஆனா அதுக்காக கலைஞர விட்டு கொடுக்க முடியாது...

தமிழ் ஈழம் மலருதுன்னா அது மகிழ்ச்சியான விஷயம் தான்..

அதுக்கு என்னோட ஆதரவு மட்டும் இல்ல உண்மையான தமிழரா கலைஞரோட ஆதரவும் நிட்சயம் இருக்கும்....

*/

நண்பா மீண்டுமா, வேண்டாம் தாங்காது. விடிய, விடிய கதை கேட்டு சீதைக்கு, ராமன் யார்ன்னு கேட்டா சொல்றானாம் சித்தாப்பன்னு.

கண்டிப்பா உங்க மாமா காண்ட்ராக்டு எந்த ஆட்சி வந்தாலும் உண்டு பயம் வேண்டாம். போய் வா நண்பா.