Saturday, May 9, 2009

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரசஸ் கருங்காலி இளங்கோவன் வீடு முற்றுகை பலர் கைது

தமிழுணர்வாளர்களை கொச்சைப்படுத்துவதும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதையே நோக்கமாக கொண்ட காங்கிரசஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேசு இளங்கோவனை கண்டித்து வீட்டை முற்றுகையிட்டு தமிழுணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்றும் சீமான், பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்றும் முத்துக்குமரன் என்றால் யார் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் 48 மணி நேரத்தில் இப்பேச்சுக்காக இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும் என்று இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு விடுத்திருந்தது.

இக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று காலை 10 மணியளவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வீட்டை இளந்தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட முடிவு செய்து, 50 திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

முற்றுகையிடுவதற்கு முன்பாக பெரியார் சிலைக்கு மாலையிட இளந்தமிழர் இயக்கத்தினர் முற்பட்டனர். மாலையிடுவதற்கு அனுமதி மறுத்தது மட்டுமில்லாமல் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உட்பட 10 பேரை காவல் துறை கைது செய்தது.

மூலம்: மீனகம்.கொம்

0 Comments: