Sunday, May 17, 2009

தந்தி மட்டுமே அடித்த தலைவன் டில்லி வண்டி ஏறுகிறார்

நம் இனம் அழிந்து கொண்டிருக்கிறது தினமும் 1000 பேர் வரை கொல்லப்படுகிறார்கள், ஒருமுறை நேரில சென்று கேட்க முடியாத இந்த முதலவர் இன்று தன் குடும்பங்களுக்கு முக்கிய இலாகா அமைச்சர்களை பெற்று கொள்வதற்கு வண்டி ஏறுகிறார். இந்த தமிழினத்திற்கு என்றுதான் புத்தி/இன உணர்வு எல்லாம் என்றுதான் வரப்போகிறதோ.

கலைஞர் டெல்லி பயணம் குறித்து நாளை முடிவு

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி டெல்லி செல்வது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி திங்கள் கிழமை டெல்லி செல்வார் என கூறப்பட்டது.

இதற்கிடையில் திமுக செயற்குழு கூட்டம் நாளை அண்ணா அறிவலாலயத்தில் நடைபெறும் என்று அமைச்சர் அன்பழகன் அறிவித்திருந்தார்.



இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் திமுக செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும். மத்திய அமைச்சரவையில் தமிழக அமைச்சர்களுக்கான இடங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர், தலைவர் கருணாநிதி டெல்லி செல்வது குறித்து நாளைய செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

1 Comment:

கண்ணா.. said...

// நம் இனம் தினமும் 1000 பேர் வரை கொல்லப்படுகிறார்கள், ஒருமுறை நேரில சென்று கேட்க முடியாத இந்த முதலவர் இன்று தன் குடும்பங்களுக்கு முக்கிய இலாக அமைச்சர்களை பெற்று கொள்வதற்கு வண்டி ஏறுகிறார். //

நச் கேள்வி...

ஆனா உடன்பிறப்புகளுக்கு உறைக்குமா?