Sunday, May 10, 2009

காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடாதே ஓட்டு தமிழினத்திற்கு வைக்க்காதே வேட்டு

* ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டில் நாம் போராடியும், ஈழத்தில் போர் நிறுத்தம் வரவில்லையே ஏன்?

* வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் ஈழப்போரை இயக்குவது நடுவண் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்தாம்.!

* போரை இயக்குபவர்களை நடுநிலையாளர்களாகக் கருதி நாம் அவர்களிடம் போர் நிறுத்தக் கோரிக்கை வைத்தோம். இது நமது முதல்குறை.

* ரேடார் முதல் போபர்ஸ் பீரங்கிவரை இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைக்குக் கொடுத்துள்ளார்கள்.

* இந்தியக் கடற்படை ஈழ மண்ணைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளது. இந்திய வான்படையும் இப்போரில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்களை அழிக்கப் பல்லாயிரம் கோடி ரூபாய்களை இந்தியா கொட்டிக் கொடுக்கிறது இலங்கைக்கு!

* முல்லைத் தீவின் முகப்பில் குவியல் குவியலாய்த் தமிழர் பிணங்கள்; கைகள் துண்டிக்கப்பட்டு கால்கள் துண்டிக்கப்பட்டு குழந்தைகள்!

* “தமிழ் ஆண் கடலுக்கு, தமிழ்ப் பெண் இராணுவ வீரனுக்கு” என்று கொக்கரிக்கிறான் கோத்தபய இராசபட்சே!

* பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரவழதை;துத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் குண்டு போட்டுக் கொல்கிறார்கள்.

* இந்த மனித அழிவை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்துப் பார்த்து மனம் பதைத்துத் தீக்குளித்து மடிகிறார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

* தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேர்க்கு மேல் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதற்கான துணிச்சலை இந்திய அரசுதான் சிங்களப் படைக்கு அளித்து வருகிறது.

* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் உள்ளிட்டவற்றில் தமிழக உரிமைகளைப் பக்கத்து மாநிலங்கள் பறிப்பதற்கு இந்திய அரசு தான் மறைமுகமாகத் துணை செய்கிறது.

* ஈழத்திலிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்தாலும் தமிழர்களைப் பகையினமாகத்தான் தில்லி ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். தமிழர் அவர்களுக்குப் பகையாளி; சிங்களர் அவர்களுக்குப் பங்காளி.

* ஈழத்தமிழ் இனத்தை அழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள இந்தியக் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டாவிட்டால், நம் இனம் பூண்டோடு அழிந்துவிடும்.

* தற்காப்புணர்ச்சியும், தன்மான உணர்ச்சியும் இல்லையேல் ஈழத்தில் நம் கண் முன்னால் தமிழ் இனம் அழிந்துவிடும். தமிழ்நாட்டில் நாம் கொத்தடிமைகள் ஆக்கப்படுவோம்!

2009 மே 13-ஆம் நாள் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
தீக்குளித்த தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்!;!
அன்றாடம் ஈழத்தில் கொல்லப்படும் ஈழத்தமிழர் நினைவு அனலாக எரியட்டும்.

காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடாதே ஓட்டு தமிழினத்திற்கு வைக்காதே வேட்டு
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடும் வாக்கு! தமிழினத்திற்குப் போடும் தூக்கு

1 Comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.