Sunday, May 3, 2009

திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் தமிழர்களே!!!

காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பதன் காரணத்தால் அவரை அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு அன்பாக கேட்டுக்கொள்ள வேண்டும்.

இறுதியாக குமுதத்தில் திருமாவளவனின் நேர்காணலை பாhத்தேன் கூட்டணியை விட்டு வெளியேறினால் தனக்கு பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார் அதற்காக தி மு க வை ஆதரிப்பதன் மூலம் காங்கிரசை ஆதரிக்க முன்வந்துள்ளார். இதைவிட அவர் தமிழர்களுக்காக பாராளுமன்றம் போகாமல் இருப்பதே மேலானது.

உலகத்தமிழர்கள் தருமாவளவனை அன்போடு கண்டிக்க முன்வாருங்கள்;.
அவருடன் தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் - thirumaa@hotmail.com
-----------------------------------------------------
செ.அறிவமுதன்
மாநிலச்செயலாளர்-ஊடகப்பிரிவு.
பொறுப்பாசிரியர் றறற.எஉம.in
அலைப்பேசி எண் - 97101 95787
--------------------------------------------------------
தொல்.திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
எ4எ. நு¡றடி சாலை. அசோகர் நகர்
சென்னை-600083
தமிழ்நாடு. இந்தியா
-------------------------------------------------------

2 Comments:

hopeoflifetrust said...

hai anna how r you.i love you so much''''waiting for your coming '''''''''yours D.Arunkumar[karnataka state dpi vck'

hopeoflifetrust said...

dear vck father your comeing next month waiting for me[ karnatka and strnthing vck'thank you for coming anna;