Monday, May 11, 2009

என் மூத்த மகன் பிரபாகரன்தான்:சீமானின் தாய்

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பாக புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடிந்தது.


இப்பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான், ’’இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு 70நாட்கள் புதுச்சேரி சிறையில் இருந்தேன்.

அப்போது ஒரு நாணயம் போட்டு போன் பேசுவதற்கு அனுமதி இருப்பதால் என் அம்மாவுக்கு பேசினேன். அப்போது என் அம்மா, நான் 5 பிள்ளைகள் பெற்றேன். ஆனால், என் மூத்த மகன் பிரபாகரன் தான். நீ போராட்டத்தில் மனம் தளராதே என்று சொல்லி எனக்கு ஆறுதல் அளித்தார்’’ என்று பேசினார்.

2 Comments:

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.