Tuesday, April 21, 2009

103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி

நிஜமாவே இவரு காமெடி ஏதும் பண்றாரா அல்லது தமிழன் எல்லாம் ஏமாளி நினைச்சிட்டு இருக்கிறாரா, போரை நடத்துபவனிடமே தந்தி அடிச்சு இன்னாமா நாடகம் போடறாருப்பா. உன்னோட ஒவ்வொரு அவசர தந்திக்கும் 1 லட்சம் ஓட்டுகளை இழக்க வேண்டும்.

சென்னை: இலங்கையில், நிரந்தர போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அந்நாட்டு அரசுக்கு இந்தியா இறுதி கெடு விதிக்கவேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று அவசர தந்தி அனுப்பியுள்ளார்.

முன்னதாக, நேற்று இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 476 சிறுவர்கள் உட்பட 1496 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததனர். இதனிடையே, பிரபாகரனுக்கு, அந்நாட்டு அரசு விதித்த கெடு இன்று மதியம் 12 மணிக்கு முடிவடைந்த நிலையில், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் கருணாநிதி, மன்மோகன்சிங், தலைவர் சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி ஆகியோருக்கு இன்று அவசர தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில், உச்சகட்ட போர் நடைபெற்று வருவதாகவும், இதனால், அப்பாவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, அங்கு நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கையில், போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட உலகநாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அங்கு போர்நிறுத்தம் செய்வது அவசியம் என்றும் கருணாநிதி அந்த தந்தியில் கூறியுள்ளார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாத பட்சத்தில், அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 Comments:

ttpian said...

கம்பியில்லா தந்தியா?
கவனமாக காலம் கடத்தவும்!
அப்போதுதான் நன்பன்/சொக்கத்தங்கம்,தமிழனை,தீர்த்துக்கட்ட அவகாசம் கிடைக்கும்!

Anonymous said...

karunathi is a cunning man. we have to be very careful with him, to run his govt he might be ready to kill tamilnadu people also.