Thursday, April 23, 2009

இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்?

இந்திய அரசு மற்றும் கருணாநிதி ஒப்புதலுடன் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மறைக்கவே இன்றைய பொது வேலை நிறுத்தம் கருணாநிதியால் நடத்தப்பட்டது. மக்களே இந்த சகுனியின் சதி வலையில் விழ வேண்டாம்.

சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளிடம் இருக்கும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கவே சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: