Friday, April 10, 2009

கடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க மாட்டான் நம் தமிழின உலக தலைவன் கருணாநிதி

இதை விடுதலையில் தலையங்கமாக எழுத என் அன்பு தம்பு வீராசாமி இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் கிடையாது, அதை தமிழ் வலைபதிவர்கள் தமிழ் ஓவியா மற்றும் சிலர் கருமமே கண்ணாக வலைப்பதிவுகளில் போடும் வரை நான் என்றும் தமிழின அழிவிற்கு துணை போவதில்லை என்று உலகுக்கு சொல்ல இந்த பாடுபடும் தம்பு வீராசாமி மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பதவி உண்டு.

இவர் எத்தனை கல்லூரி கட்டினாலும் 10 தலைமுறைகளுக்கு அனுமதி உண்டு, பெரியாரின் சொத்துகள், படைப்புகள் தம்புவுக்கே சொந்தம்.

மூளைசலவை செய்யப்பட்ட தி.க தொண்டர்கள் இருக்கும் வரை தம்புவை நான் மதிப்பேன். பகுத்தறிவுவாதிகளாக இருந்தாலும் பராவாயில்லை இந்த தமிழின கொலையை தம்பு கண்டுக்காத வரை என்னை பத்தி பெருமையாக தலையங்கம் எழுதும் வரை நான் என்றுமே சந்தோசத்தில் இருப்பேன்.

2 Comments:

நிலவு பாட்டு said...

/*ஈழத்தில் போர் நிறுத்தம்
ஏற்படச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்!*/ தம்புவின் மற்றுமொரு அறிக்கை, அய்யா செத்து எல்லாம் மடிய வேண்டாம், உண்மையாக கருணாநிதி கொடி பிடிக்கறத நிறுத்துங்க முதலில் அதுவே அந்தாளுக்கு விழும் பேரிடியாக இருக்கும், அதுவே பயம் வந்து தமிழர்களை காப்பாற்ற வைக்கும்.

சவுக்கடி said...

மூளைசலவை செய்யப்பட்ட தி.க தொண்டர்கள் இருக்கும் வரை தம்புவை நான் மதிப்பேன். ///

பெரியாரையும் சிந்திப்பதையும் மறந்து போனவர்களை நம்பித்தானே
நடக்கிறது இந்த ஏமாற்று!