Monday, April 13, 2009

தமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக

நானாவது ஓநாய் ஆனால் நீ காட்டுக்குள் போனால் அங்கு உன்னை சிங்கம் விழுங்கி விடும், என்னிடமே சாகிறாயா அல்லது சிங்கத்திடம் போய் சாகிறாயா கேட்பது. சிங்கம் ரொம்ப பெரிசு, பார்த்தாலே பயமா இருக்கும். ஒழுங்காக என்னாலே செத்து விடு என்பது போல் உள்ளது இந்த கொலைகார கூட்டணிகளின் பேச்சு.

சரி கொலைகார கூட்டணியே அந்த காட்டுல சிங்கமே முன்னாடி இருந்தது இப்பொது அது வந்தால் பார்த்து கொள்ளலாம் அப்படின்னா, இல்லை இல்லை அது வரும் என்னிடமே வந்து உயிரை விடு என்பது போல் பயம் காட்டுகிறார்கள். உன்னிடம் இருந்தால் கண்டிப்பாக செத்து விடுவோம் ஆனால் சிங்கம் திருந்தியது போல் அங்கு சென்றால் ஒருவேளை மாறியிருந்தால் அதுதான் எங்களுக்குள்ள ஒரே மாற்று வழி இன்று உன்னிடம் வந்து மாட்டுவதல்ல.

இந்த கூட்டணி இப்படி ஒரு பயமுறுத்தலில் இறங்கியுள்ளது, ஜெ வந்தால் என்னவாகும் என்று, தான் ஏதாவது நல்லது பண்ணி அதை வைச்சு ஓட்டு கேட்க தைரியமில்லாத இவர்களை என்ன சொல்வது.

0 Comments: